Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலுக்குள் மீண்டும் வரமாட்டேன், சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிப்பேன் – சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chandrika-Kumaratunga.jpg

அரசியலுக்குள் மீண்டும் வரமாட்டேன், சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிப்பேன் – சந்திரிகா

அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து புதிய தலைவருடன் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைகோர்த்து, ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சுதந்திரக் கட்சியின் முடிவையும் அவர் கண்டித்தார்.

அத்தோடு ராஜபக்ஷர்கள் பின்பற்றும் அரசியலை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு நல்ல தலைவர் என்றும் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.

ஒரு நல்ல தலைவர் இல்லாததால் எதிர்க்கட்சிகள் இப்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது என்றும் சந்திரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

http://athavannews.com/அரசியலுக்குள்-மீண்டும்-வ/

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

அரசியலுக்குள் மீண்டும் வரமாட்டேன், சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிப்பேன் – சந்திரிகா

அங்கயன் தான் இருக்கிறார்.
பிரண்டு உருழுங்கோ.
மகனை கொண்டுவாறதெல்லாம் இனி வேலைக்காவாது.
பெரிய பூட்டா போட்டுட்டு மாறுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அங்கயன் தான் இருக்கிறார்.
பிரண்டு உருழுங்கோ.
மகனை கொண்டுவாறதெல்லாம் இனி வேலைக்காவாது.
பெரிய பூட்டா போட்டுட்டு மாறுங்கோ.

வந்தாலும் இன்னும் 10 வருடத்திற்கு வெற்றி பெற முடியாது என தெரிந்து டிசன்ட ஒதுங்கி நிற்கின்றார்...தந்தை 58 மணித்தியாலத்தில் சிங்கள சட்டம் கொண்டுவந்தார் சிங்களமக்கள் அதற்கும் வாக்கு போட்டார்கள் இப்ப இதற்கு( உரிமை மறுப்பு) வாக்கு போட்டு உங்களையே ஒதுக்கிவிட்டார்கள் ....மக்கள் இனவாதத்தில் முன்னேறிக்கொண்டு செல்கின்றனார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

a10.jpg

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு மஹிந்தவுக்கே – சந்திரிகாவுக்கு பதிலளித்த வாசுதேவ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி ஒன்றிணைக்கப்பட்டு அதன் தலைமைத்துவம் முழுமையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்க குமாரதுங்கவின் கருத்துக்கள் பயனற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர், “30வருட கால யுத்தத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015ம் ஆண்டு அரசியல் சூழ்ச்சிகளினால் தோற்கடிக்கப்பட்டார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை திருத்திக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலமாக ஸ்தாபித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பயனற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக் கட்சி ஒன்றிணைக்கப்பட்டு தலைமைத்துவம் முழுமையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும். சுதந்திர கட்சியை பாதுகாக்கும்பொறுப்பு எமக்கும் உண்டு.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடும் கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவர் எதிர்தரப்பிற்கு ஆதரவாக செயற்படுகிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்து பலப்படுத்துவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/சுதந்திரக்-கட்சியின்-தல-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.