Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

amitabh-bachchan-1580900029-960x540.jpg?189db0&189db0

 

இந்திய பிரபல நடிகர், ஹிந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இன்று (11) சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அது குறித்து டுவிட்டரில் டடுவிட் செய்துள்ள அமிதாப், “நான் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பம் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை இடம்பெறுகிறது.

என்னோடு கடந்த பத்து நாட்களுக்குள் தொடர்பிலிருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து காெள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” – என்றுள்ளார்.

Screenshot_20200711-230650-1.jpg?189db0&

https://newuthayan.com/இந்திய-நடிகர்-அமிதாப்-பச/

 

அபிசேக் பச்சனுக்கும் கொரோனா!

912746-abhishek-bachchan-960x540.jpg?189db0&189db0

 

ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகனான நடிகர் அபிசேக் பச்சனுக்கும் இன்று (11) சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/அபிசேக்-பச்சனுக்கும்-கொ/

  • கருத்துக்கள உறவுகள்

Amitabh-Bachchan-son-Abhishek-test-positive-for-COVID-19-both-admitted-to-Mumbai-hospital.jpg

பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமிதாப் பச்சனுக்கு 77 வயதான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுகுறித்து அமிதாப் பச்சன் ருவிற்றரில் தெரிவிக்கையில், “கொவிட்-19 பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எனது குடும்பத்தினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/பிரபல-பொலிவூட்-நடிகர்-அம/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
 
இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

புனே,

தமிழில் வி.ஐ.பி. என்ற படத்தில் நடித்தவர் நடிகர் அனுபம் கெர்.  இந்த படத்தில் நடிகை சிம்ரனின் தந்தையாக நடித்துள்ளார்.  இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அமைப்பின் முன்னாள் தலைவரான இவர், இந்தி திரையுலகில் பிரபலம் வாய்ந்தவர்.  பல்வேறு குணசித்ர வேடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.


இவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனது தாயார் துலாரிக்கு லேசான கொரோனா பாதிப்பு காணப்பட்டது.  இதனால், அவரை நாங்கள் கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் மிக கவனமுடன் இருந்தபொழுதும், அவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவர்கள் வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி கொண்டுள்ளனர்.

இதேபோன்று, எனக்கும் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/12143639/Coroner-hits-4-in-Hindi-actor-Anupam-Khers-family.vpf

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

 

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூலை 12,  2020 15:32 PM
புனே,

இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று  மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.

அவர்கள் குணமடைந்து திரும்ப வேண்டும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வேண்டி கொண்டுள்ளனர்.   நடிகர் ரஜினி காந்த் அமிதாப்பச்சனை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்சினைகளை கடந்து விடுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், அமிதாப் பச்சனின் மருமகள் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தி உள்ளார்

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/12153231/Actress-Aishwarya-Rai-daughter-Arathya-gets-Corona.vpf

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாமனார், கணவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா: 8 வயது மகளுக்கும் தொற்று உறுதி ஆனது

மாமனார், கணவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா: 8 வயது மகளுக்கும் தொற்று உறுதி ஆனது

 

மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது 8 வயது மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடிகை ரேகாவின் பங்களாவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திப்பட உலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பதிவு: ஜூலை 13,  2020 05:45 AM
மும்பை, 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த மும்பை பங்களா வீட்டு வாசலில் மாநகராட்சி சார்பில் பேனர் தொங்கவிடப்பட்டு இருப்பதையும், மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததையும் படத்தில் காணலாம்.

கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவுடன் உலகம் போராடிக்கொண்டு இருக்கிறது.

இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்த நோய்க்கிருமியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்த்தொற்று அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 8½ லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது.

இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி இருந்தார்.

அடுத்த சில மணி நேரத்தில் அமிதாப் பச்சனின் மகனும், பிரபல நடிகருமான 44 வயது அபிஷேக் பச்சனும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்டார். தனக்கும், தனது தந்தைக்கும் நோய்த் தொற்றின் தாக்கம் லேசாக இருப்பதாகவும், அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் அதில் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் இருவரும் மும்பை வில்லேபார்லேயில் உள்ள நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து நானாவதி தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர் அப்துல் சமத் அன்சாரி கூறுகையில், “தந்தை- மகன் இருவரும் தாங்கள் நன்றாக இருப்பதை உணர்கிறார்கள். நன்றாக தூங்கினார்கள். காலையில் சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அவர்களது உடல் நிலை சீராக உள்ளது” என்றார்.

பல்வேறு உடல் உபாதைகளால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக அமிதாப் பச்சன் ஏற்கனவே சில தடவை கூறி இருக்கிறார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை அறிந்து அவரது ரசிகர்களை கலக்கம் அடைந்து உள்ளனர்.

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மனைவி நடிகை ஜெயாபச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும், முன்னாள் உலக அழகியுமான 46 வயது ஐஸ்வர்யா ராய், அவரது 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஜெயாபச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருப்பதாகவும் மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று மாலை தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்றுக்கு ஆளாகாத ஜெயா பச்சனும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. 2-வது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுவதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டு உள்ள நானாவதி ஆஸ்பத்திரி முன்பு நேற்று காலை முதலே ரசிகர்கள் திரள தொடங்கினர். சாலையில் அவர்கள் கூடி நின்றதால், கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மும்பை ஜூகு பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா முன்பும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அந்த பங்களாவிலும், அமிதாப்பச்சனின் அலுவலகத்திலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். அத்துடன் அந்த பங்களா ‘சீல்‘ வைக்கப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பு பேனரும் அங்கு வைக்கப்பட்டது. இதுதவிர மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் மேலும் பங்களாக்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13033331/Corona-to-Aishwarya-Rai-following-Husbanad-and-fatherinlaw.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்: ரசிகர்கள் கலக்கம்!

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலிவுட்டின் மெகா ஸ்டார் எனப் போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஜூலை 11ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அமிதாப் பச்சனின் வயதைக் கருத்தில் கொண்டும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதாலும் அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருந்த வேலையாட்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் நடிகர் அபிதாப் பச்சனின் மருமகளும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதே நேரத்தில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது. அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 

பெரிய அளவிலான உடல்நலக் குறைவுகள் ஏற்படாததால் கடந்த ஐந்து நாட்களாக அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். இந்த நிலையில் நேற்று(ஜூலை 17) இரவு அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இருவருக்கும் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் மும்பை செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் இவர்களும் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அதிக உடல்நலக்குறைவு ஏற்பட்டதா? ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் நலமாக இருக்கின்றார்களா? என்று ரசிகர்கள் கலக்கமுடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
 

https://minnambalam.com/entertainment/2020/07/18/7/latest-cinema-news-actress-aishwarya-rai-admitted-at-nanavati-hospital

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நடிகர் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
நடிகர் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
 

இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ந்தேதி உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில் அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனினும் ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை என மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தினார்

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆரத்யா ஆகிய இருவரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இருமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/18172427/Actor-Amitabh-and-Abhishek-Bachchan-will-return-home.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.