Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட்

pslv-c49-with-latest-earth-observation-satellite-eos-01-9-others-lifts-off சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் : படம் உதவி |ட்விட்டர்
 

ஸ்ரீஹரிகோட்டா

இஓஎஸ்-1 உள்பட 9 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இஸ்ரோ சார்பில் பிஎஸ்எலவி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை 7-ம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

 

இதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று நண்பகல் 1.02 மணிக்குத் தொடங்கியது. இந்த ராக்கெட்டுடன் சேர்ந்து வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டது. ஒரு செயற்கைக்கோள் லிதுவேனியாவைச் சேர்ந்தது; 4 செயற்கைக்கோள் லக்சம்பர்க்கைச் சேர்ந்தவை; மற்றவை அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

1604744277756.jpg

இஓஎஸ்-1 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளைத் துல்லியமாக மேற்கொள்ளும்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை மக்கள் காணும் வகையில், ட்விட்டரில் நேரலை செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்தது.

இதன்படி இன்று பிற்பகல் 3.02 மணிக்கு திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட வேண்டும். ஆனால், விண்ணில் செலுத்துகையில் சில இடையூறுகள் இருந்ததால், 10 நிமிடங்கள் தாமதமாக 3.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து இஓஎஸ்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து புவிநீள்வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டது. அதேபோல, மற்ற வணிகரீதியான 9 செயற்கைக்கோள்களும் பிரிந்து புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு திட்டமிட்டபடி எந்தவிதமான செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. பிஎஸ்எல்வி ராக்கெட் வகையில் இது 51-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/india/599325-pslv-c49-with-latest-earth-observation-satellite-eos-01-9-others-lifts-off-1.html

10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்

10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி வருகிறது.

பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இவற்றுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் திட்டமிட்ட இலக்குகளில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வருகிறது.
 
தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.


 
இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து ஏவ ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

26 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் பிற்பகல் 3.02 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கவுண்ட்டவுன் நேரம் 5 நிமிடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. ராக்கெட் புறப்படும் நேரம் 3.12 மணியாக மாற்றப்பட்டது. அதன்படி 3.12 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 

இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட், செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/07151950/2049934/PSLVC49-lifts-off-successfully-from-Satish-Dhawan.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.