Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி உறுதி மொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Jun 12 8:16:30 EEST 2007

கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி உறுதி மொழி

கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் வெளி யேற்றப்படாமல் இருப்பதற்கு கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு ஜனாதிபதி உறுதி அளித் துள்ளார் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது

கொழும்பு விடுதிகளில் தங்கியி ருந்த வடக்கு, கிழக்கு மக்களை விடுதி களில் இருந்து வெளியேற்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பி யிருந்த பாரதூரமான நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் ஜனாதி பதியிடம் நேரில் எடுத்து விளக்கியிருந் தார். இது குறித்து தாய்லாந்திருந்து ஏற் கனவே தொலைபேசியிலும் செயலா ளர் நாயகம் தொடர்புகொண்டிருந்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது விரிவான பேச்சுக்களை நடத்தி யிருந்த செயலாளர் நாயகம் விடுதி களில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கு மக் கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை யுடனேயே கொழும்பு நோக்கி வந்தி ருந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். புலிகளின் நாசம் விளைவிக்கும் வன் முறை செயல்களுக்காக அப்பாவி மக் கள் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்றும், புலிகள் விடயத் தில் கையாளும் அணுகுமுறையினை அப்பாவிப் பொதுமக்கள் விடயத்தில் கையாளும் நிலையானது ஆரோக்கிய மான அணுகுமுறையல்ல என்பதையும் எடுத்து விளக்கியிருந்தார்.

பொலீஸ்மா அதிபரிடம்

விளக்கம் கோரப்பட்டுள்ளது

இதன்போது கருத்துத் தெரிவித்தி ருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்த தவறு குறித்து தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் இதற்கான விளக் கத்தை தான் பொலீஸ் மா அதிபரிடம் கோரியிருப்பதாகவும், இதுபோன்ற சம்ப வங்கள் இனியும் நிகழாது தடுப்பது குறித்து தான் அதிக கவனம் செலுத்து வதாகவும் தெரிவித்திருந்தார்.

இச்சந்திப்பின்போது விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் படும் அவலங்கள் குறித்தும் இன்னமும் கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த மக்களின் அச்ச உணர்வு குறித்தும் விரிவாக பேசப் பட்டது. கொழும்பில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவித்திருந்த ஜனாதிபதி விடுதி களில் இருந்து வெளியேற்றப்பட்டவர் களை மீண்டும் விடுதிகளில் வந்து தங்குவதற்கான ஒழுங்குகளைத் தாம் மேற்கொள்வதாகவும் இணக்கம் தெரி வித்துள்ளார்.

இதன் பிரகாரம் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் கொழும்பு திரும்பிக்கொண்டிருக்கின் றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதகமான தீர்மானத்தை எடுத்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களுக்கும், நியாயமான தீர்ப்பின்படி வெளியேற்ற உத்தரவு குறித்து இடைக் கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த நீதிமன்ற தீர்ப்பிற்காகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர் கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்திருந்தார் என்றுள்ளது.

நன்றி - உதயன்

சாதகமான தீர்மானத்தை எடுத்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களுக்கும், நியாயமான தீர்ப்பின்படி வெளியேற்ற உத்தரவு குறித்து இடைக் கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த நீதிமன்ற தீர்ப்பிற்காகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர் கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு ஜனாதிபதி, அவர் ஒரு மந்திரி, இவர்களிற்கிடையில் ஒரு உறுதிமொழி.

இதெல்லாம் ஒரு செய்தி...

ஏனய்யா பத்திரிகையின் பெயரையே கெடுக்கின்றீர்கள்?

வீடு கொழுத்தும் ராஜாவுக்கு கொள்ளி கொடுக்கும் மந்திரி!

1% இற்கும் குறைவான மக்கள் வாக்குகளை பெற்றவர் மக்கள் சார்பில் நன்றி கூறுகிறாராம்!

கவனம், மகிந்த அரசியலில் மக்களிடம் அடிவாங்கும் போது பதிலுக்கு டக்கிளசுக்கு பரிகாரம் செய்யப் போகிறார்!

எல்லோரையும் வெளியேற்றினால் யாரை கடத்துவது யாரிடம் கப்பம் வாங்குவது? உயர்நீதிமன்றம் தடை போட்டுள்ளது. பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார், இதற்குள் இவர் ஏதோ ஜனாதிபதியிடம் பேசி தமிழர்களுக்கு விமோசனம் கொடுத்தது போல நன்றி தெரிவிக்கிறாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன் யார் தமிழினத்;திற்கு குரல்கொடுப்பதற்கு இவனின் தயவு எங்களிற்கு தேவையேயிள்ளை.இவனும் ஒரு மந்திரியா

யாரோ சொன்னாங்க டக்குவும் காமினி மகாவித்தியாலத்தில் சமைத்த உணவுக்கு வரிசையில் நின்றாரென :rolleyes:<_< :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.