Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியப் பட்டியல் எம்.பி. நியமனமும் தமிழரசின் உட்கட்சி ஜனநாயகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப் பட்டியல் எம்.பி. நியமனமும் தமிழரசின் உட்கட்சி ஜனநாயகமும்

August 13, 2020

TNA-1.jpg
 

மிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை இது ஏற்படுத்தியிருக்கின்றது. தன்னிச்சையாக எவ்வாறு இவ்வாறான ஒரு நியமனத்தை தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் வழங்க முடியும்? என பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கொதித்துப்போயிருக்கின்றார்கள். கலையரசனுக்கு நியமனம் வழங்கப்பட்டமை சரியா? தவறா? என்பதைவிட, அது வழங்கப்படுவதற்குக் கையாளப்பட்ட முறை ஜனநாயக ரீதியானதா என்பதுதான் இப்போது எழும் முக்கியமான கேள்வி. பங்காளிக் கட்சித் தலைவர்கள் கொதித்துப்போயிருப்பதற்கும் அதான் காரணம்.

கூட்டமைப்புக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில்தான் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகின்றது. அதனால், அதன் பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்றுத்தான் அதற்கு யாரை நியமிப்பது என்பது தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். கூட்டணித் தத்துவத்தில் இது முக்கியமானது. கூட்டமைப்புக்கென ஒருங்கிணைப்புக் குழு ஒன்று இருக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு மத்திய குழு ஒன்றிருக்கின்றது. முக்கியமான அரசியல் தீர்மானங்கள் அவற்றின் மூலமாகத்தான் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுதான் ஜனநாயம். ஆனால், தேசியப்பட்டியல் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலர் நடந்துகொண்ட முறை அங்கு உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்பதை காட்டியிருக்கின்றது.

 

கூட்டமைப்பு தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்விக்கும் கட்சியில் ஜனநாயகம் இல்லாத தன்மைதான் பிரதான காரணமாக இருந்தது. குறிப்பாக ஒரு சிலர் முடிவெடுக்கும் நிலை கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஏற்பட்ட பாரிய தோல்விக்குப் பின்னரும் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலர் பழைய பாதையில்தான் செல்ல முற்படுகின்றார்களா என்ற கேள்வியை தேசியப் பட்டியல் நியமனம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது, தோல்வியிலிருந்து பாடத்தைப் படித்துக்கொள்ளவோ கூட்டமைப்பை மறுசீரமைத்து அதற்குப் புதிய வடிவம் ஒன்றைக் கொடுப்பதற்கோ அவர்கள் தயராகவில்லை என்பது இதன்மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.

 

தமிழரசுக் கட்சிக்குள் தலைமைத்துப் போட்டி ஒன்று உருவாகியிருந்தமை தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்ற காலத்திலேயே வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தப் பின்னணியில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் தேர்தலில் படுதோல்வியடைந்திருந்தனர். மக்களால் தோற்கடிக்கப்படுபவர்களை தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் “வழமை” தமிழரசுக் கட்சியில் 1989 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கின்றது. இப்போதும் அதேபோன்ற ஒரு முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போதுதான், தலைவர் உள்ளே வருவதை விரும்பாத ஒரு பிரிவினர் அவசரமாக காய்களை நகர்த்தி கலையரசனை தேசியப் பட்டியல் மூலம் அவசரமாக எம்.பி.யாக்கியிருக்கின்றார்கள்.

 

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் எவரும் இந்தத் தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படாத நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தேசியப்பட்டியல் மூலமாக நியமிப்பது நியாயமானதும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனால், இரவோடிரவாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, விடிந்ததும் கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்தவர்களுடைய நோக்கம் அதுவாக இருக்கவில்லை. கட்சித் தலைவர் நாடாளுமன்றத்துக்கு வருவதைத் தடுப்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்பது வெளிப்படை. ஞாயிற்றுக்கிழமை காலை அவசரமாக கடிதம் தயாரிக்கப்பட்டு உடனடியாகவே தேர்தல் ஆணைக்குழுவுக்கு அது அனுப்பப்பட்டது. சம்பிரதாயத்துக்குக் கூட தமிழரசுக் கட்சித் தலைவருக்கு அது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அதற்கான கால அவகாசம் இருந்தும் கூட, திங்கட்கிழமை வெளிவரவிருந்த அதிவிஷேட வர்த்தமானியில் இடம்பெறத் தக்க வகையில் கடிதம் அவசரமாக அனுப்பப்பட்டது. கலையரசனின் பெயர் வர்த்தமானியில் இடம்பெற்றுவிட்ட நிலையில் அதில் மாற்றம் எதனையும் செய்ய முடியாத இக்கட்டான நிலை பங்காளிக்கட்சிகளுக்கு.

 

TNA-5.jpgகலையரசனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், கட்சித் தலைவரைப் பலவீனப்படுத்துவதற்காக இவ்வளவு அவசரமாகவும், இரகசியமாகவும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் உட்கட்சி ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது. மக்கள் மத்தியில் நம்பீக்கையீனத்தை ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமைக்கு தமிழரசுக் கட்சித் தலைமை மட்டும் காரணமல்ல. பங்காளிக் கட்சிகள் வெறுமனே வாய்ப்பேச்சு வீரர்களாக இருப்பதும் காரணம். அவர்களுடைய பலவீனத்தை தமிழரசுக் கட்சியினர் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றார்கள் என்பதுதான் உண்மை. தற்போது புதியதொரு சூழ்நிலையில், பிரச்சினைகள் புதிய வடிவங்களை எடுத்துள்ள நிலையில், கூட்டமைப்புக்குள் நடக்கும் சம்பவங்கள் மக்களிடமிருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்துவதாகவே இருக்கும். 

  • ஆசிரியர்.
     

 

http://thinakkural.lk/article/62037

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.