Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள்

November 23, 2020

thevathasan.jpg

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதி ஒருவர் ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை  விடுத்துள்ளார். புதிய மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் எனும் அரசியல் இவ்வாறு ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை  விடுத்துள்ளார்.

கைதியால் அனுப்பப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. 

fd37cbe5-3e50-434f-8d01-beabda38382e-806

#அரசியல்கைதி #தூக்கிலிடுங்கள் #மகசீன்சிறை #தேவதாசன்

 

 

https://globaltamilnews.net/2020/153412/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி யானவர்களுக்கு உடன் தீர்வு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள்’-தமிழ் அரசியல் கைதி கோரிக்கை

 
1-116.jpg
 85 Views

வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என 
தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன், நீதி வேண்டம் அல்லது மரணம் வேண்டும், என தலைப்பிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

கனகசபை தேவதாசன், வயது 63, ஆகிய நான் பயங்கரவாதித் தடுப்புச் சடடத்தின் கீழ்க் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் எனக்கெதிராகத் தொடுக்கப்பட்ட 110 6194,12 மற்றும் 110 5638,11 ஆகிய 2 வழக்குகளிலும் முறையே 20 ஆண்டுச் சிறை மற்றும்: ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டன.

இத் தீர்ப்பை எதிர்த்து நான் மேன்முறையீடு செய்துள்ளதுடன், இவ் வழக்குகளை விரைவில்முடிவுக்குக் கொண்டுவர விரும்பி, இரண்டிலும் எனக்காக நானே வாதாடுகிறேன். ஆனாலும் மேற்படி 04 283,17 மற்றும் 0ரூ 413,18 ஆகிய 2 மேன்முறையீட்டு வழக்குகளும் நீதிநடைமுறையின் வீண் தாமதம் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக: முற்றாக முடங்கிவிட்டன.

இதன் மூலம்,

1. நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பு எனக்கு முற்றாக மறுக்கப்படுகிறது.
2. என் அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது.

இதனை விளக்கித் தங்களுக்கு சிறையூடாக 6 மாதங்களின் முன் கடிதம் அனுப்பினேன். துரதிருஷ்டவசமாக, அதற்குப் பதில் இன்னமும் வந்து சேரவில்லை. எனவே இவ்விடயத்தை இன்று வேறுவழியின்றிப் பகிரங்கப்படுத்துகிறேன்.

மேதகு ஜனாதிபதி அவர்களே,

1. எனது இந்த 2 மேன்முறையீட்டு வழக்குகளையும் துரித விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டு உதவுமாறும் ;

2. அல்லது இந்த 2 வழக்குகளிலும் நான் பிணைபெற ஆவண செய்துதவுமாறும் கோருகிறேன்.

3. மேற்சொன்ன கோரிக்கையை நிறைவு செய்யும் இயலுமை தங்களுக்கில்லை எனத் தாங்கள் கருதும் பட்சத்தில், அரசியல் யாப்பில் தங்களிற்குத் தரப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, என் தண்டனையை மரண தண்டனையாக தரமுயர்த்தி, ‘யுத்தக் குற்றவாளி’ என என்னைப் பிரகடனப்படுத்தி உடனடி யாகவே பகிரங்கமாக என்னைத் தூக்கிலிட உத்தரவிடுங்கள்.

என் இம் முடிவு தொடர்பில் யாரும் என்னை ஆற்றுப்படுத்த முனைய வேண்டாம். எனக்கு நீதி வேண்டும் அல்லது -மரணம் வேண்டும், அவ்வளவுதான்!

 

https://www.ilakku.org/வழக்கை-துரிதப்படுத்துங/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.