Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கு எதிராக தமிழர்கள் மீண்டும் போராடும் நிலைமை உருவாகலாம்- தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு எதிராக தமிழர்கள் மீண்டும் போராடும் நிலைமை உருவாகலாம்- தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

 

 

    by : Yuganthi

தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அரசு, அஞ்சலி செலுத்தும் விடயத்தில் ஜனநாயகத்தன்மையுடன் நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் அகிம்சை ரீதியாக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும் எனவும் அப்பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன், ஊடக அறிக்கையொன்றை  இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் சுவீகரன் நிஷாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைத்தீவு 1948ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலைபெற்று சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்தே, பெரும்பான்மை இனத்தவர்களால் இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும், ஒடுக்குமுறைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழர்களுக்கு எதிராக அன்று தொடங்கிய பெரும்பான்மையினரின் இனவாதம் இரு தரப்பிரனடையேயும் பல முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது. அது இன்றும் பல தசாப்தங்களை கடந்தும் தொடர்கின்றது.

மேலும், தமிழர்களது தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் உரிமைகள், தமிழர் நிலங்கள், தமிழர் அடையாளங்கள் மீதும், தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும்பான்மையினரின் பேரினவாதம் இந்த நாட்டில் பல இலட்சம் உயிர்களைக் காவு கொண்டும், சொல்லிலடங்கா பல இழப்புக்களையும் சந்தித்தது

இன்றும் தமிழர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியவில்லை என்பதே மறுக்கப்படமுடியாத உண்மையாகும். ஆனால் இலங்கையில் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய பெரும்பான்மையின சக்திகள் அனைத்துமே தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலும், தமிழருக்கு சொந்தமான நிலங்களை சூரையாடுவதிலுமே குறியாக இருந்தன. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழினத்தின் இளைஞர்கள், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக அகிம்சை ரீதியிலும்ஆயுத ரீதியிலும் அரசியல் ரீதியிலும் போராடி தங்களது உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் தமிழ் இனத்தின் விடுதலையினை முன்னிறுத்தி, அமைதிப்படை என்ற பெயரில் இங்கு வந்திறங்கிய இந்திய இராணுவத்தின் அடக்குமுறையினை எதிர்த்து ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து காந்தி தேசத்தை நோக்கி அகிம்சை வழியில் போராடி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

ஆனால் இன்று இலங்கை நாட்டில் நடந்து கொண்டிருப்பது என்ன? புதிய ஆட்சியில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களின் நினைவு அஞ்சலிகளை நடாத்தக்கூடாது என பேரினவாதத்தின் உச்சக்கட்டம் தமிழர்கள் மீது பாய்ந்திருக்கின்றது.

தியாகி திலீபனுடைய 33வது நினைவு நாட்கள் ஆரம்பித்து இருக்கின்ற இவ்வேளையில் தமிழர்கள் அஞ்சலி நிகழ்வுகளை அனுஸ்டிக்கக் கூடாது என்று நாட்டின் பாதுகாப்பு செயலாளரும், இலங்கை பொலிஸ்துறையின் உயர் அதிகாரியும் கூறியது மட்டுமின்றி பல வேறு வழிகளாலும் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள் என்றால், இது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் மீதான உச்சகட்ட ஜனநாயக அடக்குமுறை ஆகும்.

இலங்கையில் இந்த புதிய அரசாங்கத்தில் தமிழர்கள் மீதான ஜனநாயக உரிமை மீறலானது இன்று சர்வதேசத்தின் பார்வைக்கு ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆதிக்குடிகளான தமிழர்கள் இந்த நாட்டில் எப்பொழுதுமே நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் வாழ முடியாது அல்லது அதற்கான வாய்ப்பே இல்லை என்கிற செய்தியை தற்போதைய அரசு வெளிப்படையாகவே சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட அஞ்சலித்தடை, இராணுவ பிரசன்னம் என்பன குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகின்ற பிரச்சினைகளாகத் தொடர்கின்றபோதும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் மௌனம் காப்பது என்பது இதன் பின்னனியில் முக்கிய சூத்திரதாரியாக இவர்கள் இருவரும் இருப்பார்களோ! என்ற சந்தேகமும் அதற்கான கேள்விகளும் எழத்தான் செய்கிறது

இவர்கள் இருவரினதும் மௌனம் விரைவில் கலைக்கப்பட்டு அதற்கான நேர்மையான தமிழருக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என்பதையே தமிழர் தரப்பு எதிர்பார்க்கிறது.

அதே நேரம் தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது, தடுக்கவும் கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தமிழர்கள்-அரசுக்கு-எதிரா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.