Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை என தெரிவித்து மோசடி – ஹைதராபாத்தில் இளைஞன் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை என தெரிவித்து மோசடி – ஹைதராபாத்தில் இளைஞன் கைது

July 19, 2020

இலங்கையுடன் தொடர்புபட்ட சிறுநீரக மாற்றுசத்திர சிகிச்சை மோடிசடிகும்பலொன்றை சேர்ந்தவரை கைதுசெய்துள்ளதாக இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்து குடும்பமொன்றிடமிருந்து 34 இலட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய இளைஞர் ஒருவரை கைதுசெய்ததன் மூலம் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைதுசெய்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

kidney-racket.jpg

 

ஆந்திரபிரதேசத்தின் குண்டுரை சேர்ந்த பவன்ஸ்ரீனிவாஸ் என் 25 வயது இளைஞனை இந்த மோசடி தொடர்பில் முதலில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

இந்த இளைஞன் சிறுநீரக தானம் செய்தவன் எனவும் பின்னர் இதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்த பின்னர் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஆட்களை ஏற்பாடும் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தான் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இளைஞன் இதுவரை இவ்வாறு ஒன்பது பேருக்கு சிறுநீரக மாற்று சத்திரகிச்சைக்கு உதவியுள்ளான், இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ஆறு இலட்சம் இந்திய ரூபாயினை பெற்றுள்ளான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை தொடர்பில் குறிப்பிட்ட இளைஞனிடம் 34 இலட்சம் வழங்கியதாக குடும்பமொன்றை சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

kidney-racjket.jpg

 

குறிப்பிட்ட பணத்தை வேண்டிய பின்னர் அந்த இளைஞன் அந்த குடும்பத்தினரின் தொடர்பை துண்டித்துள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியுள்ள தனது கணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வேளை இந்த இளைஞனை தொடர்புகொண்டேன் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ள பெண்ணொருவர் இலங்கையிலும் துருக்கியிலும் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இளைஞன் பணத்தை பெற்றுக்கொண்டான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

arested-300x249.jpg

 

இதேவேளை பணத்தை பெற்றுக்கொண்ட இளைஞன் இலங்கையில் கசினோவில் பெருமளவு பணத்தை செலவிட்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னதாக குறிப்பிட்ட இளைஞன் பங்குசந்தையில் பணத்தை இழந்த பின்னர் இலங்கைக்கு சென்று தனது சிறுநீரகத்தை விற்றதும், பின்னர் அதே மருத்துவர்களிடம் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் முகவராக செயற்பட்டமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட இளைஞன் சமூக ஊடகங்கள் மூலம் வறியவர்களை இலக்குவைத்து செயற்பட்டுள்ளான்.
இலங்கையின் மருததுவமனைகளில் சிலருக்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்வதற்கும் உதவியுள்ளான்.

 

http://thinakkural.lk/article/55957

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.