Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபைசெர் கோவிட் தடுப்பு மருந்து வறிய நாடுகளுக்கு உதவாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஃபைசெர் கோவிட் தடுப்பு மருந்து வறிய நாடுகளுக்கு உதவாது 

மில்லியன் அளவுகளைக் கனடா வாங்கியுள்ளது

ஜேர்மனியைத் தளமாகக் கொண்டியங்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபைசெர் (Pfizer), BioNtech எனும் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைத் தயாரித்துள்ளதாகவும் அது நோய்த்தடுப்பில் 90% வெற்றியைத் தருமெனவும் கடந்த திங்களன்று அறிவித்திருந்தது. ஆனால் அது அறிவிக்காத முக்கிய விடயம், அம் மருந்தைப் பாதுகாக்க 70 பாகை செல்சியஸுக்குக்கீழ் உறை நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை.

நோய்த் தடுப்புக்கான மருந்தைத் தயாரிக்கும் போட்டியில் பல உலக மருந்து நிறுவனங்கள் இரவு பகலாக உழைக்கின்றன. மக்களின் பாதுகாப்பை முன்நிறுத்தாமல் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டு இந் நிறுவனங்கள் செயற்படுகின்றனவா என்பதையே இப்படியான அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

கனடா போன்ற அநேகமான செல்வந்த நாடுகளில் அரசாங்கங்கள் இப்படியான மருந்துகளை என்ன விலை கொடுத்தும் வாங்கும் என்பதை அறிந்த மருந்து நிறுவனங்கள் ஏழை நாடுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது அதிசயமானதல்ல.

ஃபைசெர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (CEO), இவ்வறிவிப்பைச் செய்த அன்று அந் நிறுவனத்தில் தான் வைத்திருந்த $5.6 மில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளை விற்றிருந்தார். மருந்து 90% நோய்த்தடுப்பை உறுதிசெய்கிறது என அறிவித்ததும் நிறுவனத்தின் பங்குகள் உலகச் சந்தையில் 15% உயர்ந்தன. உடனேயே தலைமை நிர்வாகி தனது பங்குகளை பங்கொன்றுக்கு $41.94 வீதம் விற்றுவிட்டார்.

கோவிட் தொற்றினால் களைத்துப்போயிருக்கும் உலக மக்களுக்கு இப்படியான செய்திகள் மகிழ்ச்சியைத் தருவனவாயினும் ஃபைசெரின் அறிவிப்பு பல முக்கிய தரவுகளை வெளியிடவில்லை என்பது இவ்வவசர அறிவிப்பின்மீது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.


 


ரஷ்யா, சீனா, ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் வேறும் பல நாடுகளும், நிறுவனங்களும் தமது தடுப்பு மருந்துகளும் மனிதஹ்ப் பரிசோதனைகளின் இறுதி நிலைகளில் உள்ளனவெனவும் சில நாடுகள் அவசர தேவைகளில் இவற்றைப் பாவித்து வருகின்றனவெனவும் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தனது மருந்து 92% திறனுள்ளது என அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஃபைசெர் தனது அவசர அறிவிப்பையும் செய்திருக்கிறது.

ஆனால் இம் மருந்தை இதர நாடுகளுக்குக் கொண்டுசெலவதற்கு -75 பாகை செல்சியஸ் உறைநிலையைக் கொடுக்கவல்ல உபகரணங்களைத் தாங்கிய வாகனங்கள் தேவை. இக் காரணங்களுக்காக இந்தியா போன்ற நாடுகள் ஃபைசெரின் தடுப்பு மருந்தை வாங்குவதற்குப் பின்நிற்கின்றன. மருத்துவமனைகளும், மருந்தகங்களும் இந்த உறைநிலையைத் தரவல்ல ஃபிறீசர்களை விசேடமாகத் தருவிக்க வேண்டும்.

கனடா, அமெரிக்கா போன்ர நாடுகளே இவ்விடயம் குறித்து தமது கரிசனைகளைத் தெரிவித்துள்ளன. அமெரிக்காவிலுள்ள பல ‘பணக்கார’ மருத்துவமனைகள் இந்த ‘சுப்பர் ஃபிறீசர்களை’ வாங்குவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. வறிய மாநிலங்களும், கிராமப்புற மருத்துவமனைகளும் இம் மருந்துகளைப் பெறமுடியாமல் இருக்குமெனக் கூறப்படுகிறது.

வைரஸின் மரபணுக் குறியீட்டைப் பிரதி செய்து மனித உடலுக்குள் அனுப்புவதன் மூலம் உடல் அதை நிஜமான வைரஸ் என நினைத்து அதற்கெதிரான தடுப்பாற்றலை உற்பத்தி செய்யுமென்பதே BioNTech மருந்தின் நோக்கம். சில் தடுப்பு மருந்துகள் செயலிழகப்பட்ட வைரஸ்களை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் தடுப்பாற்றலை விருத்தி செய்கின்றன.

ஆனால் இம் மருந்து வயோதிபர்களிலும், இளையோரிலும், குழந்தைகளிலும் ஒரே திறனுடன் செயற்படுமா, எவ்வள நாட்களுக்கு இது உடலைப் பாதுகாக்கும், தீவிரத் தொற்றுள்ள நோயாளிகளில் எப்படியாகச் செயற்படும் என்பது போன்ற விடயங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்பதனால் மருத்துவ சமூகம் இவ்விடயத்தில் தங்கள் கரிசனையை வெளியிட்டு வருகிறது.

https://marumoli.com/ஃபைசெர்-கோவிட்-தடுப்பு-ம/?fbclid=IwAR2atjc6ojiEfAIdXUH7rQ3Fn-bP7oHBXnPss3GgwCWNzysQMAhhN9WgtiM

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தகவல்கள் இல்லாத வெற்றிடத்தில் சந்தேகங்களும் பொய்யான தகவல்களும் வந்து நிரம்பும் என்பதற்கு உதாரணம் இந்தக் கட்டுரை:

1. தடுப்பு மருந்தை - 80 பாகை செல்சியசில் வைக்க வேண்டியிருப்பது அது வெப்பத்தினால் அழியக் கூடிய நியூக்ளிக் அமிலங்களால் செய்யப் பட்டிருப்பதால் தானேயொழிய கம்பனியின் பணம் பார்க்கும் சதிமுயற்சியினால் அல்ல! 

இது புரதமாக இருந்தால் சாதாரண குளிரூட்டியிலேயே வைக்க முடியும்.

இதனால் ஏழை நாடுகளுக்கு இது கிடைக்காதா? அப்படி இல்லை. திண்ம நிலைக் காபனீரொட்சைட்டின் வெப்ப நிலை - 70 பாகை செல்சியஸ். இதைக் கையாளப் பயிற்சி கொடுத்தால் தடுப்பு மருந்தை எந்த நாட்டிலும் பயன்படுத்தலாம்.

2. தடுப்பு மருந்தை பத்தாயிரம் பேருக்கு மேல் கொடுத்துப் பரீட்சித்தனர். அவர்களுள் நூறு பேரைப் பரிசோதித்த போது, தடுப்பு மருந்து எடுத்தோரில் 10 பேருக்கு மட்டுமே கொரனா தொற்று வந்திருந்தது. இதனால் தான் 90% வினைத்திறன் என்கின்றனர். இந்த இலக்கம் சகல subjects  ஐயும் பரிசோதித்து முடிக்கும் போது மாறலாம். ஆனால், இன்புழுவன்சா தடுப்பு மருந்து 40- 50 %  வரை தான் வினைத்திறனானது என்றால், இந்த தடுப்பூசி மிக வினைத்திறனானது என்பதில் சந்தேகமில்லை!

3. ரஷ்யாவின் கொரனா தடுப்பு மருந்து Phases I, II, III இல் எந்த நிலையையும் முறைப்படி பூர்த்தி செய்யவில்லை! அந்த தடுப்பூசியின் பாதுகாப்புப் பற்றி ரஷ்யா சொல்லும் தகவல் தவிர வேறெதுவும்  பெரிதாகத் தெரியாது. இந்த நிலையில் அந்த தடுப்பூசிக்கு எந்தப் போட்டியும் அவசியமில்லை!   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.