Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயிலும் இல்ல சிரமதானத்தில் ஈடுபடுவோருக்கு உதவினால் சூடு – புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துயிலும் இல்ல சிரமதானத்தில் ஈடுபடுவோருக்கு உதவினால் சூடு – புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

 
MI-696x348.png
 37 Views

மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகளில் ஈடுபடுவோருக்கு தண்ணீரோ, தேநீரோ வழங்கவேண்டாம். அவ்வாறு வழங்கினால் சுடுவோம் என்று இராணுவப் புலனாய்வு என்று தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் எச்சரித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதையொட்டி தமிழர் தாயகம் எங்கும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம் அருகேயுள்ள வீடுகளுக்குச் சென்றசிலர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்தினர். இவ்வாறு அறிமுகம் செய்தவர்கள் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்வோருக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது. அவர்களுக்கு தண்ணீரோ, தேநீரோ கொடுக்கக்கூடாது. அவ்வாறு மீறிக் கொடுத்தால் உங்களைச் சுடுவோம் என்று எச்சரித்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவீரர்களை அஞ்சலிக்கும் காணிக்குள் எவரும் நுழையாதவாறு வேலி அடைக்குமாறு புலம்பெயர் நாடு ஒன்றில் வசிக்கும் காணி உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்து நேற்றைய தினமே அந்த காணியில் வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

https://www.ilakku.org/துயிலும்-இல்ல-சிரமதானத்த/

மரணித்தவர்களை நினைவுகூரும் உரித்து உறவுகளுக்கு உள்ளது ; கஜேந்திரன் எம்.பி.சுட்டிக்காட்டு

 
%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%
 32 Views

போரில் மரணித்தவர்களை நினைவுகூரும் உரித்து அவர்களின் உறவுகளுக்கு உள்ளது. அதனைத் தடைசெய்ய சட்டத்திலும் இடமில்லை, சர்வதேச சட்டத்திலும் இடமில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சிரமதானப் பணிமூலம் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்துக்கு வருகின்றபோது இதற்கு அண்மையிலுள்ள சந்திகள், வீதிகள் எங்கும் படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதியால் சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதனால் சிரமதானப் பணிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி துப்புரவு செய்தவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பத்துப்பேருடன்தான் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டோம். போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான உரித்து உறவுகளுக்கு உள்ளது. அதனைத் தடைசெய்ய இந்த நாட்டுச் சட்டத்திலும் இடமில்லை. சர்வதேச சட்டத்திலும் இடமில்லை. ஆனால், படையினரும் பொலிஸாரும் அதற்கு மாறாக முற்றாகக் குழப்பும் விதமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

கோப்பாயில், கனகபுரத்தில் மக்கள் துப்புரவு செய்தபோது பொலிஸார் அச்சுறுத்தல் நிலைமையை ஏற்படுத்தினர். வடக்கில் பொதுவாக அச்சுறுத்தல் நிலைதான் காணப்படுகின்றது. படையினரதும் பொலிஸாரதும் நடவடிக்கையை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்

 

https://www.ilakku.org/மரணித்தவர்களை-நினைவுகூர/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘அஞ்சலி செலுத்துவதை தடுப்பது மனித  நாகரீகமற்ற செயல்’ விந்தன் கனகரட்ணம்


“இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பல ஆயிரம் போராளிகள் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். அந்தப் போராளிகள் விதைக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களது உறவுகள்  சென்று பிரார்த்தனை செய்யவும், அஞ்சலி செய்யவும் இந்த அரசாங்கம்  இடமளிக்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்துவது என்பது மனித  நாகரீகமற்ற செயல்” எனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்.

மேலும் அவர் கூறுகையில்,

“இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளை நினைவுகூருவதாக நினைத்து மக்களுடைய உணர்வுகளை தடுப்பது தவறு. தமது உறவுகளை நினைத்து நிம்மதியாக அவர்களின்  ஆத்மசாந்தி பிரார்த்தனைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். தற்போது முன்னெடுக்கும் அச்சுறுத்தல்களை நீக்கிக்கொள்ள வேண்டும்.

ஏனைய பொதுமக்கள் அரசியல்வாதிகள் கூட போராளிகளின் உறவினர் மற்றும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களும் துயிலுமில்லங்களுக்கு சென்று  அஞ்சலி செலுத்த வேண்டும் .அதையும் தடுத்து நிறுத்தினால், அது  கண்டிக்கப்படவேண்டிய  ஈனச்செயல் ஆகும்.

இந்த முறை இந்த அரசு எமது நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைபோடுமாக இருந்தால், போராளிகளின் பொற்றோர்களை ஒன்றிணைத்து அந்த தடைகளுக்கு எதிராக போராடுவோம்.

துற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றை கவனத்தில் எடுத்து சுகாதார நடைமுறைகளின்படி எமது போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்.” என்றார்.

https://www.ilakku.org/அஞ்சலி-செலுத்துவதை-தடுப/

மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி

suresh-000-1.pngமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவுகூர்வதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

யுத்தத்தினால் மடிந்து போன மக்களை போராளிகளை நினைவு கூர்வதற்கான ஒரு நடைமுறையை இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கின்றது. நினைவு கூர்வதைக்கூட இரகசியமாகச் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வந்திருக்கிறது. தமது மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை போராளிகள் என்று பார்ப்பதற்கு தமிழ் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் போராளிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள். எம்மைப் பொறுத்தவரையில், அவர்கள் விடுதலை வீரர்கள், புனிதர்கள், எமது விடுதலைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். ஆகவே அவர்களை நினைவு கூர்வதற்கான சகல உரித்தும், தகைமையும் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இது சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்ட நியமமும்கூட. எமது பிள்ளைகளுக்காக எமது உறவுகளுக்காக எமது விடுதலைக்குப் போராடியவர்களுக்காக நாம் கண்ணீர் சிந்துவதென்பதும் நினைவு கூர்வதென்பதும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் எமது அடிப்படை மனித உரிமையும் தார்மீகக் கடமையுமாகும்.

ஆனால், எம்மை அடக்கியாள முற்படும் அரசாங்கமானது, எமது நினைவுச் சின்னங்களை அடித்து நொறுக்கியது. துயிலும் இல்லங்களை தரை மட்டமாக்கியது. எமக்காக மரணித்தவர்களை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது என்று இப்பொழுது கூறிவருகின்றது. நாம் இன்னமும் அடக்குமுறையின் உச்சத்தில் இருக்கிறோம் என்பதைத்தான் அரசாங்கம் வருடாந்தம் வெளிக்காட்டி நிற்கின்றது. பயங்கரவாதிகளை நினைவுகூரக்கூடாது என்ற அடிப்படையிலும், கோவிட்-19 வைரஸ் தாக்குதல்கள் என்ற அடிப்படையிலும் மீண்டும் பொலிசாரும் இராணுவத்தினரும் வடக்கு  கிழக்கில் நினைவுகூர்வதற்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

துயிலும் இல்லங்களை துப்புரவு செய்பவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் அல்லது அத்தகைய செயல்களிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். ஒன்று கூடுவது சட்டத்திற்கு முரணானது என்று கூறுகின்றனர். ஆகவே அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டு தமிழ் மக்கள் தமது மறித்துப் போன உறவுகளை நினைவுகூர்வதற்காக அவர்களுக்கு உள்ள உரிமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் இருக்கக்கூடிய சுகாதார அச்சுறுத்தலான சூழ்நிலையில், நினைவு கூர்தல் எந்த அடிப்படையில் நடைபெற வேண்டும் என்ற வழிமுறையைக் குறிப்பிட வேண்டுமே தவிர, அதற்குத் தடைவிதிப்பதென்பது அநாகரிகமானதும் சட்டத்திற்கு முரணானதுமாகும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்தவர்களை நினைவு கூர்வது என்பதை வருடாந்தம் ஒரு பிரச்சினையாகவே அரசாங்கங்கள் மாற்றி வருகின்றன. நினைவு கூர்தலுக்காக ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்கள் போராட வேண்டியுள்ளது. தார்மீக அடிப்படையிலோ அல்லது சட்ட அடிப்படையிலோ அரசாங்கத்தினால் இந்த விடயங்கள் கையாளப்படுவதாக இல்லை. மாறாக, பொலிசாரையும் தமது படையினரையும் பாவித்து, தாம் விரும்பியவாறு அவர்கள் வழிநடத்தப்பட்டு அதனூடாக இத்தகைய நிகழ்வுகள் தடைசெய்யப்படுகின்றன.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், ஒவ்வொரு அரசாங்கமும் தாம் விரும்பியவாறு, இது தொடர்பில் தான்தோன்றித்தனமான முடிவினையே எடுக்கின்றன. எனவே இது நிறுத்தப்படவேண்டும். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரும் புதிருமாகப் பேசுவதை விடுத்து, இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முன்வரவேண்டும்.”

 

https://thinakkural.lk/article/90319

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“மாவீரர்கள் எமது இனத்தின் விடிவெள்ளிகள்”- யோ.கனகரஞ்சினி

 
1-121-696x398.jpg
 1 Views

தமிழீழ மாவீரர் மாதமான நவம்பரில், தாயக உறவுகள் தமது மாவீர உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து வருகின்றது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த போக்கு குறித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய கருத்தில்,

 “2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு, மாவீரர் நினைவு இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போதைய ஆட்சிமாற்றத்திற்குப் பின் மாவீரர்களுக்கோ, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கோ அஞ்சலி செலுத்தத் தடை உத்தரவுகளை அரசாங்கம் விதித்து வருகின்றது.

தியாகி திலீபன் நினைவு கூரலையும், நீதி மன்றத்தின் ஊடாக அனுமதி மறுக்கப்பட்டது.

மாவீரர்கள் எமது இனத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவுகள். நாங்கள் போரில் எங்களின் பெறுமதிமிக்க பிள்ளைகளை இழந்து இருக்கிறோம். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தற்போது நாட்டில்  பரவி வரும் கொரோனா தொற்றும் மக்களை ஒன்று கூட விடாது தடுத்துள்ளது. அவ்வாறு இல்லை என்றால் இலங்கை அரசாங்கம் என்ன தடையை விதித்தாலும்  அந்த தடைகளை கடந்து, எமது  மாவீர உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி இருப்போம். எமது விருப்பம் மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி செலுத்துவது தான்.  இருப்பினும் பொது அறிவித்தல் தற்போது இருப்பதனால் அதற்கான முன்னேற்பாட்டு சட்டத் திட்டங்களை கடைப்பிடித்து,  நாங்கள் எமது இருப்பிடங்களில் இருந்தவாறே  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.”

 

https://www.ilakku.org/மாவீரர்கள்-எமது-இனத்தின/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.