Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கை பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலை

கொள்கை பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலை

 

கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலையளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று (20) இடம்பெற்ற நிலையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தொடர்பாகவோ, 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவோ எந்தவித கருத்துக்களையும் அவர் தெரிவிக்காமை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு ஒன்று இல்லாவிட்டால் தமிழ் மக்களின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதை தமிழ் மக்கள் மனதில் வைத்து இனிவரும் காலங்களில் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆட்சியாளர்களின் கொள்கை பிரகடனமும் இவ்வாறே இருந்தது – நடைமுறையாகவில்லை!

VIJITHA-HERATH.jpg?189db0&189db0

மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார பிரச்சினை, அரசியல் தொடர்பான பிரச்சினை என அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமையென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (21) பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும்,

“ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர், தான் ஆட்சியில் இருக்கும் காலம் வரை மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக கொள்கை பிரகடன உரையில் தெரிவித்திருந்தார்.

நேற்று ஜனாதிபதியினால் கூறப்பட்ட கொள்கை பிரகடனத்தை பார்த்தோமேயானால், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல், ஒரே நாடு ஒரே சட்டம் உள்ளிட்ட பல்வேறு எண்ணக்கருக்கள் கொண்ட விடயங்கள் அதிகம் காணப்பட்டன.

நாம் நாட்டின் வரலாற்றினை எடுத்துபார்த்தால், இவ்வாறுதான் இதற்கு முற்பட்டவர்களும் மிகவும் சிறப்பான கொள்கை பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். ஆனால் அவை நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என்பது கசப்பான உண்மை. அதாவது இதற்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் ஜனாதிபதியும் இவ்வாறானதொரு கொள்கை பிரகடனமொன்றையே முன்வைத்திருந்தார்.

ஆனால், அவர் ஆட்சிபீடமேறிய எட்டு மாதத்தில் கொள்கை பிரகடன விடயத்தில் கூறப்பட்ட விடயம் என்ன, உண்மையான நிலைவரம் என்பதை மக்கள் உணர்ந்துக்கொண்டனர்.

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளோம். கொரோனா தொற்றினால் அது மேலும் உக்கிரமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு நாம் தற்போது முகம்கொடுத்துள்ள இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எத்தகைய செயற்றிட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கின்றது.

நாட்டில் வறுமை கோட்டில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு வலுவடைய செய்வது. அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது. டலஸ் அழகப்பெரும கூறியதைப்போன்று வரலாற்றில் யாருக்கும் கிடைத்தாத பெரும்பான்மையை தற்போதைய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது.

மக்கள் வழங்கிய இந்த ஆணையினால், அரசாங்கம் எந்தவிடயத்துக்கும் பொறுப்பு கூற முடியாமல் இருக்க முடியாது. மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார பிரச்சினை, அரசியலில் தொடர்பில் முகம்கொடுக்கின்ற பிரச்சினை என அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமை” – என்றார்.

https://newuthayan.com/கடந்த-ஆட்சியாளர்களின்-கொ/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

கொள்கை பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலை

கொள்கை பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலை

 

கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலையளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

படத்தைப் பார்க்கும்போது சுமந்திரனே கவலை வெளியிடுவதுபோல் உள்ளது. மற்றவர்கள் உரிமைகளைத் தட்டிப் பறிப்பதில் ஆள் விண்ணன்போல் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.