Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு பண்ணையாளரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு பண்ணையாளரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம்

November 18, 2020

gajen.png

 

மட்டு பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கடிதத்தின் விபரம் வருமாறு;

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள மேச்சல்தரை நிலப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளால் பண்ணையாளர்களுக்க உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கடந்த இரண்டரை மாதங்களாக பண்ணையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த கடந்த 15.11.2020 அன்று குறித்த மேச்சல் நிலப்பகுதியில் தங்கியிருந்த பண்ணையாளர்களது இருப்பிடங்களைத் தேடி வாள்கள் கத்திகளுடன் சென்ற பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நாள் காலக்கெடுவுக்குள் அனைத்துப் பண்ணையாளர்களும் அவர்களது கால்நடைகளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமெனவும் இல்லையேல் கொலை செய்வோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் செய்திகளை சேகரித்து வெளியிட்ட மட்டு ஊடகவியலாளர் செ.நிலாந்தன் பொலீசாரினால் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்திலும் மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகத்திலும் பண்ணையாளர்களால் முறையிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரை காவல்முறையினரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெ பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Mahinda-Rajapaksa-7.jpg

 

பண்ணையாளர்கள் எதிர்நோக்கியுள்ள உயிர் ஆபத்து நிலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் இன்று 18-11-2020 தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெரியப்படுத்தியுடன் கரடியனாறு பொலிசார் பண்ணையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டி பண்ணையாளர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் தொழில் செய்வதற்கு பெரும்பான்மையினத்தவர்களால் விடுக்கப்படும் நெருக்கடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு உடனடியாகத் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

 

https://thinakkural.lk/article/90481

நீங்கள் எழுதிய கடிதத்தை பிரதமர் வாசித்திருப்பாரோ தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் கடமையை செய்திருக்கிறீர்கள். இதையும்விட கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் தீவிரமாக இருப்பதையும் நாங்கள் அறிவோம். அவர்கள் அது சம்பந்தமாக பிரதமரை சந்தித்து பேசியது , அதட்காக ஒரு செயடக்குழுவை அமைத்து செயல்படுகிறார்கள்.

அது சரி , வடக்கின் நிலைமை எப்படி? வடக்காக காணிகள் அபகரித்து நெடுங்கேர்ணி ஊடக அவர்கள் ஊடுருவியது உங்களுக்கு தெரியுமா? இப்போது வவுனியா வடக்கு அவர்கள் வசமாக போகப்போவது பற்றியாவது எதாவது தெரியுமா?

இப்போது ஒரு லட்ச்சம் ஏக்கர் காணி யாருக்கு வழங்கப்போகிறார்கள் என்பதாவது தெரியுமா? எனவே கிழக்கு பிரச்சினைக்கு முன்பதாக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

கூட்ட்டமைப்பு கையாலாகாதென்றுதானே உங்களை தெரிவு செய்தார்கள். இருந்தாலும் என்ன, சிங்கள அரசு இங்கு யாரையுமே கணக்கிலெடுக்கப்போவதில்லை. அவர்கள் ஒரு திடடதுடன் செய்லபடுகின்றார்கள். அதன்படியே எல்லாம் நடக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.