Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தலை தமிழ் மக்கள் தமது கருவியாக பயன்படுத்த வேண்டும் – உருத்திரகுமாரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை தமிழ் மக்கள் தமது கருவியாக பயன்படுத்த வேண்டும் – உருத்திரகுமாரன்

Uruthurakumaran-720x450-1.jpg?189db0&189db0

 

இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

‘தேர்தல் தொடர்பாக கொள்கை முடிவுகளே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளாக எடுத்து வருகின்றது. அந்தவகையில் எம்மைப் பொறுத்தவரை தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை.

மேலும் இலங்கையின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பத்து வீதத்துக்கு குறைவானவர்களே தமிழர்கள் உள்ளனர். இதனால் நாடாளுமன்றத்துக்கு சென்று எதனையும் சாதிக்க ஒருபோதும் முடியாது.

கடந்த காலங்களை பார்ப்போமேயானால், 1972ம் ஆண்டு அரசியலைமைப்பு சட்டம் கூட தமிழ்மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது. அதேபோன்று 1978 ம் ஆண்டிலும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது.

அத்துடன் ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த வல்லுனர் குழுவின் அறிக்கையும் கூட, தமிழ் மக்கள் தமது இன அடையாளத்தின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகப் புறந்தள்ளப்பட்டு வந்தமையே ஆகும்.

இவ்வாறு இனப்பிரச்சனையின் அடிப்படையாக இருந்துவந்த காரணத்தினால், இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் புறந்தள்ளல் வகையிலான கொள்கைகள் மிகவும் ஆபத்தானவை என இலங்கை அரசியல் நீரோடையில் தமிழர்களின் பங்களிப்புக்கான காத்திரமான இடமில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இலங்கை ஒரு பௌத்த இனவாத இறுகிய இனவாத கட்டமைப்பாகும். அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் வெளியே இல்லை. இதன் காரணமாகத்தான் ஆயுதப் போராட்டமே தொடங்கியது. அதனால்தான் நிகழ்வுபூர்வமான ஒர் அரசினை நிறுவினோம்.

எனினும் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களை நாம் பயன்படுத்த வேண்டும். எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அதனை ஒரு கருவியாக கையாளவேண்டும்.

இந்த தேர்தல்களில் பங்கெடுக்கின்ற தமிழர்கள், தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக இருக்க வேண்டும். மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமையினைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.’ – என்றார்.

 

https://newuthayan.com/தேர்தலை-தமிழ்-மக்கள்-தமத/

ஐயோ கடவுளே,  உருத்திரகுமாரனை வாங்கு வாங்கென்று வாங்கப்போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.