Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் ; தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் ; தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம்

Post Views: 18
June 21, 2020

கனகராசா சரவணன்

லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து சிதறிய போது அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் என தமிழரசு கட்சியின் செயலாளரும் நாடாளமன்ற வேட்பாளருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார் .

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-0.p

இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு அடி நிலம் கூட சொந்தமில்லை என் ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை கண்டித்து ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசு கட்சியின் செயலாளர் கி. துரைராசசிங்கம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

 

இலங்கைதீவு சிங்கள பௌத்த மக்களுக்குரியது என்றும் இங்கு ஆங்காங்கு தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இது அடையாளமல்ல என்று ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலே நாங்கள் பௌத்த பிக்குகளை மதிக்கின்றோம் என்ற அடிப்படையிலே அவர் சிறந்த கல்விமானாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். ஒரு கல்விமானாக இருக்கின்ற ஒருவர் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டியவராக இருக்க வேண்டும் பௌத்தம் என்பது எவ்வாறு உருவாகியது எவ்வாறு இலங்கைக்கு வந்தது என்பதையெல்லாம் கூட நாங்கள் எங்கள் இளம் மாணவர்களுக்கு கூட கற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

 

ஒரு காலத்திலே சோழ மன்னருடைய விருத்தியின் காரணமாக சோழர்கள் இங்கு படையெடுத்து வந்தது என்பது உண்மைதான் எல்லா நாடுகளுக்கும் படையெடுத்து வந்ததைப் போல இலங்கைக்கும் படையெடுத்து வந்தார்கள். ஆனால் இலங்கையிலே சோழர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் இருந்தார்கள். அவர்கள்; பௌத்தர் களாகவும் ஒரு காலத்திலே இருந்திருக்கின்றார்கள்.

 

மணிமேகலை, சீவகசிந்தாமணி, போன்ற நூல்கள் பௌத்த நூல்களாக இருக்கின்றன பௌத்தத்தை தமிழர்கள் வழிபட்டார்கள் இலக்கியம் உருவாகுவதற்கு அவர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் சிலப்பதிகாரத்திலே பௌத்த துறவிகள் பற்றி கூறப்படுகின்றது ஆகவே தமிழர்கள் ஒரு காலத்திலே பௌத்தத்தை தமது மதமாக கொண்டிருந்தது உண்மை

அந்தடிப்படையில் வடகிழக்கிலே இருக்கின்ற புத்த தொல்லியல் விடயங்கள் ஆதாரங்களை அது தமிழர்களுடைய பௌத்தம் தமிழ் பௌத்தர்களுடைய ஆதாரங்களாக இருக்கின்றதே தவிர இவை எந்த வகையிலும் சிங்கள பௌத்த ஆதாரங்களாக இருக்க முடியாது.

 

வைத்தியர் இந்திரபால தொடக்கம் பல ஆராச்சியாளர்கள் நிரூபித்திருக்கின்றர்கள் கலாநிதி பத்மநாதன் இவைகளை சிறந்த ஆதாரங்களுடன் புத்தகங்களாக வெளியீட்டுள்ளார். ஆகவே உண்மைகளை மூடிமறைப்பதில் இந்த நாடு எந்தவிதமான நன்மையையும் அடையப் போவதில்லை

இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழர்கள் பூர்வீகமானவர்கள் நாங்கள் நாகர்களுடைய பரம்பரையில் வந்தவர்கள் புத்தர் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே நாகர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றது.

 

கதிரவெளியிலே கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாலிகள் இந்தியாவிலே திருநெல்வேலி மாவட்டத்திலே பொன்பெரிப்பிலே இருக்கின்ற முதுமக்கள் தாலிகள் ஒத்தவையென்றும் அந்த திருநெல்வேலி மாவட்டத்திலே இருந்த நாகர்களும் கதிரவெளியிலே இருந்த நாகர்களும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் வரலாறு சொல்லியிக்கின்றது

புத்தர் வருவதற்கு முன்பே எங்களுடைய நாகர் மூதாதைகள் இந்த நாட்டிலே வாழ்ந்தர்கள் அவர்களுடைய பரம்பரையாக நாங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த அடிப்படையில் இன்னும் ஒரு படி மேலே போவாமாயின் புவியியல் ரீதியாக பார்ப்போமாயின் லெமூறியா கண்டம் ஒன்று இருந்தது அதில் ஆதிக்குடிகள் தமிழர்கள்.

இந்த கண்டத்திலே பல்வேறு நாடுகள் இருந்தன அந்த நாடுகள் எல்லாம் கூட்டாட்சி அடிப்படையிலே இருந்தன அந்த நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு பிரிவு இருந்தது. இந்த கண்டம் வெடித்து சிதறிய போது நாடுகள் கண்டங்கள் தீவுகள் ஆக உருவாகியது இதில் ஒரு தீவு தான் இலங்கை அவ்வாறு உருவாகிய இந்த இலங்கைத்தீவு தமிழகத்திலே இருக்கின்ற தாமிரபரணி ஆற்றில் அடுத்து தொடர்சிதான் மன்னாரில் இருந்து தொடங்குகின்ற தம்பபன்னி அல்லது பொம்பரிப்பூ என்று சொல்லப்படுகின்ற இடம்

புத்தளத்திலே இருக்கின்ற பொம்;பரிப்பூ தான் பொன்பரிப்பு பரப்பின் ஆறு அதுதான் தாமிரபரணி தமிழகத்திலே இருக்கின்ற தாமிரபரணியும் புத்தளத்திலே இருக்கின்ற பொம்பரிப்பூவும் ஒன்று இது கடலில் மூழ்கிய காரணமாக றெமேரியா கண்டம் கிளம்பிய போது உருவாகியதீவு இலங்கை. ஈழம் என்பது அந்த கண்டத்தில் இருந்தது என்ற வகையிலே நாங்கள் இந்த நாட்டின் பூர்வீககுடிகள்

கி.பி முன் 547 விஜயன் வந்ததைத் தொடர்ந்தூன் இங்கு ஒரு வேற்று இனம் உருவாகியது விஜயன்; ஆண்டிய இளவரசிகளை திருமணம் செய்ததன் காரணமாகத்தான் சிங்களம் தோன்றியது லாலா நாட்டிலே இருந்து வந்த வடமொழியும் பாண்டிநாட்டிலே இருந்து வந்த தமிழ் மொழியும் சேர்ந்து உருவாகியது தான் சிங்கள மொழி

இதனை பாடப் புத்தகத்தில் கூட படித்திருக்கின்றோம் ஆரியபாடி அப்பனருகினன் அருந்தமிழ்பாடை அன்னை தந்தால் சீரிய இவ்விரு பாடைதன்னை சிங்களபாடை தொன்றானதன்றே என சோமசுந்தர புலவர் பாடியுள்ளார். ஆக தமிழ் மொழியும் ஆரியமொழியும் சேர்ந்து உருவாகியது தான் சிங்களம் அது இங்கு மட்டும்தான் உருவாகியுள்ளது

ஆகவே ஞானசார தேரர் தனது அறிவை இன்னும் கூர்மையாக்கி தீட்டிப்பர்க்க வேண்டும் அவ்வாறு தீட்டிப்பார்க்கும் போது உண்மை விளங்கும் இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள், பறங்கியர் மற்றும் இங்கு வாழும் சிறுபான்மையினருக்கும் உரிய நாடே தவிர சிங்களவர்களுக்கு தனித்துவமான நாடு அல்ல

21 ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இவ்வாறான பொய்யான மாயையான கருத்துக்களை சொல்வது உங்களுடைய அறிதொடர்பான கேள்வியையும் ஜய்யப்பாட்டையும் ஏற்படுத்தக் கூடும் என சொல்லி வைக்க விரும்புகின்றேன்

புத்தர் அமைதியானவர் சாத்வீகமானவர் அவர் யாரையும் வெறுத்து ஒதுக்கியவரல்ல எல்லா மக்களையும் சமமாக பேணுபவர் அவ்வாறு ஒரு மதத்தை பின்பற்றுகின்ற நீங்கள் இல்லாத பொய் உரைகளை சொல்லக்கூடாது அவ்வாறு செல்லுவது நீங்கள் நிதானமிழந்தவர்களாக அடையாளமாக உள்ளார் என்றார்

 

http://thinakkural.lk/article/48336

 

4 hours ago, கிருபன் said:

லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் ; தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம்

தேர்தல் முடிய இந்த உண்மைகள் உங்களுக்கு மறந்து போவது நீண்ட வரலாறு!

எடுபிடியா வாழ்ந்து பழகிவிட்டீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.