Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூருவில் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ தொலைவுக்குக் காத்திருந்த மக்கள்: அதிகாலை 4.30 மணி முதல் கூட்டம்

Featured Replies

பெங்களூருவில் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ தொலைவுக்குக் காத்திருந்த மக்கள்: அதிகாலை 4.30 மணி முதல் கூட்டம்

1-5-km-long-queue-for-biryani-at-karnataka-eatery பிரியாணி வாங்க கடையின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி | படம்: ஏஎன்ஐ
 

பெங்களூரு

பெங்களூருவின் புறநகரான ஹோஸ்கோட் நகரில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் அதிகாலை 4.30 மணி முதல் சாலையில் காத்திருந்தனர். இதனால் சாலையில் 1.5 கி.மீ தொலைவுக்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பெங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பது ஹோஸ்கேட் நகரம். இங்குள்ள ஆனந்த் தம் கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். 22 ஆண்டுகள் பழமையான மிகவும் புகழ்பெற்ற பிரியாணி கடை என்பதால், மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

1602399687756.png

அதிகாலையில் தொடங்கும் பிரியாணி விற்பனை சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான கிலோ மட்டன் பிரியாணி விற்றுத் தீர்ந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இதனால் இந்தக் கடையின் பிரியாணியை வாங்குவதற்கு மக்கள் மத்தியில் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.

இன்று வார விடுமுறை நாள் என்பதால், பிரியாணி வாங்குவதற்காக அதிகாலை முதலே இந்தக் கடை முன் மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். மக்கள் வரிசையாக முகக்கவசத்துடன் பிரியாணி வாங்குவதற்காக நிற்கத் தொடங்கினர். சிலர் இரவே காரில் இப்பகுதிக்கு வந்து காரை நிறுத்திக் காத்திருந்து அதிகாலை வந்ததும் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்டுச் சென்றனர்.

1602399714756.png

இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், “22 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி செய்து விற்பனை செய்கிறோம். வார இறுதி நாட்களில், விடுமுறைகளில் இது இன்னும் அதிகரிக்கும். எங்கள் கடையில் செயற்கையான பொருட்கள், சுவைக்கு ரசாயனப் பொருட்கள் சேர்க்காமல் பிரியாணி செய்வதால் மக்கள் விரும்புகிறார்கள். கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் பிரியாணியின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கின்றனர்.

1602399700756.png

கடையில் நின்றிருந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், “நான் அதிகாலை 4 மணிக்கே பிரியாணி வாங்க வந்துவிட்டேன். ஆனால், 6 மணி ஆகியும் இன்னும் கூட்டம் நகரவில்லை. இந்தக் கடையின் பிரியாணி மிகவும் சுவையானது என்பதால், எவ்வளவு நேரமானாலும் வாங்கிட வேண்டும் என்று நிற்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இன்று அதிகாலை முதல் மக்கள் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான வரிசையில் நின்றிருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

https://www.hindutamil.in/news/india/589643-1-5-km-long-queue-for-biryani-at-karnataka-eatery-2.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.