Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருபரனுக்கு எதிராக ஆஜராக சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருபரனுக்கு எதிராக ஆஜராக சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்பு!

guruparan.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளின் போது, அரச நிறுவனங்களான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் – குருபரனுக்கு எதிராக வாதாடுவதற்குச் சட்டத்தரணிகளை நியமிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளின் போது, அரச நிறுவனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைக் கோருவதும், வழக்குகளின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டவாதிகள் முன்னிலையாவதும் வழக்கமாகும். அதன்படி குருபரனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கில்ம் கடந்த மே 30ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட எதிர் மனுதாரர்கள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா டெமுனி டி சில்வாவின் ஏற்பாட்டில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்த போதிலும், நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள், ஆய்வுகளின் பின்னர் இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் தம்மால் முன்னிலையாக முடியாதிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரு நிறுவனங்களுக்கும் தனித்தனியாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திடீரென எழுந்த இந்த நெருக்கடி நிலையை அடுத்து எதிர்வரும் ஜூன் 30ம் திகதி நடைபெறவுள்ள பரிசீலனைகளின் போது, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், அதன் பேரவை ஆகியவற்றின் சார்பில் முன்னிலையாவதற்கு தனியார் சட்ட உதவியைப் பெற்றுக் கொள்வதென யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விசேட பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள், நீதிமன்றங்களில் வழக்குகளில் முன்னிலை ஆகுவதற்குத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும், தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் குமாரவடிவேல் குருபரன் கடந்த வருடம் டிசெம்பர் 17ம் திகதி சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள், சட்டமா அதிபர் உட்பட 41 பேர் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக மனுவில் இணைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் மாத இறுதியில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுவதற்குத் திகதியிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட கொரோனாப் பெருந்தொற்று முடக்கல் காரணமாக 50 நாள்கள் பிற்போடப்பட்டு கடந்த மே மாதம் 30ம் திகதி பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய, நீதியரசர் முர்டு பெர்னாண்டோ ஆகிய இருவரும் கொண்ட அமர்வு முன் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட எதிர் மனுதாரர்கள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா டெமுனி டி சில்வாவின் ஏற்பாட்டில் அரச சட்டவாதி முன்னிலையாகியிருந்தார்.

மனுதாரர் தன்னுடைய கட்சிக்காரர்கள் சார்பில் ஏற்கனவே நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்குக்குகளில் முன்னிலையாவதற்கு அனுமதியளித்து கட்டளையிடப்படவேண்டும் என்று நகர்த்தல் பத்திரம் ஊடாகக் கோரப்பட்டது. இந்த மனுவில் இடைக்காலக் கட்டளையாக்கும் விடயத்தை விவாவத்துக்கு எடுக்க பிரதம நீதியரசரால் அரச தரப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு தவணை வழங்குமாறு அரச தரப்பால் அன்றைய தினம் கோரப்பட்டது. அதற்கமைய மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் எதிர்வரும் ஜூன் 30ம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/குருபரனினுக்கு-எதிராக-ஆஜ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.