Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு!

கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி  யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில்  ஆலயத்தில்  கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் பெரியகுளம் நாகவிகாரை யில் விசேடவழிபாடு நடாத்தப்பட்டது.

குறித்த வழிபாட்டில் யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் , யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ,வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ,யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும்  பொலிஸார் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள  சுகாதார நடைமுறைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த  வழிபாடு சிறப்பாகஇடம் பெற்றது.

http://athavannews.com/யாழ்-மாவட்டச்-செயலகத்தி-4/

  • கருத்துக்கள உறவுகள்
மஹாதேனமுத்தாவின் வழித்தோன்றல்களின் புதிய முயற்சி:
 
களனி ஆற்றுக்குள் நீர்ப்பானைகளை வீசி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஹெலிகொப்டரில் இருந்து மந்திரித்த நீரை தெளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தப் பதிவு மற்றவருடைய மத நம்பிக்கைகளை விமர்சிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதல்ல. மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி அரசியல் வியாபாரம் செய்பவர்களை அம்பலப்படுத்துவதற்காக பதியப்பட்டது. தனி நபருக்கு ஒரு கஷ்டம் வரும் போது அல்லது அவருடைய அன்பானவருக்கு கஷ்டம் ஏற்படும் போது நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம், நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறோம், பல்வேறு சடங்குகளை கடைபிடிக்கிறோம் அனைத்து மதங்களிலும் காணப்படும் இந்த நம்பிக்கைகளை விமர்சிப்பது தவறானதாகும். ஆனால் இங்கே மக்களை ஏமாற்றுவதற்கும் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கும் ஊடகங்களை அழைத்து பொதுமக்களின் நன்மைக்காக செய்கிறோம் என்ற பெயரில் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செயல்களை செய்து அவற்றை விளம்பரப் படுத்துவது ஏற்றுக் கொள்ளப்படமுடியாதது என்பதுடன் இவ்வாறான மூடநம்பிக்கைகள் மக்களை விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட நோய் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதில் இருந்து திசைதிருப்பி நோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இவற்றை அம்பலப்படுத்துவது மனிதகுலத்துக்கு செய்யும் சேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அற்ற சுதேச மருந்துகளை பயன்படுத்துவது கடந்த காலத்தில் அமெரிக்க அதிபர் ஆதாரம் அற்ற hydroxy chloroquine என்னும் மருந்தை பயன்படுத்த அனுமதி அளித்து அதன்காரணமாக அதிகளவு உயிராபத்து ஏற்பட்டதுக்கு இணையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கீழ் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மருந்தியல் துறை சார் வைத்தியநிபுணர்களினால் சுதர்ஷன என்ற பெயரில் அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆயுர்வேத மருந்தானது பயனுள்ளது என்பதற்கான விஞ்ஞான ஆதாரம் எதுவும் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் அனுகூலம் பெறுவதற்காக ஆற்றில் பானையை போடுவது உலங்கு வானூர்தியில் இருந்து மந்திரிக்கப்பட்ட நீரை வீசுவது போன்ற நாடகமாடும் செயல்கள் 21ம் நூற்றாண்டில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களை உண்மையான நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து கவனத்தை திசை திருப்பி உள்ளது. நோய்ப்பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தாதியர்களுக்கு நோய் தொற்று ஏற்படவில்லை என்பதால் அதுபோல நாமும் கொரோனவுடன் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்ற வாதமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தாதியர்கள் நோயாளிகளை பராமரிக்கும் போது முழு உடலையும் மூடி பாதுகாப்பு அங்கி அணிந்தே தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தொடர்ந்து இவ்வாறான பாதுகாப்பு அங்கி அணிந்து வாழமுடியுமா ? எனவே கொரோனவை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஏனைய நாடுகளின் உதாரணங்களில் இருந்தும் மற்றும் ஆமாம் சாமி போடாத சுயாதீனமாக சிந்தித்து முடிவெடுக்க கூடிய துறைசார் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையையும் பெற்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் நிலையை எதிர்கொள்ள வேண்டும். உரியநேரத்தில் முழு நாட்டையும் அல்லது நோய் அதிகரித்துள்ள நாட்டின் பகுதிகளை lock down நிலைக்கு எடுத்துச் செல்வதன் மூலமாகவே பல நாடுகளில் வைத்தியசாலை அனுமதியையும் உயிரிழப்புகளை குறைக்க முடிந்துள்ளது. இலங்கையில் தீவிரசிகிச்சைப் பிரிவு சுவாச உபகரணங்கள் (ventilators ) மிகவும் குறைந்த குடித்தொகை வீதத்தில் உள்ள நிலையில் (படம் 2) lock down நிலையே உயிரிழப்பை குறைக்க ஒரே வழியாக உள்ளது. அதை உரிய நேரத்தில் செய்யாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த நோய் பரவலும் உயிரிழப்புகளும் ஏற்பட வழிவகுக்கும்.
 
-Dr. முரளி வல்லிபுரநாதன்( சமுதாய மருத்துவர்) இன் முகநூலில் இருந்து 
 
இப்பதிவு யாழ் கள விதிமுறைகளுக்கு உட்படாவிடில் அகற்றிவிடவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.