Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆவது திருத்தமும் உள்ளடக்கப்பட்டுள்ளவையும் நீக்கப்பட்டுள்ளவையும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

20-th-Amendment-constitution.jpg

குறித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் 19 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் புதிய அரசால்  20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

அதன் முதலாவது வரைபு தற்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கேட்கப்பட்ட போது அதனை ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்தே வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து அது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்துக்கு விடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இரட்டை பிரஜாவுரிமையை உடையவர்கள் பாராளுமன்றத்திற்ககோ அல்லது ஜனாதிபதியாகுவதற்கு தடை செய்யும் விதத்தில் 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட ஏற்பாடுகள் 20 ஆவது திருத்தத்தின் சட்டமூல வரைபில் நீக்கப்பட்டுள்ளன.

20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவருக்கு இருக்க வேண்டிய வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் 35 வயதிற்கு மேற்பட்டவர்களே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

இதேவேளை, அரசாங்கமொன்றில் 30 அமைச்சுகளே காணப்படலாம் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. 

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய விடயம் 20 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைபில் வழங்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபின் பிரகாரம் ஜனாதிபதியால் பிரதமரை பதவியில் இருந்து நீக்கவும் நியமிக்கவும் முடியும்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும்.

ஜனாதிபதி பதவிக்கு வந்து பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடகாலத்தின் பின்னர் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைக்கலாம் என 20 ஆவது திருத்தச் சட்டத்தின் சட்டமூல வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தில் நான்கரை வருடங்களின் பின்னரே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசமைப்பு பேரவை என்பது பாராளுமன்ற பேரவை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

 

முழுமையாக தமிழில் பார்வையிட

 http://cdn.virakesari.lk/uploads/medium/file/133281/PL-011963-Gazette-suppleiment-T.pdf

 

https://www.virakesari.lk/article/89207

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலே சொல்லப்படாதது,  20ம் திருத்தம்,   ஒன்றும் முடியாத 13ஐ,  நடைமுறைபடுத்த முடியாது  வெறுமையாக்கி இல்லதாக்கிவிடும்.

13 ஐ மாற்றுவதற்கு எல்லா மாகாண சபைகளினதும் ஒப்புதல் தேவை.

அனால், மாகாண சபைகளாலுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற சட்ட கண்டிப்பு இல்லை. ஆளுநரை கொண்டே நடத்தலாம்.

20ம் திருத்த்ததுடன், 13 இன் விதியும் முடிவுக்கு வருகிறது.

ஹிந்தியா குள்ளநரிகழும் மலையாள மாபியாக்களும் எழுதிய 13, அதிகார பரவலாக்கம் என்ற தோற்றப்பாட்டை (மற்ற நாடுகளுக்கு) உருவாக்கி விட்டு, ஒன்றுமே கொடுக்க அல்லது கொடுத்தாலும் நடைமுறைப்படுத்த சட்ட வலு இல்லாமல், மொத்தத்தில் 13 இருந்தும், இல்லை என்ற நிலையை உருவாக்கியது தான். 

  • கருத்துக்கள உறவுகள்

20ம் திருத்தம் நாட்டை மோசமாக்கும்! – அநுரகுமார

wimal.jpg?189db0&189db0

 

அரசியலமைப்பின் 20வது திருத்தம் நாட்டை மோசமான நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“அரசாங்கம் 20வது திருத்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானிஅறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எமக்கு இந்த விடயங்களில் எந்ததொரு நம்பிக்கையும் இல்லை. இந்த நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினை அரசியலமைப்பாகும்.

மக்களின் வாழ்வாதாரம், நீதியை பெற்றுக்கொள்ளும் விடயம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு ஊடாக அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்குமென்ற நம்பிக்கை எமக்கு இல்லை. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த அரசியலமைப்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அனைவரும் குறித்த சட்டத்தின் கீழ் அடிபணிந்து செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கே அதிகளவு அதிகாரம் காணப்பட்டது. ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படவில்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற விவகாரங்களில் ஜனாதிபதிக்கே அதிகளவு அதிகாரம் காணப்படும். அனைத்து நிறுவனங்களின் அதிகாரங்களையும் 20வது திருத்தம் ஊடாக ஜனாதிபதியே கையாளக்கூடிய நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும, 20வது திருத்தத்தின் மூலம், இந்த அரசாங்கம் மீண்டும் நாகரிகத்திலிருந்து மோசமான நிலைக்கு செல்ல முயற்சிக்கிறது. எங்களுக்குத் தெரியும். அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் சில குறைபாடுகள் இருந்தன. அதன் ஆணைக்குழுக்களின் செயற்பாடு, மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் தோல்வியுற்றது, அதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஒரு அரசாங்கம் சமுதாயத்தை நாகரிகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், அந்த சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்துவது அல்லது பிற நிறுவனங்களை இயக்குவது பற்றி ஏதாவது செய்திருக்க வேண்டும்” – என்றார்.

 

https://newuthayan.com/20ம்-திருத்தம்-நாட்டை-மோசம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.