Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(சில) லண்டன் தமிழருக்கு சூடு சொரணை கிடையாதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(சில) லண்டன் தமிழருக்கு சூடு சொரணை கிடையாதா?

அண்மைக்காலமாக சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிப்பு செய்யுங்கள், இதன் மூலம் சிறிலங்காவுக்கு யுத்தம் செய்ய நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பது மாதிரியெல்லாம் கட்டுரைகளை பிரசுரித்தீர்கள். சில தமிழ் இணையத்தளங்களும் இது பற்றிய சுலோகங்கள் தாங்கிய அறிவுறுத்தல்களை பிரசுரித்தன. இப்பிரச்சாரங்களால் உந்தப்பட்டோ என்னவோ லண்டனில் ஒரு தமிழ் வர்த்தக நிறுவனம் தாங்கள் இனி சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களை விற்பனை செய்யப்போவதில்லை என ஒரு பேப்பரில் விளம்பரம் செய்தது. எல்லாம் நல்லபடி நடக்கிறது என மகிழ்ச்சியடைந்தால், கடந்த வெள்ளியன்று நடந்த சம்பவம் வேறுவிதமாக இருந்தது.

அன்றய தினம் ஹரோ பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான உணவு விடுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்திற்கு பலதரப்பட்டவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். விழாவை குத்துவிளக்கேற்றி ஆரம்பித்தவர் ஒரு பெண்மணி. வேறு யாருமில்லை பிரித்தானியாவுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர்தான் அவர். இத்தனைக்கும் இந்த நிறுவனத்தை சேரந்தவர்கள் தாங்கள் தமிழ் உணர்வாளர்களாகக் காட்டிக் கொள்பவர்கள். மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் வித்தையை விலாங்கு மீனிடம் படித்தவர்கள்.

இது வியாபாரம் சம்பந்தப்பட்ட விடயம் இதில் அரசியலை நுழைக்காதீர்கள் என அவர்கள் சாக்குச் சொல்லலாம். இரண்டு நாள் கழித்து BBC Radio 5 Live ல் இலங்கைத் தமிழர்கள் கிரடிட் காட் மோசடியில் ஈடுபடுவதாக சிறிலங்கா உயர்ஸதானிகரின் பேச்சாளர் குற்றம் சாட்டிக் கொண்;டிருந்தார். அப்படியாளால் இந்த வர்த்தக நிறுவனத்தினர் சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறார்களா?

இலாபத்தை மட்டுமே முக்கியமாகக் கருதும் இது போன்ற வர்த்தக நிலையங்களுக்கு கல்லாவை நிறைக்க சிறிலங்கா உயர்ஸதானிகரை தாஜா பண்ண வேண்டிய தேவையிருக்கலாம். ஆனால் லண்டன் வாழ் தமிழருக்கு உணவருந்துவதற்கு பல உணவகங்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கு உணவு உண்ண வருகிற சிங்கள அதிகாரிகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் நாங்கள் வேறு உணவகங்களுக்கு செல்வோம். நான் சொல்வதை Ethical Tradingஐ விரும்புவர்கள் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

வரதன்

-ஒரு பேப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

திருந்த மாட்டோம்!!!!! நாம் திருந்தமாட்டோம்!!! எமது சுய நலம் முதல்! அதன் பின் தான் மற்றவனை பற்றி சிந்திப்போம். :lol:

கலை நிகழ்ச்சி நடந்தால் சந்தோசப்படுவதும் நாமே!

வான்புலிகள் தாக்கினால் சந்தோசப்படுவதும் நாமே!

சிவாஜி றிலீஸானாலும் சந்தோசப்படுவதும் நாமே!

தென்னிந்திய நட்சத்திரங்கள் புலம் வந்தால் அவர்களை பார்த்து வாயை பிளப்பதும் நாமே!

இலங்கை உட்பத்திபொருட்களை அதிக செலவு செய்து இங்கே இறக்குமதி செய்பவர்களும் நாமே!

புலத்திலே பல லட்சம் யூரோ, பவுண்ட்ஸ் செலவு செய்து கோயில், தேர் கட்டி போலிவாழ்க்கை வாழ்வதும் நாமே!

உலகத்தில் விசித்திரமான இனமும் நாமே!> :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையும் விட்டுவிட்டிர்கள் டண்

துடுப்பாட்டத்தில் சிறிலங்கா அணி வெற்றி பெறும் போது சந்தோசப் படுவதும் நாமே!

தெரிந்தும் தவறு செய்வோம் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று பெருமையுடன் வாழும் சில சனம் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவராக தம்மை தாமே போற்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு ஆயிரம் தமிழர் கொல்லப்படுவதோ அல்லது அல்லல் படுத்தப்படுவதோ மனட்சாட்சியை உறுத்தும் செயல் இல்லை. ஒரு உயர்ஸ்தானிகர் தமது வீட்டுக்கோ நிகழ்ச்சிக்கோ வந்தால் அதில் பெருமை அடைவதே பெரிய விடயம். இப்படியான பெருமைகளுக்குப் பின்னால் எத்தனை தமிழரின் வேதனைகள்....

அன்பான சகோதரங்களே இனி ஒளிவு மறைவு வேண்டாம். யார் அந்த தேத்தண்ணி கடை காடையன் விலாசம் கடைஇருக்கும் இடம் எல்லாவற்றையும் எழுதுங்கள். உணர்வு உள்ள தமிழர்கள் போகாமல் விடுவார்கள். நட்டம் என்று மூடி போகு மட்டும் தமிழர்கள் அந்த தேத்தண்ணி கடையை தமிழர் மத்தியில் இனம் காட்ட வேண்டும்.

ஒருமுறை நோர்வேயில் இருக்கிற இந்துக்கோயில் புல்லுருவி ஒன்று சிரிலங்கன் தூதுவனுக்கு சிவராத்திரிக்கு பொன்னாடை போர்த்ததற்காக அந்த நிர்வாகத்தையே புதிய தேர்தல் மூலம் இல்லாமல் செய்து தங்களது எதிர்ப்பை காட்டி இருந்தார்கள் .

கட்டி பெயரையும் இடத்தையும் கொடுத்தால் நன்றாகவிருக்கும்

  • 2 weeks later...

என்ன croydaon ரவுடிகள் tooting ரவுடிகளில் ஒருவனை வெட்டி சாக்காட்ட்டிப் போட்டாங்களாம்

அரோகரா வாழ்க தமிழ் பிரித்தானியா

உதென்ன பெரிய கதை இஞ்ச இருக்கிற சில செம்மரி நாய்களுக்கே இன்னும் விளங்குதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.