Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன் 

இலங்கையின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் இந்த வேளையிலே தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து நின்று போட்டி போடுகின்றனர் .தமிழ் மக்களின் பெரும் ஆதரவோடு கடந்த தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் இனப்படுகொலை ரீதியாகவோ தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ரீதியாகவோ தமிழர் தலைமை சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்காது சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் இணக்க அரசியலையும் சமரச அரசியலையும் சரியான ராஜதந்திர அணுகுமுறை இன்றி விட்டுக்கொடுப்புகளுடன்  ஆதரவு வழங்கியதன் மூலம் இம் முறை தேர்தலில் இவர்களின் வாக்குப் பலம் குறைய வாய்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது.

சில பிரதிநிதிகளை இம் முறை இவர்கள் இழப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தெரிகின்றது.இவர்களின் வாக்கு வங்கியின் சரிவோடு ஏனைய பல கட்சிகளில் இருந்து இம் முறை சில பிரதிநிதிகள் தெரிவாவதற்கான வாய்ப்புகளும் இருப்பது போல் தெரிகின்றது.ஆயுதப் போராட்டத்தை விமர்சித்தபடி ஜனநாயகப் பாதையை தெரிவு செய்த இவர்கள் சரியான பாதையில் பயணித்தார்களா என்பது கேள்விக்குறி தான்.பேரம் பேசும் பலத்தை நாம் இழந்திருந்தாலும் ஏதோ ஒரு வழியில் தமிழருக்கான நிரந்தர தீர்வுக்கான பாதையை தமிழர் தலைமை தேடவில்லை.

சிங்கள அரசு தாமாகவே முன் வந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தராது என்பது வரலாறு கற்றுத் தந்த பாடம்.இருந்த போதும் தேர்தலை பகிஸ்கரிப்பதனாலேயோ ஒதுங்கி இருப்பதனாலேயோ எந்தப் பயனும் இல்லை.மாறாக தமிழர் தரப்பு பல தோல்விகளை சந்தித்ததும் வரலாறு கற்றுத்தந்த பாடமாக நினைத்து பிழைகளில் இருந்து சிலவற்றை கற்றுக் கொண்டு நமது வழியை மீண்டும் தேட வேண்டும்.எது எப்படி இருப்பினும் அந்த மக்களே தான் சரியான தீர்ப்பை வழங்க முடியும்.

எந்தத் தேர்தலையும் விட இம் முறைத் தேர்தலில் தான் தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு போட்டி போடுகின்றனர்.இலக்கு ஒன்றாக இருந்த போதிலும் ஏன் இப்படி பிரிவினை என்று தெரியவில்லை.தேசியம் என்பது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால் தமிழர் இலக்கு வெல்லும் வரை முற்போக்கு தேசியமாக இது சிதைந்து போகாது சிங்கள மக்களுக்குள் இருக்கும் ஐக்கியம் போல் தமிழர் தரப்பும் ஒற்றுமைப்பட்டிருக்கவேண்டும்.மாறாக இப்போ சிதைந்துபேய் இருக்கிறது.எல்லா இன மக்களிடமும் இல்லாத பெரும் குறை தமிழனிடம் மட்டும் தான் உண்டு. தமிழன் ஒருத்தனால் தான் தன் இனத்தையே தான் இழிவாகப் பேச முடியும்.இது தமிழரின் பெரும் பலவீனம் தான்.

எதையுமே தானாக எந்த உரிமையும் சிங்கள ஆதிக்கம் எமக்குத் தராது .இணக்க அரசியல் செய்தால் என்ன சமரச அரசியல் செய்தால் என்ன ஒன்றுக்குமே இறங்கி வர மாட்டார்கள்.அதற்காகா நாம் போராடாமல் இருக்க முடியாது.பல ஆண்டுகளாக போராடுகிறான் பாலைதீனியன் ஏதோ ஒரு நம்பிக்கையுடன்.சுய உரிமையை வென்று எடுத்த நாடுகளும் உண்டு.சுய உரிமைக்காய் தொடர்ந்து போராடும் மக்களும் உண்டு.

சிங்கள மக்களோடு சேர்ந்து எமது உரிமையையோடு வாழ விருப்பம் தான் ஆனால் அவர்கள் தான் எம்மை மரத்தில் படரும் கொடி என்கிறார்களே.எமக்கு எந்த பாரம்பரிய நிலமும்  சொந்தம் இல்லை என்கிறார்களே.இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்களே.வரலாறுகளை எல்லாம் மாறுபட்டு திரித்து சொல்கிறார்களே.தமிழர் தலைவர் ஐயா சம்மந்தன் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தாரே இணக்க அரசியலும் செய்தாரே பிரிக்கப் படாத இறைமை மிக்க இலங்கைக்குள் சுயாட்சி அடிப்படையிலான தீர்வொவோடு சேர்ந்து வாழ்கிறோம் என்றாரே.

தமிழர் தீர்வுக்கு அபிவிருத்தி மட்டும் போதும் என்கிறார்களே பழையவற்றையும் இனப்பிரசினையையும் மறந்து விடும்படி சொல்கிறார்களே 13+ க்கு மேல் தீர்வு வழங்குவோம் என்று எமக்கும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் உறுதிமொழி தந்தார்களே தந்தார்களா .உறவுகளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணீரோடு அலைகிறார்களே தமிழ் தாய்மார்.இதற்கு எல்லாம் நீதியை யார் பெற்றுத் தருவார்.

தொடர்ந்தும் நாம் எமது அருகில் இருக்கும் இந்தியாவையே நம்பி வந்தோம் ஆனால் இந்தியாவோ தமது நலன் சார்ந்த வெளி விவகாரக் கொள்கையுடன் இன்று வரை ஈழத்தமிழருக்கான அவர்களின் விருப்பு அடிப்படையில் ஒரு நிரந்தரமான எந்தத் தீர்வையும் பெற்றுத்தரவில்லை.பயங்கரவாததுக்கு எதிரான போர் என்ற இலங்கை அரசின் கவடத்தனமான ராஜதந்திரத்தில் சிக்கி அழிவை சந்தித்த ஈழத்து தமிழருக்கு இந்து சமுத்திரத்தில் பலம் மிக்க நாடக இருக்கும் இந்தியா எதோ ஒரு வழியில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத் தந்திருக்க இவர்களால் நிச்சியமாக முடிந்திருக்கும்.

13ம் திருத்தத் சட்டம் கூடி இப்போ நீர்த்து போகும் அளவுக்கும் இதை அரசியல் அமைப்பில் இருந்து நீக்குவதற்கும் மக்கள் ஆணையை பெற அரசு முயற்சிக்கிறது.தமிழர்களின் அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் எதற்குமே அசையாது இருக்கிறதே சிங்கள ஆதிக்கம்.அப்போ தமிழர் எப்படி இணக்க அரசியல் செய்வது.

சில தேசம் இந்தியாவால் உருவாகியது .அன்று தந்தை செல்வா கேட்ட சமஸ்டீ தீர்வை இந்தியா எமக்கு பெற்றுத்தர இலங்கை அரசுக்குக்கு அன்று அழுத்தம் கொடுத்து உதவியிருந்தால் இப்படி எல்லாம் சிதறி அழிந்து ஈழத்து தமிழன் போய் இருக்க மாட்டான். எம் வேதனைக்கு எம் அருகில் இருக்கும் இந்தியாவும் ஒரு காரணமே.அவர்கள் தந்த ஆயுதத்தையும் நாம் தூக்கி இருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது அதேபோல் எம் சில தோல்விகளுக்கும் பிழைகளுக்கும் நாமம் காரணமாக இருந்திருக்கமாட்டோம்.விட்டு பிழைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சமாதானத்துக்கான பாதையை நேக்கி நாம் மீண்டும் நடக்க வேண்டும்.மீண்டும் இந்திய,சர்வதேசம்,புலம் பெயர் தமிழர் இந்த முக்கோண அரசியல் அழுத்தம் இல்லாமல் தமிழருக்கான ஓர் அரசியல் தீர்வைப் பெறுவது கடினமே.இந்தப் பாதையை இனி வரும் காலங்களில் தமிழர் தலைமை சரியாகக் கையாளவேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் இதிலே எத்தனை பேர் அபிவிருத்தி என்று அரசாங்கத்துடன் சேர்வீர்களோ அமைச்சுப் பதவி எடுப்பீர்களோ அவர்கள் இப்பவே சேரலாம். பாவம்  மக்களின் வாக்கை வேண்டிவிட்டு வாக்குத் தவறாதீர்கள்.உங்களில் சிலர் உங்களை வளர்ப்பவர் எங்களை அல்ல.அதிகாரப் பகிர்வுக்காய் முதலில் உழையுங்கள் அபிவிருத்தியை தொடருங்கள்.அதிகாரம் இல்லாத அபிவிருத்தி எப்பவுமே நிலையாகாது.இது நீதியானதாகவோ மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி ஆக அமையாது அரசியல்வாதிகளும் தனி மனிதர்களும் மக்கள் பணத்தை சுரண்டுவதாகவே அமையும்.அதிகாரப்பகிர்வை மறைப்பதற்காய் அபிவிருத்தியை கையில் எடுக்கும் அரசின் சூழ்ச்சிக்குள் பதவியும் பணமும் வேண்டி உங்களை விற்று விடாதீர்.மக்களே நீங்கள் எந்தச் சமூகத்தினராகிலும் நீதியானவர்களையும் நேர்மையானவர்களையும் மக்கள் சேவை கருதி உழைப்பவர்களை தெரிவி செய்து அனுப்புங்கள்.

செர்பியா இராணுவத்தால் போஸ்னியா சிறு பான்மை இனத்திற்கு எதிரான இனப்படுகொலையை செய்த "போஸ்னியாவின் கசாப்புக்காரன்","Butcher of Bosnia",என்று அழைக்கப்பட்ட Gen. Ratko Mladic என்ற சேர்பியா இராணுவத் தளபதியை யுத்தக் குற்றவியல் நீதி மன்றம் விசாரித்தபோதே போஸ்னியா மக்கள் சார்பில் வாதாடிய சட்வாளர் கூறினார் நீதி வழங்காத எந்த நல்லிணக்கமும் நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்றார் .(You Can't Have Reconciliation Without Justice)அதேபோல் எந்த நல்லிணக்கமும் எந்த அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கான நீதியை வழங்காமல் சாத்தியமாகாது.

சிந்தித்து வாக்களியுங்கள்.அரசியல் என்பது திருடர்களின் கோட்டையாக இருந்தாலும் உங்களால் அதை மாற்ற முடியும்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்களுக்கு உதவுபதுபோல் வியாபாரிகள் காத்திருக்கிறார்கள்.ஏதோ மனிதாபிமார் போல் கன கதை சொல்லி அபிவிருத்தி என்றும் அரசோடு பேசுவோம் என்றும் வருவார்கள் .இருந்தபோதும் மனிதாபிமானத்தோடு உண்மையாக உதவக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.எது எப்படி இருப்பினும் சரியானவர்களை இனம் கண்டு சரியான பாதையில் போக முயற்சிப்போம்.நிரந்தர அரசியல் தீர்வுக்காய் எல்லா வளிகளிலும் முயற்சிக்கும் நல்லதொரு தலைமையை தெரிவு செய்வோம்.

தமிழ்த் தேசியம் 
தனக்குள் மோதி 
உடைந்ததைப்போல 
சிங்களத் தேசியம் 
ஒரு போதும் 
தமக்குள் மோதாது.

பா.உதயன் ✍️


 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எவளவு காலத்துக்குத்தான் தீர்வு வருகுது என்டு வாக்கு கேக்கப் போகிமோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சுவைப்பிரியன் said:

இன்னும் எவளவு காலத்துக்குத்தான் தீர்வு வருகுது என்டு வாக்கு கேக்கப் போகிமோ தெரியாது.

வரும் ஆனால் வராது என்பது போல் தான் சுவைப்பிரியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.