Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி

 

 

 by : Dhackshala

Rahul-Gandhi.jpg

சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா-சீன எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையின்போது இந்த மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் துப்பாக்கியை வீரர்கள் பயன்படுத்தவில்லை. கற்களை வீசியும் கையில் கிடைத்தவற்றை எடுத்து தாக்கியும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேநரம் இந்தியாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எல்லை மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். சீனாவுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஆயுதங்கள்-இன்றி-இந்திய-வ/

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg

லடாக் மோதலின்போது வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன – ராகுல் காந்தியின் கேள்விக்கு ஜெய்சங்கர் விளக்கம்!

லடாக் மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்துள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீன எல்லையில்  இருதரப்பு படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில்  20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு?  எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜெய்சங்கர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,   ”எல்லையில் பணிபுரியும் இராணுவ வீரர்களிடம் எப்போதும் ஆயுதம் இருக்கும்.

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996இ 2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/லடாக்-மோதலின்போது-வீரர்க/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.