Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளிடம் வான்வெளி படை இந்தியா விரும்பவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் வான்வெளி படை இந்தியா விரும்பவில்லை

பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

சென்னை, மே 31-

விடுதலைப்புலிகள் வான்வெளி தாக்குதலுக்குரிய சக்தியை பெற்றிருப்பதை இந்தியா விரும்பவில்லை என்று பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறினார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை செய்வதற்காக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று சென்னை வந்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழ்நிலைகளை பற்றியும், கப்பற்படையை பலப்படுத்துவது குறித்தும் பேசினோம். தூத்துக்குடி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் கடல் பகுதி பாதுகாப்பை அதிகப்படுத்துவது பற்றியும் பேசினோம்.

கப்பற்படையும், கடலோர காவல் படையும் ஒரே உத்தரவின்கீழ் செயல்பட வேண்டும் என்பது நல்ல யோசனை. இதுபற்றி கப்பற் படை உயரதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும். இலங்கை, இந்திய கடற்படைகள் இணைந்து கூட்டு ரோந்து செல்வது சாத்தியமில்லை. ஆனால், ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

மீன் இருக்கும் பக்கம்தான் மீனவர்கள் செல்வார்கள். எனவே, அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்று இலங்கை கடற்படையிடம் கூறப்பட்டுள்ளது. அவர்களும் ஓரளவுக்கு அதை கடைபிடிக்கின்றனர். மீனவர்கள் எல்லை தாண்டி போவதை தடுக்க முடியாது. அப்படி அவர்கள் போகக்கூடாது என்று எதிர்பார்க்க முடியாது.

இலங்கை மற்றும் இந்தியா இடையே மீன் பிடிப்பது தொடர்பான ஒப்பந்தம் போடுவது என்னுடைய அதிகார எல்லைக்குள் வரவில்லை. நல்ல யோசனைதான். இதுபற்றி கருத்து கூறும் நிலையில் நான் இல்லை.

இலங்கைக்கு எது தேவை என்றாலும் இந்தியாவைத்தான் நாட வேண்டும். ஆசிய கண்டத்தில் இந்தியாதான் பெரிய சக்தி. இதில் சந்தேகம் இல்லை. ஆயுத உதவி கேட்டு பாகிஸ்தானையோ, சீனாவையோ நாட முடியாது. அப்படி நாடுவதை இந்தியா விரும்பவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. இது ஓரளவுக்கு நிரூபணமாகி விட்டது. விடுதலைப்புலிகள் வான்வெளி தாக்குதலுக்குரிய சக்தியை பெற்றிருப்பதை இந்தியா விரும்பவில்லை. அதே நேரத்தில் இலங்கைக்கு, தாக்குதலுக்குரிய எந்த ஆயுதங்களையும் இந்தியா கொடுக்கவில்லை.

பாதுகாப்புக்குரிய ரேடார் சாதனங்களை மட்டுமே கொடுத்துள்ளோம். இதற்கு ராமதாஸ், வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு, நான் ஒன்றும் சொல்ல முடியாது. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் உயரதிகாரி நிக்கோலஸ் பர்ன்ஸ் இன்று டில்லி வருகிறார். அவருடன் இன்றோ அல்லது நாளையோ இந்தியா - அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிப்பேன்.

இவ்வாறு நாராயணன் கூறினார்.

dinakaran.........

எங்களுடைய தமிழ்நாட்டு சகோதரங்கள் எப்படி இதனை எதிர்கொள்கிறார்கள் என்பதனை பார்ப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் உடைய நாடகம் நடத்த படுகின்போதே தெரியும் அடுத்த காட்சி இதுவாக தான் இருக்கும் என்று..அருமையான ஒரு நாடகமட அருமையான காட்சிகள்...ஏதோ நடத்தட்டும் கருநாநிதியும் இந்த நாடகத்தில் அருமையான பங்கு வகிக்கி;ன்றார்...

பா.மா.கா. ம.தி.மு கா கட்சிகள் எதிர்புதெரிவித்தால் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூற கூறி இருக்கின்றார்..நாராயணன்..ஒன்ற

மீனவர்கள் உடைய நாடகம் நடத்த படுகின்போதே தெரியும் அடுத்த காட்சி இதுவாக தான் இருக்கும் என்று..அருமையான ஒரு நாடகமட அருமையான காட்சிகள்...ஏதோ நடத்தட்டும் கருநாநிதியும் இந்த நாடகத்தில் அருமையான பங்கு வகிக்கி;ன்றார்...

பா.மா.கா. ம.தி.மு கா கட்சிகள் எதிர்புதெரிவித்தால் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூற கூறி இருக்கின்றார்..நாராயணன்..ஒன்ற

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொடர்ந்து கூறிவரும் ஒரு கருத்து, அதாவது இங்கு ஒரு பெரிய நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.

இதில் முக்கிய நடிகர்கள் யார் யார் தெரியுமா?

இந்த நாராயணன் ஜயாவின்ரை பிரச்சினையை விடுங்க இவரைப்பற்றி நாம் பெரிசு படுத்தத் தேவையில்லை.

ஆனால் ஒன்றும் தெரியாதமாதிரியும், தனக்குத் தெரியாமல்தான் எல்லாம் நடக்குது என்று ஒரு பெரியவர் வேஷம் போடுகின்றார் பாருங்க, எவ்வளவு பிரமாதம்.

இவர்விடயத்தில் நாம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.