Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம்?

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும், மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

பிரதேச மக்களினால் இன்று ஏற்பாடு செய்யபட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள் விவசாயிகள் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன நல்லுறவிற்கு பாதகம் ஏற்படும் வகையில், செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பொலிஸார் கடமையினை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என கோசமிட்டு பதாதைகளை ஏந்தி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையளப்படுத்தபட்ட காணியின் முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இந்த சும்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  ஞானமுத்து அன்னபூரணம் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் வயற்காணியை 1964ஆம் ஆண்டு அவரது மருமகள்களான தருமலிங்கம் ராணியம்மா, தருமலிங்கம் யோகமலர், தருமலிங்கம் பரமேஸ்வரி ஆகியோருக்கு நன்கொடையாக வழங்கபட்டு அவர்களினால் அன்று முதல் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர், குறித்த பகுதியில் புராதன சிங்கள பௌத்த சின்னங்கள் பௌத்த விகாரை இருந்ததாகவும் கூறி அப்பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு தொல்பொருள் அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் மாத்திரம் அடையாளமிடப்பட்டு மிகுதி பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (21) மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் குறித்த இடத்திற்கு வந்து விகாரைக்குரிய காணி 200 ஏக்கர் உள்ளது காணிக்கு உரிமை கோருவேர் விவசாயம் செய்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்  என மிரட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வருமாறு அழைத்து, அங்கு வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி தகரக் கொட்டில் ஒன்றிற்குள் சிறைப்பிடித்து வைத்திருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், தினமும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்யும் அத்துமீறல்களைக் கண்டித்தும் அதிகாரிகளுக்கு தாக்கியதற்காக சட்ட நடவடிக்கையெடுக்க கோரியும் கண்டனங்கள் தெரிவித்தும்  கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த இடத்திற்கு நில அளவை திணக்கள அதிகாரிகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் கிராம சேவை அதிகாரி சகிதம் சென்று பார்வையிட்டு சென்றனர்.

 

http://www.ilakku.org/demonstration-pankudavell-batticaloa-sumanaratna-thero/

மங்களராமய விகாராதிபதி, மக்கள் மத்தியில் இனக்கலவரத்தினைத் தூண்ட முயற்சி

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மீதான இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

இன்று  மட்டு-ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக இந்த மதகுரு ஒரு வன்முறையாளராக நடந்துகொள்ளும் நிலையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுகின்ற பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டன் பின்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமிழ் பிரதேசங்களில் ஓரு ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளக்கூடியவாறு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகத்தின் மத்தியில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குடாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள இனங்காணப்பட்ட தொல்லியல் தொடர்பான ஒரு இடத்தில் பௌத்த மதகுரு ஒருவரால் நேற்று அரச உத்தியோத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

பன்குடாவெளி பகுதியில் நேற்று தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள்,செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த மதகுருவினை பொறுத்தவரையில் கெவிழியாமடு பகுதியில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்ட சம்பவம்,பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்,மட்டக்களப்பு கச்சேரியில் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் என பல சம்பவங்கள் அவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவையெல்லாவற்றினையும் தாண்டி நேற்றைய தினம் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஓரு மதகுரு செயற்பட்டதையெண்ணிவெட்கி தலைகுனியவேண்டும்.

இலங்கையில் பல மதகுருக்கள் உள்ளனர்.பௌத்த மதகுருக்களில் சிறந்த பல மதகுருக்கள் உள்ளனர்.ஆனால் இந்த மதகுருவைப்பொறுத்தவரையில் தமிழர் பகுதிகளில் ஒரு வன்முறையினை பிரயோகிப்பதன் ஊடாக ஒரு இனக்கலவரத்தினை தூண்டும் வகையில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

இந்த மதகுருவானவர் வன்முறையாளனாக செயற்படுவது என்பது ஒரு வெட்கக்கேடான விடயம். பௌத்த மதத்தில் உள்ள இவ்வாறான மதகுருக்களின் மூலம் வன்முறைகளில் ஈடுபடும் செற்பாடுகளை கடந்த ஐந்து வருடமாக முன்னெடுத்துவரும் நிலையில், சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கவேண்டிய பொலிஸார் எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

ஏனைய மத மதகுருக்கள் வன்முறைகளில் ஈடுபடும்போது பொலிஸார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கின்றனர். ஆனால் மட்டக்களப்பு பௌத்த விகாரையில் கடமைபுரியும் மதகுருவினைப்பொறுத்தவரையில் அரச நிர்வாகத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் மீது இவ்வாறு தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்திவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பன்குடாவெளியில் தொல்லியல் திணைக்கள மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அறையில் பூட்டிவைத்து அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸார் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடாத்தப்பட்டபோதிலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.பொலிஸார் இருக்கும்போதே குறித்த தேரர் இவ்வாறு நடந்துகொள்ளும் நிலையில் ஏனைய அதிகாரிகள் அச்சம்கொள்ளும் நிலையும் உள்ளது.

இந்த மதகுருவினால் தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சம்பவத்திற்கு ஜனாதிபதி அவர்கள் உரிய நடவடிக்கையெடுத்து சமூகத்தினையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் பாதுகாக்ககூடியவாறு நடவடிக்கையெடுக்கவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/மங்களராமய-விகாராதிபதி-ம/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.