Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும்; நசீர் அஹமட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருபதை ஆதரித்தமைக்கான வியூகங்கள் விரைவில் சமூக நலன்களாக வெளிப்படும்; நசீர் அஹமட்

November 1, 2020

naseer-ahamed.600.pngஅரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

எதையும் நிபந்தனையாக குறிப்பிடாமல், எழுமாந்தமாக இருபதை ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் சார்ந்த சில நலன்களை வியூகத்தின் வடிவிலே சாதிக்க வேண்டியுள்ளது.இதனால்தான் இன்று வரைக்கும் மௌனியாகச் செயற்படுகிறோம்.

காலப்போக்கில் சமூகநலன்கள் கை கூடுகையில், எங்களால் பேசப்பட்டவைகள் எவை என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளும். இவ்வேளையில் வீண் விமர்சகர்கள் வாயடைத்து வெட்கிக்கப் போவது உறுதி.

பேரம் பேசும் பலம் இழந்துள்ளதாகக் காட்டப்பட்ட அரசியல் பின்புலங்களிலும் அவ்வாறு பலம் குன்றவில்லை என்பதை நொடிப் பொழுதில் நிரூபித்தவர்கள் நாங்கள். காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் காய்களை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளதை, இவ்விமர்சகர்கள் விளங்காதுள்ளமைதான் எமக்குள்ள கவலை.

தம்பட்டமடிக்காது, தக்க தருணத்தில் அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல், வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை.

கொரோனாவின் சூழலில், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய நம்பிக்கைகள் மீதான கெடுபிடிகளைக் கருத்தில் கொள்ளாமலும்,நாங்கள் இருபதை ஆதரிக்கவும் இல்லை.அல்லாஹ்வின் உதவியால்,எமது வியூகங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/85235

சமூக நலனாவது , முன்னேற்றமாவது. தானும் தனது வியாபாரமும் சிறந்து விளங்கினால் போதும். காட்டிக்கொடுப்பதட்கு பெயர்போனவர்கள். கொள்கை இல்லாதவர்கள்.

அரசு குறைந்தபட்சம் ஒரு நன்றியைக் கூட இவர்களுக்கு சொல்லவில்லை. அத்துடன் பெளத்த தேரர்கள் இவர்களது ஆதரவை பெற்றதற்காக அரசை குறையும் கூறி இருக்கின்றனர். இது தானாகவே போய் காலில் வீழ்ந்து சரணடைந்த செயல். 
 

11 hours ago, நிழலி said:

அரசு குறைந்தபட்சம் ஒரு நன்றியைக் கூட இவர்களுக்கு சொல்லவில்லை. அத்துடன் பெளத்த தேரர்கள் இவர்களது ஆதரவை பெற்றதற்காக அரசை குறையும் கூறி இருக்கின்றனர். இது தானாகவே போய் காலில் வீழ்ந்து சரணடைந்த செயல். 
 

இவர்கள் எப்போதாவது நேர்மையான அரசியல் செய்த சரித்திரம் இருக்கிறதா? ஒன்று காட்டிக்கொடுக்கும் அரசியல், இல்லாவிட்ட்தால் சரணாகதி அரசியல். இது அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. நாய் வாலை நிமிர்த்த முடியாதுபோல இவர்களது சுயநல அரசியலையும் மாற்ற முடியாது.

இவர்களது இணையதளங்களை பார்த்தால் தமிழர்விரோத கருத்துக்கள் , துவேசமான கருத்துக்களை பார்க்கலாம். நாங்கள் எழுதினால் அங்கு பிரசுரிக்கமாட்ட்டார்கள். இங்கு நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இல்லாவிட்ட்தால் நிறையவே இவர்களைப்பற்றி எழுதலாம். எனவே நிர்வாகம் இதனை கருத்தில் எடுத்து கட்டுப்படுகளை தளர்த்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.