Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது…

July 26, 2020

tnpf2-800x600.jpeg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு தீர்வும் சாத்தியமில்லை.

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து வெளியிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு வேண்டும்.

அதனை ஏற்பதற்கு சிறீலங்கா அரசு மறுத்தால் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கோருவோம்.

இனவழிப்பு யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கை யுத்த்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தி அதனை கட்டியெழுப்ப சர்வதேச சமூகத்தின் நிதி உதிவி வேண்டும்.

மேற்படி முக்கிய கோரிக்கைகள் உள்ளடங்கலாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் உள்ளடங்கலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மேற்படி பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞானம் வெளியீடு செய்யும் நிகழ்வு கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது தலைமையில் தமிழர் தேசத்தின் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதற் பிரதியை கட்சியின் பொதுச் செய்லாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களால் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கொள்கை விளக்கவுரை ஆற்றினார்.

 tnpf3-800x600.jpeg

tnpf1-800x600.jpeg

 

https://globaltamilnews.net/2020/147408/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

 

 

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து வெளியிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு வேண்டும்.

அதனை ஏற்பதற்கு சிறீலங்கா அரசு மறுத்தால் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கோருவோம்.

தேர்தலில் வென்றால் தானா ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கோருவீர்கள்? என்ன சனத்தை வெருட்டி பார்கிறீர்களா?  பத்து வருடமாய் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கோரினால் ஏதோ அது நடக்கும் போல ஒரு பேய்க்காட்டல். உங்கள் கோரிக்கை குப்பைக்கூடைக்குள் தான் போகும்.

2 hours ago, கிருபன் said:

 

 

இனவழிப்பு யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கை யுத்த்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தி அதனை கட்டியெழுப்ப சர்வதேச சமூகத்தின் நிதி உதிவி வேண்டும்.

 

சர்வதேச நாடுகளுக்கு என்ன பைத்தியமா உங்களுக்கு நிதி தர? விற்க ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், நியாயவிலையில் பணம் தரலாம்.

 

எழுபது வருடமாக சர்வதேச சமூகம் என்ன செய்தது? இனியும் செய்யுமென்று எதிர்பார்ப்பது எவ்வளவு மூடத்தனம்? இப்போது இருக்கும் உலக கடடமைப்பு மாறும் தருணத்தில்  இருக்கும் நாம் அப்படி எதையும் பெரிதாக எதிர்பார்க்க முடியுமோ தெரியவில்லை. சீனா இப்போது வல்லரசாக மாறியுள்ள சந்தர்ப்பத்தில் இது இன்னும் சிக்கலாக இருக்கப்போகின்றது.

எனவே இந்த இளையவர்கள் எப்படி இதை கொண்டு செல்லப்போகிறார்களோ தெரியவில்லை. அல்லதும் மீண்டும் ஒரு அறுபது வருட போராட்டமோ தெரியவில்லை. மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.