Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் கொலைகளில் பொது சமூகத்தின் பாரபட்ச கண்ணீர்... திண்டுக்கல் சிறுமி கொலை உணர்த்துவது என்ன?

Featured Replies

பாலியல் கொலைகளில் பொது சமூகத்தின் பாரபட்ச கண்ணீர்... திண்டுக்கல் சிறுமி கொலை உணர்த்துவது என்ன?

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.

 

பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள், பெண்கள் பற்றி பொதுவெளியில் எழுப்பப்படும் விவாதங்களின் எண்ணிக்கையைவிட, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

சிறுமிகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதும், அதை அவர்கள் வெளியே சொன்னால் குற்றவாளிகளுக்கு ஆபத்து என அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. சிறார் வதைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள், பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்கள் பற்றி பொதுவெளியில் எழுப்பப்படும் விவாதங்களின் எண்ணிக்கையைவிட, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். மேலும், தமிழ்ச் சமூகம் கடந்து சென்ற, மறந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஏராளம். அப்படியென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்காக எழும் குரல்களிலும் பாரபட்சம் காட்டப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறார் வதை, பாலியல் குற்றங்களில் உயிரிழக்கும் சிறுமிகள், பெண்கள் நகரத்தை சேர்ந்தவர்களாகவோ, உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவோ, வசதி படைத்தவர்களாகவோ இருந்தால், பொதுமக்களின் ஆதங்கத்திலிருந்து அரசின் நடவடிக்கைவரை விரைவான ஓர் ஒருங்கிணைவு நடக்கிறது. ஆனால், அது கிராமத்தைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட சமூகத்து ஏழை பெண்களுக்கு நடப்பதில்லை என்பதே நிதர்சனம். முடி திருத்தும் தொழிலாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுக்க அந்தச் சமூகத்தினர் மட்டுமே போராடுவதைப் பார்க்கும்போது, பொது சமூகத்தின் பாரபட்ச கண்ணீர் மரியாதை இழக்கிறது.

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
 
சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.

2019-ம் ஆண்டு திண்டுக்கல் சிறுமி சிறார் வதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை விடுதலை செய்து தீர்ப்பு வந்து 10 நாள்களுக்கும் மேல் ஆகிறது. இந்நிலையில், `அந்தத் தீர்ப்பில் நீதி இல்லை' என்று அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல, உயிரிழந்த சிறுமி சேர்ந்த முடிதிருத்தும் சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன் வீட்டில் சிறார் வதைக்கு ஆளாகி, வாய் மற்றும் மூக்கில் மின் வயர் மூலம் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். வடமதுரை காவல்துறையினரின் விசாரணையில், சிறுமியின் எதிர்வீட்டில் வசித்த கிருபானந்தம் என்பவன் கைது செய்யப்பட்டான். தானும், தன் நண்பர்கள் இருவரும் சேர்ந்துதான் இச்செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்தான் கிருபானந்தம். இருந்தபோதும், கிருபானந்தம் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.

எம்.பி ஜோதிமணி
 
எம்.பி ஜோதிமணி

வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி புருஷோத்தமன், போதிய ஆதாரம் இல்லாததால், குற்றம்சாட்டப்பட்ட கிருபானந்தம் விடுதலை செய்யப்படுவதாகத் தீர்ப்பளித்தார். இதைக் கண்டித்து, நீதிமன்ற வாசலில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் இந்தத் தீர்ப்பு பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை.

 

சிறுமியின் தந்தை, முடி திருத்தும் தொழிலாளி என்பதால், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம், இந்த விவகாரத்தை கையில் எடுத்தன. தமிழகம் முழுவதுமுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள், தங்கள் சலூன் கடைகளை அடைக்கும் போராட்டம் நடத்தி, சிறுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டியும், அரசு சார்பில் வழக்கை மேல்முறையீடு செய்யவும் கோரிக்கை வைத்தனர். மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர், தமிழக சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம், ``சிறுமி வழக்கு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” என அறிவித்தார்.

திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்து, கிட்டத்தட்ட 10 நாள்கள் கடந்த பின்னர், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்ட பின்னர், அரசு சார்பில் மேல்முறையீடு செய்வோம் எனக் கூறுவது அரசின் பொறுப்பற்ற செயல் என்றே விமர்சிக்கப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர்
 
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர்

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். ``அரசு சொன்னபடி, வழக்கின் மேல்முறையீட்டினை நேர்மையாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரவில்லையென்றால், இனி அறவழிப்போராட்டம் நடக்காது, சிறை நிரப்பும் போராட்டம்தான் நடக்கும்” என்றனர் கோபத்துடன்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டரை சந்தித்து, சிறுமி வழக்கை அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் கரூர் எம்.பி ஜோதிமணி. அவர் கூறும்போது, ``பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நின்று, நீதி கிடைக்கும்வரை போராடுவோம். சிறுமியின் உறவினர்கள் என்னிடம் சொன்னபோது, சம்பவம் நடந்தபோது, வீட்டிற்குள் ரத்தக்கறையுடன் சிறுமி கிடந்ததாகவும், மார்பில் காயம் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறினர். காவல்துறை தரப்பில் தவறு நடந்ததா அல்லது வேறு எங்கு தவறு நடந்தது எனத் தெரியவில்லை. எங்கு தவறு நடந்திருந்தாலும், ஏழைச் சிறுமிக்கும் அந்த குடும்பத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும்.

சமூகத்தில், பெண்களை காமப் பொருளாகப் பார்க்கும் சிந்தனையில் இருந்துதான் இதுபோன்ற குற்றங்கள் நடக்கின்றன. அப்படியான குற்றங்கள் நடக்கும்போது, அரசு அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஓர் அரசாங்கம், ஏழைச் சிறுமியின் கொலைக்கும், ஏழைக் குடும்பத்திற்கும் நியாயம் வழங்கவில்லையென்றால், அது என்ன மாதிரியான அரசாங்கமாக இருக்க முடியும்? `பெண்களையும் சிறுமிகளையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், குற்றவாளிகளை விடுதலை செய்வோம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்க மாட்டோம்' என்பதாகத்தான் இருக்கிறது இந்தத் தீர்ப்பு.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் எனக் கூறினார். ஆனால், இன்றுவரை நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. அதேபோல, நிர்பயா நிதியை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை. பொள்ளாட்சி உட்பட, தமிழகம் முழுவதும் பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்பட்டு நீதி கிடைக்காமல் உள்ளனர். தமிழக அரசு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

திண்டுக்கல் கலெக்டரைச் சந்தித்த ஜோதிமணி
 
திண்டுக்கல் கலெக்டரைச் சந்தித்த ஜோதிமணி

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் குற்றம் செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பின்புலத்தின் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை முதல் தீர்ப்பு வரை நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு திண்டுக்கல் சிறுமி வழக்கு ஓர் உதாரணம். 2019-ம் ஆண்டு நடந்த கொலைக்கு, 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதிலும் குற்றவாளி விடுதலை செய்யப்படுகிறார். அப்படியென்றால், காவல்துறையின் ஓர் ஆண்டுக்கால விசாரணையும் குற்றப்பத்திரிகையும், அரசு வழக்கறிஞர்களின் வாதங்களும் மறு ஆய்விற்கு உட்படுத்தப்படுமா? வழக்கின் போக்கில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.vikatan.com/social-affairs/women/how-caste-discrimination-affected-dindigul-girl-rape-and-murder-case

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் சிறுமிக்கு நடந்தது என்ன? | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.