Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...?

 
ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...?
 

தான் வேலைபார்க்கும் அனைத்து இடங்களிலும் தன்னை சுற்றி உள்ள ஆண்கள் மீது பாலியல் புகார் கூறும் பழக்கம் கொண்டவர் ஸ்வப்னா.
பதிவு: ஜூலை 09,  2020 11:25 AM
திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.


அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மணப்பாடில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்த சரித் குமார் என்பவருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருப்பதும், மேலும் அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு சரித் குமார் பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அதன்பிறகு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை மறைத்து, தான் தொடர்ந்து பணிபுரிவதாக தெரிவித்ததாகவும், அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அடிக்கடி தூதரகத்துக்கு பார்சல்கள் வந்தன. அந்த பார்சல்கள் சோதனை செய்யப்படாததை, சரித் குமார், தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்கத்தை பல முறை கடத்தியதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சரித் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த கடத்தலுக்கு தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் என்பவர் மூளையாக செயல்பட்டதும், இவர்கள் இருவரும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஸ்வப்னா சுரே‌‌ஷ் தற்போது தலைமறைவாகி விட்டார்.ஸ்வப்னா சுரேஷ் பாலியல் புகார் கொடுப்பதில் வல்லவர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான ஸ்வப்னா,தனது பள்ளிப் படிப்பை அபுதாபியில் முடித்துள்ளார். பின்னர், மகாராஷ்டிராவில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, 2011-ம்ஆண்டு அவர் கேரளா திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிராவல் ஏஜென்ஸியில் ஸ்வப்னா பணியில் சேர்ந்தார். அங்கு தனது சக பணியாளர்கள் பலர் மீது ஏராளமான பாலியல்புகார்களை அவர் அளித்திருக்கிறார். இது அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் வேலையிழப்பதற்கு காரணமாக இருந்துள்ளார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஸ்வப்னா தன் மீது போலி பாலியல் புகாரை அளித்ததாக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஸ்வப்னா பலர் மீது பாலியல் புகார்களை அளித்தது தெரியவந்தது. இதன்பேரில் போலீஸார் அவர்மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பிறகு, ஏர்-இந்தியாவில் இருந்து ராஜினாமா செய்த ஸ்வப்னா, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முக்கியப் பதவியில் அமர்ந்தார். ஆனால், அங்கேயும் அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால் அந்தப் பணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலமாக கேரள அரசின் ஐ.டி. துறையில் ஆபரேஷனல் மேலாளராக அவர் பணியில் இணைந்துள்ளார். அவர் மீதான பழைய வழக்குகளை மறைத்து அவர் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஸ்வப்னா தற்போது இந்த தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கி உள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09112553/kerala-Rs-100-crore-gold-smuggling-Who-is-this-Swapna.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.