Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பன் புயலினால் அழிவடைந்த நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பன் புயலினால் அழிவடைந்த நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி

BharatiSeptember 16, 2020

 

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

அப்போதைய கொறோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்ததுடன், அழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபரை அறிவுறுத்தியிருந்துடன் அதுதொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதி உறுதிளித்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நஸ்டஈடு வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் அழிவுகளுக்கு நஸ்டஈடு வழங்கும் விவசாய பயிர்களின் பட்டியலில் வாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்றவை இணைக்கப்பட்டுள்ளதாக நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

http://thinakkural.lk/article/69204

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.