Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சீமான் மீது வழக்கு...காரணம் இதுதான்!' - கொதிக்கும் நிர்வாகிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், மதுராவயல் ஆலப்பாக்கம் அருகே உள்ளே அஷ்டலட்சுமி நகரில் சீமானின் வீட்டுக்கு எதிராக கட்சியினர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது இப்படி ஆள்களைக் கூட்டி போராட்டம் நடத்தியதற்காக சீமான் உள்பட 20 பேர் மீது அரசின் தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மதுராவயல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

போராட்டம்
 
போராட்டம்

இந்தநிலையில், ``ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கட்சியினரையும்தான் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆளும் கட்சியாக அ.தி.மு.க-வே பட்டியலின மக்களுக்காக ஆதரவாக ஒரு போராட்டத்தை நடத்தியது. தற்போது தமிழகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது புதிய கல்விகொள்கைக்காக அல்ல இந்த விஷயத்தில் தமிழக அரசை பின்னால் இருந்து இயக்குவது தமிழக பா.ஜ.கதான் எனக் கொந்தளிக்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர்,``போராட்டம் நடத்தியதற்காக மட்டும் வழக்குப் பதிவு செய்யவில்லை. போராட்டம் முடிந்த பிறகு அண்ணன் செய்தியாளர்களைச்ச் சந்தித்தார். அப்போது, இந்தி, சமஸ்கிருத மொழித்திணைப்பை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதுமட்டுமில்லாமல் இந்தியா என்பது ஒரு நாடல்ல எனவும், இந்து என்கிற மதம் வெள்ளையர்களின் கையெழுத்தில் உருவானது எனவும் மிகக் கடுமையாகவும் பேசினார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
 
சீமான் செய்தியாளர் சந்திப்பு

அதுமட்டுமில்லாமல், நாடற்றவர்கள் இந்த நாட்டை தனதாக்கிக்கொள்ளத் துடிக்கிறார்கள் என்று பேசினார். அதுதான் தமிழக பா.ஜ.க-வினரை அதிகமாகக் கோபப்படுத்தியிருக்கிறது. அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கைச் சந்திக்க எங்கள் அண்ணன் தயாராகவே இருக்கிறார்'' என்றார் அவர்.

https://www.vikatan.com/news/politics/police-files-case-against-seeman-over-protest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.