Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களை கொன்றனர் - காவல்துறை

Featured Replies

செவ்வாய் 05-06-2007 05:04 மணி தமிழீழம் ஜதாயகன்ஸ

கருணா குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களை கொன்றனர் - காவல்துறை

கருணா ஒட்டுக் குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களைக் கடத்திக் கொலை செய்திருப்பதாகஇ விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிக் கருத்துக்கூறிய சப்ரகமுவ மாகாண காவல்துறை பொறுப்பதிகாரி சரத் பெரேராஇ கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கருணா குழுவுக்குச் சொந்தமானது எனக் கூறியிருக்கின்றார்.

இதேவேளைஇ செஞ்சிலுவைச்சங்க பணியாளர்கள் இருவரும் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டபோது அவர்களுடன் உடனிருந்த ஏனைய நான்கு பணியாளர்களிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மவுன்ற் லவினியா விடுதியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு மட்டக்களப்பு திரும்பிச்செல்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் காத்திருந்தபோது பணியாளர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டுஇ பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

« முன்னைய பக்கம்

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களின் படுகொலைக்கு கருணா குழுவே காரணம்: சிறிலங்கா காவல்துறை

செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்களை கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கருணா குழு தொடர்புபட்டிருக்கலாம். ஏனெனில் அவர்கள் கடத்தப்பட்ட வாகனம் கருணா குழுவினருடையது என தாம் சந்தேகிப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாண காவல்துறை உதவி ஆணையாளர் சரத் பெரேரா கூறியதாவது:

இக்கடத்தலில் உபயோகிக்கப்பட்ட வாகனத்தின் இலக்கம் கருணா குழுவினரின் வாகன இலக்கத்தை ஒத்ததாக இருக்கின்றது. சம்பவம் நடைபெற்ற நாள் அந்தப் பகுதியில் அந்த வாகனம் அவதானிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விசாரணைகளின் போது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடன் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் நின்ற ஏனைய பணியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

தங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறிக்கொண்டு வந்த 5 பேர் அடங்கிய குழுவினர் படுகொலை செய்யப்பட்ட இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுவிட்டனர் என்று கூறினர்.

தமது அதிகாரிகள் இதில் தொடர்புபடவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக தாம் ஒரு குழுவை மட்டக்களப்புக்கு அனுப்பியிருப்பதாகவும் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப்பிரிவின் காவல்துறை உதவி ஆணையாளர் டபிள்யூ.பி. பிரதபசிங்க தெரிவித்தார்.

கொல்லப்பட்ட உறுப்பினர்களின் இறுதிவணக்க நிகழ்வில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சிலுவைச் சங்கம் தான் சிறிலங்காவின் சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாமல் தன்னிச்சையாக இயங்கும் ஒரு அமைப்பு. இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் என்பது, தனியாக இருந்தாலும் செஞ்சிலுவைச் சங்கத்தோடு சேர்ந்தே இயங்குகின்றது. எனவே அதைக் கட்டுப்படுத்த கருணா பெயரில் சிங்களப் புலனாய்வாளர்கள் கொலைத்தாண்டவம் ஆடியிருக்கலாம்.

செய்தியில் கருணா குழு தான் பொறுப்பு என்கின்றார்கள். தங்களுக்குள் என்ன பிரச்சனை வந்தாலும், தங்களின் ஐனநாயக முறைப்படியான அரசியலைச் செய்கின்றோம் என்று காட்டத் தான் இப்படிச் செய்திருப்பார்களோ?

கருணா குழுவை சாட்டி தான் செய்யும் கொலைகளில் இருந்து தப்பும் வேலையை சிங்கள புலநாய்வுதுறை செய்து வருகின்றது.கொலை செய்யப்பட்டவர்களை கடத்தியவர்கள் சிங்கள மொழி மூலம் கதைத்தார்கள் என சொல்கின்றனர் அத்துடன் கொச்சை தமிழில் கதைத்ததாக சொல்கின்றனர் சில வேளை சிங்கள புலநாய்வுதுறையினர் கருணா குழுவில் அங்கத்துவம் எடுத்து விட்டனரோ தெரியவில்லை

நேற்று இறந்த உறவுகள் இருவரினதும் மரண சடங்கில் பொறளை ஜெயவர்தனா மலர்சாலையில் மகிந்த நேரடியாக வந்து கலந்து கொண்டாராமம் சர்வதேச கண்டனங்களை தன் பக்கம் திருபுவதை கண்ட மேற்படி கோமாளி மரண சடங்கில் கலந்து நாடகம் ஆடியுள்ளார்

அத்துடன் ஜனாதி செயலகம் விடுத்த செய்தி குறிப்பில் பிரஸ்லஸில் ஜனாதிபதி கலந்து கொள்ள இருக்கும் நேரத்தில் இப்படி பழி போடுவதற்காக செய்யப்பட்டது என இருந்ததாக பிபிசி தமிழ் சேவை ஒலிபரப்பியது

அவ்வாறு கருணா குழு செய்தாலும் ஒரு நாட்டின் தலை நகரில் இவ்வளவு பாதுகாப்பு மத்தியில் ஒருவர் கடத்தப்பட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் கொலை செய்யப்படுகின்றார் எனின் நாட்டின் பாதுகாப்பு கேலிக்கூத்தானதல்லவா.இதற்கு பொறுப்பாணவர் யார் ஜனாதிபதி என்ற வகையில் மகிந்தவல்லவா ஒருவேளை கருனா கொலை செய்திருந்தாலும் தன்னுடன் சேர்ந்து இயங்கும் ஒரு கூலிக்குழுவை கட்டுப்படுத்தும் கடப்பாடு மகிந்தவுக்கே இருக்கு

என்ன தான் நாடகம் ஆடினாலும் மகிந்த தான் கொலையாளி

r866962953.jpg

படுகொலை செய்வதற்கு உத்தரவிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, உலகை ஏமாற்றுவதற்க்காக கொல்லப்பட்டவர்களின் உடலங்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்

நன்றி-நெருப்பு

city-front-L.jpg

கருணா குழுவே செய்தது என்றால் அரசு உடனே கருணாவை கைது செய்யுமா? கொலையாளியை மடியில் கட்டி வைத்து பாதுகாக்கும் அரசுக்கு புலன்விசாரணை ஒரு கேடா?

முதல் தடவையாக அரசாங்கம் கருணாவை குற்றவாளியாக்கியுள்ளது. இது கருணாவின் அழிவுக்கு அறிகுறி. கருணா அரசாங்கத்துடன் பகைத்துக்கொண்டு வெளியுலகிற்கு வந்தால், அரசாங்கம் நடத்தும் வெள்ளைவான் கடத்தல்கள் உட்பட பல இரகசியங்கள் வெளிவரலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

செய்த கொலைகளுக்குத் தண்டனை பெறாத கருணா, செய்யாத கொலைக்குத் தண்டனை அனுபவிக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பிள்ளையானை பலப்படுத்தவும் கருணாக்கு சின்ன வெருட்டு கொடுக்கவும் தான் சொல்லப்பட்டது

இப்படியே கருணாவை யார் கையில்லும் அகப்படாம உள்ளே வைக்கிற ப்ளானோ?

இல்லை சர்வதேசம் என்ற முட்டாள்களை ஏமாற்றுவதுக்கோ?

கருணாவை இந்தியாக்கு அனுப்ப திட்டம் என்றும்( அனுப்பவில்லை இந்தியாக்கு வேறு வழிகளில் ஏதும் உதவி செய்ய தான்)

இந்தியா தானே பழைய சாமான் வாங்கும் நாடு அது ரஷ்யாவில் இருந்து ஆயுதமாகவும் இருந்தாலும் சரி

விடுதலைபுலிகளுக்கு எதிரான ஏதும் என்றாலும் தான் கழிவுகளை வாங்கி குவிப்பது இந்தியாவின் வேலை...

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை இந்தியாக்கு அனுப்ப திட்டம் என்றும்( அனுப்பவில்லை இந்தியாக்கு வேறு வழிகளில் ஏதும் உதவி செய்ய தான்)

இந்தியா தானே பழைய சாமான் வாங்கும் நாடு அது ரஷ்யாவில் இருந்து ஆயுதமாகவும் இருந்தாலும் சரி

விடுதலைபுலிகளுக்கு எதிரான ஏதும் என்றாலும் தான் கழிவுகளை வாங்கி குவிப்பது இந்தியாவின் வேலை...

சரியாகச் சொன்னீர்கள். ஒரிசாவில் வரதராஜப் பெருமாள் என்ற கழிவையும், தமிழகத்தில் ஈ.என்.டி.எல் என்கிற கழிவுகளையும் இந்தியா வைத்திருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.