Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா மருந்து: பதஞ்சலிக்கு மத்திய அரசு தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா மருந்து: பதஞ்சலிக்கு மத்திய அரசு தடை!

spacer.png

 

கொரோனாவுக்கு ஆயுர்வேத முறையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அது ஆதாரங்களுடன் வெளியிடப்படும் என்றும், பாபா ராம்தேவால் அறியப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆச்சாரிய பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா கிட் எனப்படும் மருந்தை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இதையடுத்து கொரோனா மருந்து தொடர்பான விளம்பரங்களையும், அறிவிப்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு பதஞ்சலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று (ஜூன் 23) மாலை 5.39 மணிக்கு மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“சில நாட்களாகவே பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாவதை ஆயுஷ் அமைச்சகம் அறிந்தது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு வரும் விளம்பரங்கள் Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954 என்ற சட்டத்துக்குக் கட்டுப்பட்டவை என்பது அந்நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனம் சொல்லும் மருந்து என்ன, அதன் கூட்டுத்தன்மை என்ன, கொரோனாவுக்கு எதிரான இந்த மருந்தின் சோதனை எங்கே நடத்தப்பட்டது, இந்திய மருந்து சோதனைகள் பதிவு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டதா, நிறுவன நெறிமுறைகள் குழுவின் அனுமதி பெற்றதா, மருந்தின் சேம்பிள் சைஸ் என்ன, இந்த மருந்து தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளின் தரவு அறிக்கை ஆகியவற்றை விரைவில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சோதனைகள் முடிவுறாதவரை கொரோனாவுக்கு மருந்து என்ற விளம்பரங்களையோ, அறிவிப்புகளையோ பதஞ்சலி நிறுவனம் நிறுத்த வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட உத்தரகண்ட் மாநில உரிமங்கள் வழங்கும் அதிகாரிகளிடம், பதஞ்சலி நிறுவனம் இந்த மருந்து உரிமம் கோரிய ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன” என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

https://minnambalam.com/public/2020/06/23/67/stop-advertise-indian-govt-ask-to-patanjali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.