Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதியை கைது செய்யாமல் தகவல் தருபவராக நம்பி ஏமாந்ததை ஒப்புக்கொண்ட சிஐடி அதிகாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதியை கைது செய்யாமல் தகவல் தருபவராக நம்பி ஏமாந்ததை ஒப்புக்கொண்ட சிஐடி அதிகாரி!

IMG_20200723_211322.jpg?189db0&189db0

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர்களான பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் மைத்துனர் அன்சார் மற்றும் ஆமி மொஹைதீன் ஆகியோர் தகவல் தருபவர்களாக பயன்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தொடர்பில் ஆராயத் தவறியதையும் 2019ம் மார்ச்சில் மொஹைதீனை கைது செய்ய பிடியாணையிருந்தும் கைது செய்யாமல் விட்டதையும் முன்னாள் சிஐடி பொலிஸ் இன்ஸ்பெக்டர் டயஸ் பத்மசிறி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (23) சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆமி மொஹைதீன் தொடர்பில் தாம் செயற்பட்ட விதம் சட்டத்தை மீறியதாக அமைந்துள்ளது என்றும் அவர் ஒப்புக்கொண்டதுடன், 2019 மார்ச்சில் மொஹைதீனின் இருப்பிடம் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவரை கைது செய்ய சிஐடி தவறியதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

“2019 மார்ச் 7ம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், எனது தலைமையில் சார்ஜன்ட் நந்தலால் மற்றும் விஜேரத்ன, கான்ஸ்டபிள் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய சிஐடி குழுவாக மொஹைதீனை தேடி பாசிக்குடாவிற்கு சென்றிருந்தோம்.

இதன்போது எனது மேலதிகாரிகளால் தேசிய புலனாய்வுப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பாசிக்குடாவில் உள்ள ஒரு காணியில் மொஹைதீனால் குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது, ஆயுதங்களைப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என தேசிய புலனாய்வு பிரிவால் எனக்கு கூறப்பட்டது.

அத்துடன் சந்தேகநபரை கைது செய்யவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பாசிக்குடா கடற்கரையில் உள்ள தற்காலிக வீட்டில் மாெஹைதீன் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அந்த வீட்டுக்கு சென்றபோது அங்கு ஒரு வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். அங்கேயே மொஹைதீன் தங்கி இருப்பதாக அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.

அந்த இடத்தை பார்வையிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மொஹைதீன் வீடு திரும்பினர். தே.பு.பி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் விசாரணை செய்யப்பட்டார். குறித்த காணியில் சந்தேகத்துக்குரிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை.

சிஐடிக்காக பணியாற்றுவதாகவும் ஷஹ்ரான் தொடர்பில் தகவல்களை தருவதாகவும் மொஹைதீன் உறுதியாக தெரிவித்தார். அவர் எனது தொடர்பு இலக்கத்தையும், தேவைப்படும் போது எங்களை தொடர்புகொள்ள சார்ஜன்ட் நந்தலாலாவின் இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.” என்று தெரிவித்தார் டயஸ்.

“மொஹைதீனை கைது செய்ய அவரும், அவரது குழுவினரும் நடவடிக்கை எடுத்திருந்தால், பயங்கரவா தாக்குதலை குறிப்பிடளவில் முறியடித்திருக்க முடியும் அல்லவா என்று விசாரணை ஆணைக்குழு கேள்வி எழுப்பிய போது குறித்த சிஐடி இன்ஸ்பெக்டர் மௌனித்து நின்றார்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/பயங்கரவாதியை-கைது-செய்யா/

 

  • கருத்துக்கள உறவுகள்

நம் பக்கத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஒரு குழு, சிலருக்கு பலவித தொல்லைகளை கொடுத்துக்கொண்டிருந்தது, பொலிஸில் முறையிட்டும் பலன் இல்லை பொலிசாரின் ஆசியுடனேயே   தைரியமாக அனிஞாயங்கள் நிறைவேறியது. வேறு வழியின்றி சம்பந்தப்படடவர்கள் சகித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார்கள். எல்லை மீறியபோது ஒருவர் போலீசாரிடம் உங்கள் பணி எங்கே போயிற்று என்று கேட்டபோது, வந்த பதில்: அவர்கள் எங்களது தகவலாளர், அவர்கள்மேல் நடவடிக்கை எடுத்தால் நமக்கு தகவல் வர தாமதமாகும், அல்லது வராமலே போகும். ஆகவே நாம் அவர்களை பாதுகாக்கவேண்டும். என கூறப்பட்டது. பாதுகாப்பு மட்டுமல்ல, சமுதாயத்துக்கு எதிராக தூண்டப்பட்டார்கள் என்பேதே உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.