Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய தமிழ் முதலீட்டாளர்களை குறிவைக்கும் சிறீலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழ் முதலீட்டாளர்களை குறிவைக்கும் சிறீலங்கா

 

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள முதலீட்டாளர்களை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது.

அதன் முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை (11) சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சாவுக்கும் கனடாவைத் தளமாகக் கொண்ட ஒரு சில தமிழ் முதலீட்டாளர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தார். வடக்கு-கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் திட்டங்கள் இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் வடக்கு கிழக்கில் பலவந்தமான சிங்கள குடியேற்றங்களை சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் முதலீடுகளை சிங்கள குடியேற்ங்களுக்கு சிங்கள அரசு பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்களை ஏமாற்ற சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மற்றுமொரு நடவடிக்கை என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.ilakku.org/கனேடிய-தமிழ்-முதலீட்டாளர/

  • கருத்துக்கள உறவுகள்

பயப்படாதீங்கோ உடையார்,

நம்ம நிழலி போகாதவரை.... பயமில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்திப்பில் மகிந்த இவர்களிடம், எவராவது இனாம் அல்லது கையூட்டு கேட்டல் தன்னிடம் அல்லது கோதாவிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளார். அதனால் இது முளைக்க முன்பே ஓரளவு நசுங்கி விட்டது.

முதலீடு என்பது ஒரு போதுமே தனிப்பட்ட முறையில் செய்யப்படுவது அல்ல. அதன் இயல்பே நிறுவனமயப்படுத்தியது. 

இந்த முதலீட்டார்கள் என தம்மை காட்டிக்கொள்ள, அங்கீகாரம் தேடிக்கொள்ள  விரும்புவோர் இரு வகைகளில் இருக்கின்றனர். இது எனது புரிதலே.

1. கேள்விக்கு உள்ளாகும் மற்றும் விளங்கப்படுத்தமுடியாத நிலையில் பணத்தை கொண்டுளோர். அதாவது எவ்வாறு இவ்வளவு அவர்களிடம் பணம் வந்தது என்பதில் மற்றோருக்கும், அவர்களுக்கும் எப்போதுமே கேள்விக்கு குறி. இதனால், அவர்கள் கனடாவில் முதலிட தயங்குகின்றனர். 

2. இன்னுமொரு சாரார், புலம் பெயர்ந்த நேரத்தில், ஒப்பீட்டளவில் மிகவும் வசதிகள் (அன்றைய நிலையில்) குன்றி, கனடா (வெளிநாடு) வந்து வசதிகளை அடைந்தோர். இதில் நிச்சயமாக சாதியின் பங்கும் இருந்திருக்கும்.
  

ஆனால், இவர்கள் அமைதியாக, ஆரவாரம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் செய்யலாம்,  ஆரவாரமில்லாமல்.

2 hours ago, Kadancha said:

 

2. இன்னுமொரு சாரார், புலம் பெயர்ந்த நேரத்தில், ஒப்பீட்டளவில் மிகவும் வசதிகள் (அன்றைய நிலையில்) குன்றி, கனடா (வெளிநாடு) வந்து வசதிகளை அடைந்தோர். இதில் நிச்சயமாக சாதியின் பங்கும் இருந்திருக்கும்.
  

ஆனால், இவர்கள் அமைதியாக, ஆரவாரம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் செய்யலாம்,  ஆரவாரமில்லாமல்.

பொதுவெளியில் மீண்டும் மீண்டும் சாதியை கதைப்பதுதான் தற்போதைய நவீன சாதி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஆதி said:

பொதுவெளியில் மீண்டும் மீண்டும் சாதியை கதைப்பதுதான் தற்போதைய நவீன சாதி

நடந்தவைகளில் (அதாவது சம கால வராற்றிலும்) எமது சமூக அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்தின் இப்போதைய பிரதிபலிப்பை விவாதிக்காமல்  ஒரு போதுமே முன்னேற்ற சீர்திருத்தம் அடைய முடியாது. 

இங்கே சாதியை கீழ்மைப்படுத்தியோ அல்லது மேன்மைப்படுத்தியோ குறிக்கும் ஓர் நோக்கமும் இல்லை.  

Just now, Kadancha said:

நடந்தவைகளில் (அதாவது சம கால வராற்றிலும்) எமது சமூக அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்தின் இப்போதைய பிரதிபலிப்பை விவாதிக்காமல்  ஒரு போதுமே முன்னேற்ற சீர்திருத்தம் அடைய முடியாது. 

இங்கே சாதியை கீழ்மைப்படுத்தியோ அல்லது மேன்மைப்படுத்தியோ குறிக்கும் ஓர் நோக்கமும் இல்லை.  

இப்படியே எத்தனைநாள்தான் விவாதம் செய்வீர்கள், மனிதனை சக மனிதனாக பார்க்கும் வரை இந்த விவாதமெல்லாம் ஏட்டு சுரக்காய்தான், அத்துடன் ஊதி பெருப்பிப்பதைதவிர

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஆதி said:

அத்துடன் ஊதி பெருப்பிப்பதைதவிர

எதிர் கொள்வது, அல்லது இணங்கிச் செல்வது காலத்துடன் கரைந்து போகும் என்ற நம்பிக்கையில் (அது ஒரு பகுதி சமூகமே).    

இதில் எது சரி என்று படுகிறதோ அவரவர் செய்யலாம்.

நான் பொதுவாக புரிந்து கொண்ட வழியில், எல்லாவற்றையும் வெளிப்படையாக விவாதித்து நகர்ந்த சமூகங்கள் பொதுவாக அவற்றில் இருந்த வேறுபாடுகளை சமூக அடிப்படையில் களைந்து கொண்டு இருக்கின்றன.

21 minutes ago, Kadancha said:

எதிர் கொள்வது, அல்லது இணங்கிச் செல்வது காலத்துடன் கரைந்து போகும் என்ற நம்பிக்கையில் (அது ஒரு பகுதி சமூகமே).    

இதில் எது சரி என்று படுகிறதோ அவரவர் செய்யலாம்.

நான் பொதுவாக புரிந்து கொண்ட வழியில், எல்லாவற்றையும் வெளிப்படையாக விவாதித்து நகர்ந்த சமூகங்கள் பொதுவாக அவற்றில் இருந்த வேறுபாடுகளை சமூக அடிப்படையில் களைந்து கொண்டு இருக்கின்றன.

சாதியைப்பற்றி கதைப்பேத தப்பு, அப்படியென்றில்லை, அப்படி கதைப்பவர்களை ஒதுக்கி வைக்க தொடங்குகள் அவர்களா திருந்துவார்கள், இதிலிருந்து நான் ஒதுங்குகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.