Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி

சீனாவின் பெண் தூதர் கையில் நேபாள அரசியல் நெருக்கடி

நேபாளத்தின் அரசியல் நெருக்கடியை தீரவிடாமல் கையாளும் சீனாவின் பெண் தூதர்.
பதிவு: ஜூலை 09,  2020 14:15 PM
காட்மாண்டு

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவர் கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஆனால், கட்சியின் செயல் தலைவராக உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தா தலைமையில் இன்னொரு கோஷ்டி செயல்படுகிறது.


மக்களின் எதிர்பார்ப்புகளை சர்மா ஒலி பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அவரை பதவி விலகுமாறு பிரசாந்தா ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், காலாபனி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் உருவாக்கியதை பிரசாந்தா ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்மா ஒலி கூறி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் சக்திவாய்ந்த 45 உறுப்பினர் நிலைக்குழுவில் பெரும்பாலானோர் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராகவே உள்ளனர். அவர் கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டபோது, பிரச்சினை மேலும் தீவிரமானது.

சர்மா ஒலியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கம்யூனிஸ்டு கட்சி நிலைக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகளை தீர்க்க தலைமைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கும்வகையில், இக்கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் அது கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடததப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை சந்திக்க திட்டமிடப்பட்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவின் கூட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இதனால்  பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் பிரசாந்தா தலைமையிலான இரு அணிகளின் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை இது மங்கச் செய்து உள்ளது. 

கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர்களாக இருக்கும் பிரதமர் ஓலி மற்றும் பிரச்சந்தா ஆகியோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தித்து பேசினர். அப்போது  ஓலி, தனது கட்சி பதவியை அல்லது பிரதமர் பதவியை கைவிட மறுத்துவிட்டார்.

இரண்டு மணி நேர சந்திப்பின் முடிவில் இரு தலைவர்களும் புதன்கிழமை நிலைக்குழு கூட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொண்டனர். 44 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவை எதிர்கொள்ள பிரதமர் ஓலி தயாராக இருக்கிறார்  என்விளக்கம் அளிக்கப்பட்டது. நிலைக்குழு உறுப்பினர்களின் கிட்டத்தட்ட 30 பேர் அவர் பதவி விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

பிரதமர் ஓலிக்கு எதிராக பெரும்பான்மையான உறுப்பினர்களுடன் கட்சியின் நிலைக்குழுவின் கூட்டம் நாளை கூட திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற  தலைவர்கள் இருவரின் கையொப்பங்களும் தேவை.

தீர்மானம் நிலைக்குழு வழியாக மத்திய குழுவுக்கு செல்கிறது, அங்கு பிரதமர் ஓலி ஆதரவாளர்கள் குறைவாகவே உள்ளனர்.

சீனாவின் அதிகார நாடகம் மற்றும் பிரதமர் ஓலியின் அரசியல் அபிலாஷைகள் காரணமாக, நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தொடருகிறது. 

நேபாளத்தில் அரசியல் நெருக்கடி தொடர்ந்து வருகிறது. பிரதமர் கே.பி. சர்மா ஓலி கொரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டில் சுகாதார அவசரநிலை அமல்படுத்தப்படுவது குறித்து ஜனாதிபதி ப்பி.டி.பண்டாரியுடன் விவாதித்தார். ஆனால் சுகாதார அவசரகால அறிவிப்புக்கு அவரது சொந்த கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலையை உருவாக்கி உள்ளது.

ஆதாரங்களின்படி, ஜனாதிபதி பண்டாரிக்கு சுகாதார அவசர நிலையை கொண்டுவருதில் உடன்பாடில்லை. அதற்கு பதிலாக தலைவர்களிடையேயான அரசியல் வேறுபாடுகள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமரிடம் கேட்டார். சக்திவாய்ந்த நேபாள இராணுவமும் சுகாதார அவசரநிலைக்கு ராணுவத்தை நிறுத்துவதற்கு ஆதரவாக இல்லை.

நேபாள அரசியல்  விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்கையில், நெருப்பிற்கு எரிபொருளைச் சேர்ப்பது நேபாளத்திற்கான சீனத் தூதர் ஹூ யான்கி என்பவர், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய அழுத்தம் கொடுக்கிறார். 

ஹூவுடனான ஒரு சந்திப்பில் மூத்த என்சிபி தலைவர்களில் ஒருவர் அவரிடம் பிரதமர் ஓலி இல்லாமல் கூட நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கும் என்பதை அவருக்கு  மிகத் தெளிவுபடுத்தி உள்ளார்.

நேபாளத்தில் தூதர் ஹூவின் நடவடிக்கைகள், தூதரக செயல்பாட்டிற்கு அப்பாற்பட்டவை, நேபாளத்தில் சீன ஊடுருவலின் ஆழத்தை தெளிவாகக் காண்பித்தன. இது நேபாள ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பின.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/09141549/In-Nepals-political-crisis-Chinese-envoy-holds-all.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் தற்போது இருக்கும், சீனப் பெண் தூதுவர்,
முன்பு பாகிஸ்தானில்... தூதுவராக இருந்தவராம்.

இந்தியாவுக்கு... நேபாளத்தின் மூலம், அலுப்பு கொடுக்க...
சில மாதங்களுக்கு முன்பு தான்... நேபாளத்திற்கு,  அவரை சீனா அனுப்பி வைத்ததாம். 

இப்படியான விடயங்களில், இவர் திறமைசாலி என்று சொல்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.