Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திரத்தில் வந்து குந்திய றகன்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 


 "Let China sleep, for when she wakes, she will shake the world." 
-Napoleon Bonaparte

200 வருடத்துக்கு முதல் நெப்போலியன் சொன்னான் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் சீனாவை அப்படியே தூங்க விடுங்கள். அது எப்பொழுது முழித்து எழும்புகிறதோ அப்போது உலகம் தாங்காது என்றான்.சீனாவின் ரகன் இப்போது முழித்துக் கொண்டது.ஏனைய அதிகார பலம் மிக்க நாடுகளாய் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டார்கள்.மீண்டும் ஒரு பனிப் போர் ஆரம்பமாக இருக்கிறது.

இந்து சமுத்திரத்தின் வாசலில் இருந்து இலங்கையோடு சேர்த்து இந்து சமுத்திரத்தின் குரல் வளையை இறுக்கப் பிடித்து விட்டது சீன கம்யூனிச பூதம். இனி இதிலிருந்து விடுபடுவதென்பது இலகுவல்ல.பண இராயதந்திரத்தின்(money diplomacy)மூலம் பல ஆசிய நாடுகளை வளைத்து விட்டது சீனத்து ரகன்.இந்தியா இப்போதாவது இலங்கையுடனான வெளி உறவுக்கு கொள்கைகளில் மாற்றதை கொண்டு வருமா கற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்திய வெளி உறவுக்கு கொள்கை  அயல் நாடுகளுடன் வலுவான வெளி உறவுகளை வளர்க்கவில்லை.மாறாக எதிரிகளையே சம்பாதித்தது மாத்திரம் இன்றி இந்து சமுத்திரத்தில் தனக்கு சாதகமாக ஈழத்து தமிழர்களின் தனி நாட்டுக்கு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.

இந்தியாவுக்கு இது கூடவோர் பாதுகாப்பாக  நட்பு நாடக அமையும் என இந்தியா நினைக்காதது துர்பாக்கியமே.இந்தியா இப்போதாவது இலங்கையுடனான வெளி உறவுக்கு கொள்கைகளில் மாற்றதை கொண்டு வருமா கற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தையும் இராணுவக் கட் டமைப்பையும் கொண்ட கம்யூனிஸ்ட் சீனாவை இந்தியாவும் அமெரிக்காவும் இலகுவில் கையாள முடியுமா என்பது கேள்விக்கு குறியே.

அனைத்து வல்லரசுகளும் தங்கள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்கின்றன.ஒருவரை ஒருவர் பார்த்து நீ கருப்பு  "The pot calling the kettle black" என்பது போல் தான் இவர்கள் செயல் பாடுகள் அமைக்கின்றன. அமெரிக்கா சீனாவை ஒரு வேட்டைக்காரன் காரன் என்கிறது(China is a predator) சீனா அமெரிக்காவை பார்த்து இரட்டை வேஷம் போடுகிறார்கள் என்கிறது.சீன இராயதந்திரம் இன்று ஓர் புதிய உலக ஒழுங்கை இந்து சமுத்திரத்தில் இருந்து கொரோனா அரசியல் பொருளாதாரம் வரை ஓர் புதிய உலக ஒழுங்கை திறந்து விட்டிருக்கிறது.இதை தான் பல அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். கடல் சார்ந்த அதிகாரத்தை யார் கட்டுப்பாடில் வைத்திருக்கிறார்களோ அவர்களே புவிசார் அரசியல் இராயதந்திரத்தில் வெற்றியடைகிறான் என அரசியல் சாணக்கியர் சுட்டிக் காட்டுவர்.

இப்படி எல்லாம் இருந்த போதிலும் சீனா அமெரிக்காவை மிஞ்ச முடியுமா என்ற கண்ணோட்டத்தில் அமெரிக்க ஹவர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அரசியல் விஞ்ஞானியுமாகிய Joseph Samuel Nye தனது பழைய உலகமும் புதிய கோட்ப்பாடுகளும்(The Old World’s New Roles) என்ற நூலிலே இந்த உதாரணத்தை சுட்டிக் காட்டுகிறார்.கிரேக்க பெரும் யுத்ததமான பெலோபொனேசியப் போர் என்பது கிரேக்க நகர அரசு அமைப்பு இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னைத் தானே  அழித்துக் கொண்ட பெரும் மோதலாகும்.  அதற்கு என்ன காரணம்?  பெலோபொன்னேசியப் போரின் சிறந்த வரலாற்றாசிரியரான துசிடிடிஸ், ஏதென்ஸின் சக்தியின் எழுச்சி மற்றும் ஸ்பார்டாவில் அது உருவாக்கிய அச்சம் என்று கூறினார். ஆகவே அமெரிக்காவின் பொருளாதார இராணுவ பலத்தை இப்போதைக்கு சீனாவால் கடக்க முடியாதெனவும் சீனாவின் எழுச்சியானது பல ஏனைய சக்தி மிக்க நாடுகளுக்கு ஒர் வகைப் பயத்தை உண்டாக்கி இருக்கிறது என்று கூறினார்.இதேபோல் பத்தொன்பதாம் நூற்ராண்டில் பெரிய பிரித்தானியாயும் ஜெர்மனியும் தங்கள் வளர்ச்சியில் மாறி மாறியோர் அச்ச உணர்வோடு இருந்தனர்.

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டிருக்கும் தனி நலன் சார்ந்த நாடுகளின் இந்த அதிகாரப் போட்டியானது ஈழத் தமிழர் அரசியலும் ஒரு மாற்றத்தை ஒரு பாதையும் திறந்து விட்டிருக்கிறது.இதை தமிழர் தலைமை எவ்வாறு புதிய உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப கையாளப் போகின்றது என்பதில் இருந்தே இதன் நகர்வும் முடிவும் தங்கி இருக்கிறது.இறுதியாக நெப்போலியன் சொன்னது போல் முழித்துக் கொண்ட சீனாவால் உலகம் ஆடிப் போய் தான் இருக்கிறது அந்தக் கொரோனாவோடு சேர்த்தே.

பா.உதயன் ✍️
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.