Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினி தற்கொலைக்கு முயன்றதன் பின்னணி என்ன? விசாரணையை முடுக்கிவிட்டுள்ள அதிகாரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நளினி தற்கொலைக்கு முயன்றதன் பின்னணி என்ன? விசாரணையை முடுக்கிவிட்டுள்ள அதிகாரிகள்

July 21, 2020

%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%தமிழகத்திலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறித்த செய்திகள் வெளியானதையடுத்து அது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிரமாக  விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 28 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கு விடுதலை அளிக்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதொட ர்பாக, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு கடந்தாண்டு அனுப்பி வைக்கப் பட்டது.

எனினும், இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அவர்களது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே, வேலூர் சிறையில் பல்வேறு வகையில் துன்புறுத்தல்கள் அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி தங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என நளினி, முருகன் ஆகியோர் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இக்கோரிக்கை மீதும் சிறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நளினியின் வழக்குரைஞர் புகழேந்தி கூறியது; சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு ஆயுள் தண்டனை பெண் கைதிக்கும், நளினிக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இதில், அந்த பெண் கைதி அளித்த புகாரின்பேரில் ஜெயிலர் அல்லிராணி, நளினியிடம் திங்கள்கிழமை இரவு விசாரணை நடத்தியுள்ளார். அவரது இந்த விசாரணையால் மனஉளைச்சலுக்கு உள்ளான நளினி, தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.

பொதுவாகவே, நளினி மனதளவில் திடமான பெண்தான். அவர் தற்கொலை செய்ய முயன்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனினும், பொதுமுடக்க தடையால் தற்போது இதுதொடர்பாக நளினியுடன் பேச இயலவில்லை. சிறை அதிகாரி களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

 

http://thinakkural.lk/article/56625

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தற்கொலை முயற்சி?

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி  தற்கொலை முயற்சி?

சென்னை

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, அவரின் கணவர் முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் சிறையிலிருந்து தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென நளினி பல முறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரை புழல் சிறைக்கு மாற்றப்படவில்லை. 


இந்த நிலையில் நளினி சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்

"கடந்த  29 ஆண்டுகளாக வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றோரு ஆயுள் கைதிக்கும் நளினிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக ஜெயிலர் அல்லிராணியிடத்தில் அந்த கைதி புகார் கூறியுள்ளார். நேற்றிரவு ஜெயிலர் அல்லிராணி லாக்கப்புக்கு வெளியே நின்றவாரே நளினியிடத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.

இதனால், மன வருத்தமடைந்த நளினி விசாரணை நடந்து கொண்டிருந்த போதே தூக்கு போட முயன்றுள்ளார். தொடர்ந்து, ஜெயிலர் அல்லிராணி உள்ளே சென்று நளினியின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினார்.  சிறையில் இருந்த 29 வருடங்களில் நளினி தற்கொலைக்கு முயன்றதில்லை. ஆனால், தற்கொலை செய்ய முயன்றதற்கு இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா எனத் தெரியவில்லை'' என்றார். 

நளினி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/21124412/Rajiv-Gandhis-assassination-case-convict-Nalini-threatens.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள் தற்கொலைக்கு முயன்ற நளினி – துன்புறுத்தப்பட்டாரா?

template-77-1.jpg?189db0&189db0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி நேற்று (20) இரவு சிறைக்குள் தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என்று அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றோரு ஆயுள் கைதிக்கும் நளினிக்கும் தகராறு ஏற்பட்டது என்றும், இந்த தகராறு தொடர்பாக ஜெயிலர் அல்லிராணி சிறை கூடத்திற்கு வெளியே நின்றவாரே நளினியிடத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.

இதன்போது மன வருத்தமடைந்த நளினி விசாரணை நடந்து கொண்டிருந்த போதே தூக்கு போட முயன்றுள்ளார் என்றும் தொடர்ந்து, ஜெயிலர் அல்லிராணி உள்ளே சென்று நளினியின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சட்டத்தரணி புகழேந்தி தெரிவிக்கையில், “இரவு 8:30 மணியளவில், ஜெயிலர் நளினியின் சிறைக்கு சென்று புகார் குறித்து விசாரித்தார். விசாரணையின் போது, ஜெயிலருக்கும் நளினிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. எனவே நளினி வருத்தமடைந்து தற்கொலைக்கு முயன்றார்.

இவ்வாறு சிறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் இதை நம்பவில்லை. அவர் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இக்காலக்கட்டங்களில் அவர் தற்கொலைக்கு முயலவில்லை. சிறை அதிகாரிகள் நளினியை சித்திரவதை செய்ததாக நான் நினைக்கிறேன். எனவே இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” – என்றார்.

இதேவேளை தமிழக சிறைத்துறைத் தலைவர் சுனில் குமார் சிங் தெரிவிக்கையில், “இது பிளாக் மெயில் சம்பவம் போன்ற ஒன்று. அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.” – என்றுள்ளார்.

 

https://newuthayan.com/சிறைக்குள்-தற்கொலைக்கு-ம/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.