Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொவிட் 19 கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் 19 கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு

கொவிட் 19 கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு

 

இன்று (17) மதியம் 12.30 முதல் நாடளாவிய ரீதியில் தமது கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு.ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார பரிசோதர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது – மஹிந்த

MAHINDA.DESHAPRIYA.ELECTION.2.jpg?189db0&189db0

 

பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிரமமான விடயம் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் இல்லாவிடினும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி தேர்தலை நடத்துவது சவாலானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நேற்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நேற்று மதியம் முதல் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு எந்தவொரு அதிகாரங்களையும் வழங்க முடியாது என்று சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்தை கண்டித்தே பணி விலகலை முன்னெடுத்துள்ளனர்.

https://newuthayan.com/சுகாதார-பரிசோதர்கள்-இன்ற/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார பரிசோதர்களின் தொழிற்சங்க போராட்டம் தீவிரமாகிறது

strike.jpg?189db0&189db0

நேற்று ஆரம்பித்த தமது தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்த பொது
சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

செயற்குழு கூட்டத்தை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு எந்தவொரு அதிகாரங்களையும் வழங்க முடியாது என்று சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்தை கண்டித்து நேற்று (17) முதல் நாடளாவிய ரீதியில் பணி விலகலை முன்னெடுத்துள்ளனர்.

 

https://newuthayan.com/சுகாதார-பரிசோதர்களின்-தொ/

  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு ஒழிப்பு பிரிவினரும் ஆதரவு

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு, அகில இலங்கை டெங்கு ஒழிப்பு பிரிவினரும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சுரங்க தர்ஷன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு இணைவாக நாடுபூராகவும் சேவையாற்றும் 1300 டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான எவ்வித நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கல், கிருமிதொற்று நடவடிக்கை, சமூகத்தினரை தெளிவுப்படுத்தல், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளிலிருந்தும் தமது சங்கத்தினர் விலகவுள்ளனரென, அகில இலங்கை டெங்கு ஒழிப்பு பிரிவு சங்கம் தெரிவித்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/டஙக-ஒழபப-பரவனரம-ஆதரவ/175-253436

  • கருத்துக்கள உறவுகள்

பொது சுகாதார பரிசோதகர்களுடன் சுகாதார பணிப்பாளர் பேச்சு!

strike.jpg?189db0&189db0

 

நான்காவது நாளாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் இன்று (22) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடனவும் கலந்துகொள்ளவுள்ளார்.

 

https://newuthayan.com/பொது-சுகாதார-பரிசோதகர்கள/

  • கருத்துக்கள உறவுகள்

பொது சுகாதார பரிசோதகர்களின் போராட்டம் இன்று முதல் மாற்றமடைகிறது

strike.jpg?189db0&189db0

கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனனர்.

இவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/பொது-சுகாதார-பரிசோதகர்க-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.