Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதில் விஷம் கொண்ட கொலைகார குரூரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊமை பெண்ணை, பெரும் பணம், நகைக்காக கலியாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்று, பின்னர் மனைவியை, கொலை செய்து வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்யும் திட்டத்தில் ஒரு மனித மிருகம் செய்த வேலை கேரளாவை திடுக்கிட வைத்துள்ளது.

பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் இவரது கணவர் சூரஜ்!!

மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார். திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.. முதல்முறை பெட்ரூமில் பாம்பு கடித்து உத்ரா அலறியபோது, சூரஜ்தான் அந்த பாம்பை பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார்.. இப்போது விசாரணையில், சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என தெரியவந்தது.

உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார்... பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் ஐடியாக்களை பெற்றுக் கொண்டு, அணலி என்ற ஒரு விஷபாம்பை வாங்கி உத்ரா வீட்டுக்கு முதல் முறை சென்றுள்ளார்.. அந்த முயற்சி தோல்வியடைந்ததும், 2வதுமுறையாக 10 ஆயிரம் கொடுத்து கருமூர்க்கன் என்ற இன்னொரு விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றுள்ளார்.

உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது... படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. பாம்பு கடிப்பதையும், உத்ரா துடிப்பதையும் பார்த்து கொண்டே நின்றிருக்கிறார் சூரஜ்... கொடிய வகை பாம்பு என்பதால், அதன் வலியும் மிக கடுமையாக இருந்திருக்கிறது.. துடிதுடித்து உத்ரா இறப்பதையும் பார்த்து கொண்டே நின்ற சூரஜ், அந்த ரூமிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துள்ளார். 8.30 மணிக்கெல்லாம் பாம்பை கடிக்க செய்துள்ளார்.. ஆனால் விடிய விடிய சடலம் பக்கத்திலேயே கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.. போகும்போது பாம்பு கொண்டு வந்த பாட்டிலை வெளியே வீசிவிட்டு போயிருக்கிறார்..இப்படி ஒரு கொலையை நாடே பார்த்தது இல்லை.. உத்ராவை கடித்த பாம்புக்கும் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது. உத்ரா கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகிவில்லை. சூரஜை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்முறை உத்ரா பிழைத்து வந்ததுமே 2-வது முறை அவர் பிழைத்து விடக்கூடாது என்பதில் சூரஜ் உறுதியாக இருந்திருக்கிறார்..

அதனால் அன்றைய இரவு பாயாசம் தந்திருக்கிறார்.. ஆப்பிள் ஜூஸும் தந்திருக்கிறார்.. இவைகள் இரண்டிலுமே தூக்கமாத்திரையை கலந்து தந்திருக்கிறார் சூரஜ்... இதை குடித்ததுமே உத்ரா தூங்கிவிட்டார். அதன்பிறகுதான் பாம்பை கடிக்க வைத்தாராம் சூரஜ்.. அவர் நினைத்ததுபோலவே உத்ராவால் சத்தம் போட முடியவில்லை. ஒரு ஆற்றிங்கல்லில் வைத்து சுரேஷ் அந்த பாம்பை பிடித்ததாக கூறுகிறார்...

அதுமட்டுமல்ல, அங்கிருந்த பாம்பின் 10 முட்டைகளையும் அவரே எடுத்து சென்று, வீட்டில் அடைகாத்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளாராம்.. இப்போது அந்த குஞ்சுகளை அவரே ரகசியமாக வளர்த்து வருகிறாரா? இல்லை வெளியே கொண்டு போய் விட்டு விட்டு வந்துவிட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.. பாவம் உத்ரா...

பாம்பைவிட கொடியவர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

அதெப்படி இரண்டாவது முறையாக, மேல்மாடியில், ஏ/சி ரூமில் பாம்பு நுழையும் என்று உத்திராவின் தாய் தந்தையர்களுக்கு வந்த சந்தேகமே இன்று அவரை கம்பி என்ன வைத்துள்ளது.

சீதனமாக வந்த பெரும் வசதியில் நன்றாக வாழ்ந்து கொண்டே, உடல் கொழுப்பு கூடி இந்த வேலையினை செய்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/kerala-snakebite-husband-confessed-to-kollam-police-388752.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உதை விட்டுட்டு மடலின் மக்கேனுக்கு என்ன நடந்தது என்று எழுதுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2020 at 05:52, Nathamuni said:

ஒரு ஊமை பெண்ணை, பெரும் பணம், நகைக்காக கலியாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்று, பின்னர் மனைவியை, கொலை செய்து வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்யும் திட்டத்தில் ஒரு மனித மிருகம் செய்த வேலை கேரளாவை திடுக்கிட வைத்துள்ளது.

பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் இவரது கணவர் சூரஜ்!!

மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார். திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.. முதல்முறை பெட்ரூமில் பாம்பு கடித்து உத்ரா அலறியபோது, சூரஜ்தான் அந்த பாம்பை பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார்.. இப்போது விசாரணையில், சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என தெரியவந்தது.

உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார்... பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் ஐடியாக்களை பெற்றுக் கொண்டு, அணலி என்ற ஒரு விஷபாம்பை வாங்கி உத்ரா வீட்டுக்கு முதல் முறை சென்றுள்ளார்.. அந்த முயற்சி தோல்வியடைந்ததும், 2வதுமுறையாக 10 ஆயிரம் கொடுத்து கருமூர்க்கன் என்ற இன்னொரு விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றுள்ளார்.

உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது... படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. பாம்பு கடிப்பதையும், உத்ரா துடிப்பதையும் பார்த்து கொண்டே நின்றிருக்கிறார் சூரஜ்... கொடிய வகை பாம்பு என்பதால், அதன் வலியும் மிக கடுமையாக இருந்திருக்கிறது.. துடிதுடித்து உத்ரா இறப்பதையும் பார்த்து கொண்டே நின்ற சூரஜ், அந்த ரூமிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துள்ளார். 8.30 மணிக்கெல்லாம் பாம்பை கடிக்க செய்துள்ளார்.. ஆனால் விடிய விடிய சடலம் பக்கத்திலேயே கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.. போகும்போது பாம்பு கொண்டு வந்த பாட்டிலை வெளியே வீசிவிட்டு போயிருக்கிறார்..இப்படி ஒரு கொலையை நாடே பார்த்தது இல்லை.. உத்ராவை கடித்த பாம்புக்கும் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது. உத்ரா கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகிவில்லை. சூரஜை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்முறை உத்ரா பிழைத்து வந்ததுமே 2-வது முறை அவர் பிழைத்து விடக்கூடாது என்பதில் சூரஜ் உறுதியாக இருந்திருக்கிறார்..

அதனால் அன்றைய இரவு பாயாசம் தந்திருக்கிறார்.. ஆப்பிள் ஜூஸும் தந்திருக்கிறார்.. இவைகள் இரண்டிலுமே தூக்கமாத்திரையை கலந்து தந்திருக்கிறார் சூரஜ்... இதை குடித்ததுமே உத்ரா தூங்கிவிட்டார். அதன்பிறகுதான் பாம்பை கடிக்க வைத்தாராம் சூரஜ்.. அவர் நினைத்ததுபோலவே உத்ராவால் சத்தம் போட முடியவில்லை. ஒரு ஆற்றிங்கல்லில் வைத்து சுரேஷ் அந்த பாம்பை பிடித்ததாக கூறுகிறார்...

அதுமட்டுமல்ல, அங்கிருந்த பாம்பின் 10 முட்டைகளையும் அவரே எடுத்து சென்று, வீட்டில் அடைகாத்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளாராம்.. இப்போது அந்த குஞ்சுகளை அவரே ரகசியமாக வளர்த்து வருகிறாரா? இல்லை வெளியே கொண்டு போய் விட்டு விட்டு வந்துவிட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.. பாவம் உத்ரா...

பாம்பைவிட கொடியவர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

அதெப்படி இரண்டாவது முறையாக, மேல்மாடியில், ஏ/சி ரூமில் பாம்பு நுழையும் என்று உத்திராவின் தாய் தந்தையர்களுக்கு வந்த சந்தேகமே இன்று அவரை கம்பி என்ன வைத்துள்ளது.

சீதனமாக வந்த பெரும் வசதியில் நன்றாக வாழ்ந்து கொண்டே, உடல் கொழுப்பு கூடி இந்த வேலையினை செய்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/kerala-snakebite-husband-confessed-to-kollam-police-388752.html

ஒரு பாபாட்டியிடம் பாம்பை வாங்கியதாக வாசித்தேன் 
இவருடைய செல்போன் கால் ரெகார்டை எடுத்து ... இவர் யாருடனோ 
அடிக்கடி பேசி இருப்பத்தை பார்த்து அங்கு சென்றால் அவர் ஒரு பாம்பாட்டி என்றும் 
அவரை விசாரணை செய்த பொது இவர் தன்னிடம் அவர் பாம்பு வாங்கியதையும் 
போலீசார் அறிந்ததாக வாசித்தேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.