Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு

Featured Replies

இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு

வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும், இந்தியாவிடமிருந்து இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லையெனில் வேறு நாடுகளிடம் இந்தக் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் விடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  • தொடங்கியவர்

யாழ். நகரை மீட்க புலிகள் பெரும் திட்டம்: இந்தியாவிடம் ஏவுகணை கேட்கும் இலங்கை

யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால், பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசுக்கும், படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள், தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால், இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து மீட்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த யாழ்ப்பாணம் 2002ல் அரசுப் படைகள் வசம் வந்தது.

தற்போது யாழ் தீபகற்பத்தின் பெரும்பகுதியை அரசுப் படைகள் வைத்துள்ளன. அங்கு குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் பிடியில் சிக்கி தமிழர்கள் சொல்லொணா அவதிகளை அனுபவித்து வருகின்றனர்.

செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசு தமிழர்களை அங்கிருந்து வெளியேறவும் விடாமல் கொடுமைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் விமான பலத்துடன் முன்பை விட வலுவாக திகழும் விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணம் பகுதியை ராணுவத்திடமிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான திட்டம் பிரபாகரன் தலைமையில் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை மீட்கும் இறுதிப் போராக இதை திட்டமிட்டுள்ள புலிகள், இதற்காக சில உயிரிழப்புகளை தமிழர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளனர். உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் யாழ்ப்பாணத்தை மீட்பதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை பிரபாகரனும் அங்கீகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

விரைவில் யாழ் தீபகற்பத்தை மீட்க புலிகள் பெரும் போரில் குதிக்கக் கூடும் என்று கூறப்படுவதால் இலங்கையில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை சமாளிக்க, விமானம் தாக்கும் ஏவுகணைகளை தர வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்க்ஷேவின் தம்பி கோத்தபயா ராஜபக்ஷே டெல்லி வந்துள்ளார்.

அவரது பயண விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்துள்ள அவர் தாழ்வான உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறியும் ரேடார்கள், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கை அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர், ராணுவ, கடற்படை, விமானப்படைத் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோரை படு ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்ஷே.

இப்பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒரு வேளை இந்தியா இந்த உதவிகளைச் செய்ய மறுத்தால் பிற நாடுகளிடமிருந்து இவற்றைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனியும் இந்தியாவை நம்பி இருக்கப் போவதில்லை. இந்த உதவிகளை இந்தியா செய்யாவிட்டால் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியை நாட இலங்கை தயங்காது என்றும் இந்தியத் தரப்பிடம் கோத்தபயா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்தி மூலம்: தற்ஸ் தமிழ்

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இந்த நிலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து மீட்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த யாழ்ப்பாணம் 2002ல் அரசுப் படைகள் வசம் வந்தது.

//

அப்படியா?

Edited by nallavan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் இராணுவத் தளபாட உதவி புதுடில்லியில் கோத்தபாய கோரிக்கை ஒரு தொகுதி பொருள்கள் விமானத்தில் வந்தனவாம்

விடுதலைப் புலி களினால் ஏற்பட் டுள்ள புதிய அச்சு றுத்தல்களைச் சமா ளிப்பதற்காக இலங் கைக்கு இராணு வத் தளபாட உதவிகளை வழங்கும்படி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செய லாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ நேரடியாகப் புது டில்லிக்குச் சென்று இந்திய அரசைக் கோரி யிருக்கின்றார். பாக்கு நீரிணையில் சர்வ தேசக் கடல் எல்லைப்புறத்தில் இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்து மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியிருக் கின்றார்.

அவரது கோரிக்கைக்கு அமைய சில இராணுவத் தளபாடங்கள் அடங்கிய இந்திய விமானம் ஒன்று கொழும்புக்கு இரக சியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்து அப் பொருள்களை வழங்கிவிட்டுச் சென்றிருக்கின்றது.

புதுடில்லி செய்தி நிறுவனங்கள் இவ் விவகாரம் குறித்துப் பரபரப்புத் தகவல் களை வெளியிட்டிருக்கின்றன.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அங்கு, இந்தியப் பிரதம ரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே.நாராயணன், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா, இராணு வத் தளபதி ஜெனரல் ஜே.ஜே.சிங் மற்றும் மூத்த பாதுகாப்புஅதிகாரிகளுடன் கடந்த மூன்று தினங்களாகப் பேச்சு நடத்திய பின்னர் நேற்றுக் காலை நாடு திரும்பி னார்.

புதுடில்லியில் இந்திய உயர் தரப்போடு தாம் நடத்திய பேச்சுகளின் போது, விடுதலைப் புலிகளால் தற்போது இலங்கை அரசுப்படைகளுக்குப் புதிதாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும், அவற்றைச் சமா ளிப்பதற்குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள், இராணுவ உதவிகள் மற்றும் பாக்கு நீரி ணையில் இந்திய இலங்கைக் கடற் படை யின் கூட்டு ரோந்து ஆகியவை குறித்தும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் விரிவாகப் பிரஸ்தாபித்தார்.

இந்தியா, ஏற்கனவே இலங்கைக்குப் பரந்த அளவிலான இராணுவத் தளபாட உதவிகளை வழங்கி வருகின்றது. தாழப் பறக்கும் விமானங்களைக் கண்டு பிடிப் பதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இரண்டு "ரடார்' கருவிகளுக்கு மேலதிகமாக தற் போது புதிதாக வழங்கப்பட்ட இரு "ரடார்' கருவிகளும் அவற்றில் அடங்கும்.

சில தினங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படையின் ஏ. என். 32 ரக விமா னம், இரகசியப் பயணம் ஒன்றைக் கொழும் புக்கு மேற்கொண்டு சில இராணுவத் தளபாடங்களை வழங்கிவிட்டுத் திரும்பி யிருக்கின்றது.

இந்தியாவின் கண்காணிப்பு

வலைப்பின்னல்

இலங்கை விவகாரத்துக்குள் பாகிஸ் தான் அதிகளவில் தலையை நீட்டிக்கொள் வதைத் தவிர்க்கச் செய்வதற்காக, இலங் கைக்கான இராணுவத் தளபாட உதவி களை இந்தியா அண்மைக் காலத்தில் அதி கரித்து வந்திருக்கின்றது.

கடந்த பெப்ரவரி நடுப்பகுதியில் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட படகு ஒன்று தமிழ்நாடு கரையோரத்தில் கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து, பாக்கு நீரிணையிலும், மன்னார் வளைகுடாவிலும் தனது கடற் படையின் ரோந்துச் செயற்பாட்டை"ஒப்ப ரேஷன் டாஷா' என்ற கடற்படை நட வடிக்கைப் பெயரில் இந்தியா தீவிரப் படுத்தியிருக்கின்றது.

கடந்த மார்ச் ஏப்ரலில் இலங்கைப் படை முகாம்கள் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களை அடுத்து இந்தி யப் பாதுகாப்புப் படைகள் தமது எல்லை யோரத்தில் "பல அடுக்கு கண்காணிப்பு மற்றும் ரடார் வலைப்பின்னலை' ஏற் படுத்திக் கொண்டமையும், இந்தியக் கடற் படை, இஸ்ரேல் தயாரிப்பு ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் வான்வழிக் கண் காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத் திக் கொண்டமையும் குறிப்பிடத்தக் கவை.

""இலங்கைக் கடற்படையுடன் கூட்டி ணைவாக ஏற்கனவே ரோந்து நடவடிக் கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அகதிகள் நாட்டுக்குள் நுழைவதைக் கண் காணிப்பதற்கு அப்பால், புலிகள் ஆயுதங் களையும் வெடி மருந்துகளையும் கடத்து வதைத் தடுப்பதும் இதன் நோக்கம். நாடு அல்லாத ஓர் அமைப்பினால் ஏற்படுத்தக் கூடிய விபரீதங்களைத் தவிர்க்கச் செய்வ தற்காகக் கரையோரத்தில் தீவிரக் கண் காணிப்பைப் பேணுவது அவசியமாகின் றது.'' என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கூடுதல் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன, இந்தியாவின் அணு உலைகள் மற்றும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் இந்தியக் கப்பல்கள் போன் றவற்றைக் கூடப் புலிகளின் வான் பிரிவு தாக்கலாம் என்று அண்மையில் பிரகட னப்படுத்தியிருந்தமையும் குறிப்பி டத்தக்கது.

இதற்கிடையில்

""அரச சார்பற்ற தரப்புகளால் எமது அயல் பிரதேசங்களில் அதிகரித்துள்ள பல் பரிமாண அச்சுறுத்தல்களும், அத்தகைய நேர்வுகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு களும்'' என்ற தலைப்பில் இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகள் பங்கு கொண்டு கருத்துப் பரிமாறி ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கடந்த செவ்வா யன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கி யிருக்கின்றது.

இவ்வாறு புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. (உ)

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில இந்தியா. இலங்கைக்கு ஆயூதம் குடுக்க மாட்டுது என்று சொன்னாலும், மறைவாக ஆயூதங்கள் குடுத்துக் கொண்டேயிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.