Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தியாளர் மோசசை படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- செய்தியாளர் மோசசை படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் - சீமான்

செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூக விரோதக் கும்பலை கைதுசெய்க - சீமான் வலியுறுத்தல்

தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ”சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசஸ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மோசஸின் குடும்பத்தினரை நினைத்து கலங்கி நிற்கிறேன். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்” என்றார்.

மேலும் கூறுகையில், “மோசசின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதெனக் காவல்துறையில் அவரது தந்தை முன்பே புகாரளித்தும் தக்க நடவடிக்கை எடுக்காது காவல்துறை அலட்சியம் காட்டியதன் விளைவாகவே வீட்டருகேயே இப்படுகொலை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. துளியளவேனும் விழிப்புக்கொண்டு காவல்துறை முன்னெச்சரிக்கையோடு, அக்கறையுணர்வோடும் செயல்பட்டிருந்தால் ஒரு உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்காது.



போதைப்பொருள் வணிகம் நடைபெறுவதை வெளிக்கொணர்ந்தததையும், அதற்காகவே கொலை செய்யப்பட்டதையும், காவல்துறை இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டியதையும் கணக்கிட்டுப் பார்க்கிறபோது காவல்துறைக்குத் தெரிந்து அவர்களது ஒத்துழைப்போடுதான் போதைப்பொருள் சார்ந்த வணிகம் நடக்கிறதோ எனும் ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கஞ்சா வணிகம் குறித்த செய்தி வெளியிட்டதற்காக ஒரு செய்தியாளரை சமூகவிரோதக் கும்பல் மிகச் சாதாரணமாக வெட்டிப்படுகொலை செய்கிறதென்றால் போதைப்பொருள்களை வணிகம் செய்திடும் இக்கும்பலின் ஆதிக்கம் எந்தளவில் சமூகத்திலிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
 

 


ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு மோசசை படுகொலை செய்திட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்கிட வேண்டுமெனவும், போதைப்பொருள் வணிகம் செய்திடும் சமூக விரோதக் கும்பலைக் களைந்திட தனிப்படை அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளேன்.

 

https://tamil.news18.com/news/tamil-nadu/reporter-mosses-murdered-by-anti-social-elements-seeman-368021.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்..!

7-12.jpg

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நல்லூர் கிராமத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசசை நள்ளிரவில் நவமணி உள்ளிட்ட ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.
 

தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நல்லூர் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை காவல்துறையிடம் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்பகையே காரணம் என தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்த காவல்துறை ரவுடி நவ மணியைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை வெட்டி படுகொலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சமூக விரோத கும்பலால் செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சமூக விரோத கும்பலுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பதும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையின் உயிர் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும் ஜனநாயகத்தின் மீது விழும் சம்பட்டி அடி என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கம், கோவை பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உயிரிழந்த செய்தியாளர் மோசஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

https://www.kuttramkuttrame.com/2020/11/09/private-tv-journalist-hacked-to-death/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.