Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் போர்ச்சூழலை எதிர்கொள்ள இந்தியக் கடற்படையினர் தயார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Jun 12 8:19:05 EEST 2007

ஈழப் போர்ச்சூழலை எதிர்கொள்ள இந்தியக் கடற்படையினர் தயார்!

ஈழத்தில் மோதல் நிலைமைகள் தொடர் வதால் இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத் தின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக் கப்பட்டிருப்பதுடன் கடற்படையினரும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் அந் நாட்டுக் கடற்படைத் தளபதி தகவல் தெரி வித்திருக்கின்றார்.

அரக்கோணம் ராஜா கடற்படைத்தளத்தில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் ஹெலிக்கொப்டர் பயிற்சி நிகழ்வில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்ட வேளை யிலேயே கிழக்குப் பிராந்தியத் தலை மைக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ராமன் பிறேம் சுதன் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கான காரணமாக அந்நாட்டு அரசுக் கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கடற்பகுதியி லும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

எவ்வாறாயினும் எந்த சவாலையும் எதிர் கொள்ள இந்தியக் கடற்படை தயாரா கவே உள்ளது. நம்பிக்கையுடனே வீரர்கள் உள்ளனர். 50 ஹெலிக்கொப்டர்களும், 50 கப்பல்ளும் தயார் நிலையில் எந்தச் சவா லையும் முறியடிக்கும் வகையில் நிறுத் தப்பட்டிருக்கின்றன என்றும் பிறேம் சுதன் தகவல் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தில் கடல் மார்க்கம் முக்கியத்துவம் வாய்ந்த காரணத் தினால் அதனைப் பாதுகாப்பது மிக முக் கியமானது என்றும் அவர் குறிப்பிட் டார்.

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

என்ன இரண்டு நாட்டையும் பிடிக்க போகினமோ அல்லது பலாலி ஆமியை ஏத்த ஆயுத்தமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில சண்டை நடக்கக்குள்ள உவங்கள் என்னத்தை எதிர்நோக்கி எதுக்குத் தயாராகிறாங்களெண்டு விளங்குதில்ல. சண்டையைத் தொடங்கவிடாமத் தடுக்கிறதுக்கு சும்மா வெருட்டினம் போல கிடக்குது. இவ்வளவு காலமும் பிரச்சனையை இந்தளவுக்கு வளரவிட்டுக் கையாலாகாத்தனமாக இருந்தவங்களால இனிமேலும் எதையாச்சும் நிறுத்திச் சமாதானத்தைக் கொண்டுவரலாமெண்டு எனக்கெண்டா விளங்கையில்ல.

ஆமியை ஏற்றி திருமலை சேர்க்கவாக்கும் சீ திருமலையிலும் அவங்களுக்கு என்ன வேலை எங்க இறங்கிறது கொழும்பில சேர்பதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை பாகிஸ்தானோ சீனாவோ வந்து தலையிடாமப் பார்த்துக்கொள்ளத்தான் ஆயத்தமாக இருக்கப் போறாங்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்மை அதுதான.; ஏன் என்றாள் சிங்களப்கடற்படையுடன் சேர்ந்து கடலில் இந்தியாவிற்கு எதிராகசெயற்படலாம். அப்படி செயற்பட்டுவிட்டு விடுதலை புலிகளின்மீது குற்றத்தை சுமர்திவிடுவார்கள் அதனாள்தான்

அப்ப கதையபாத்தா ஒற்றைக்கையை கட்டிக்கொண்டு ஒரு சிகரெட் முடியுமுன் இலங்கையை கைப்பற்ற மீண்டும் முயலுகினம் போலிருக்கிறது. ஹா :rolleyes: ஹா <_< ஹா :D :P

ஓயாத அலைகள்மூலம் ஆனையிறவை கைப்பற்றி தெடர்ந்து கைதடி வரை முன்னேறிய சமயம் இந்திய கப்பல்கள் புறப்பட தயாரனது என்ற செய்திகள் வெளிவந்தன. திருவனந்தபுரத்தில் இருந்து கப்பல்கள் தயார் என்று செய்திகள் வந்தன. சந்திரிக்காவும் காப்பற்றுங்கோ என்று பதறிக்கொண்டு திரிந்தார். இப்போதும் விட்டகுறையில் இருந்து ஓயாத அலைகள் ஆரம்பித்தால் கப்பல்கள் புறப்படும் என்ற நிலை வரலாம். தற்போது பகிஸ்தான் சீனாவிடம் இருந்து ஆயுதம் வாங்க வேண்டாம் நாமே தருகின்றோம் என்பதும். ரம்புக்வெல அண்ணா என்பதும் நாராயணசாமி தம்பி தற்காப்பு யுத்தம் தான் செய்கின்றான் என்பதும் புது பாசங்கள் பெhங்கி மீண்டும் வழியத்தொடங்கியுள்ளது.

அமரிக்கா ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் சண்டை பிடிப்பது போல தாங்களும் ஒரு வல்லரசு, அணுவாயுதங்கள் வைத்திருக்கும் ஒரு நாடு. தங்கட வல்லரசுத்தனத்தை 50 வருடம் இனவாத ஒடுக்கு முறையால் செத்து சீரளிந்து நெந்து நூடுல்ஸ் ஆகி கிடக்கும் மக்களெட்ட இரண்டாவது முறையும் காட்டினால் என்ன என்ற ஒரு எண்ணம் இருக்கலாம்.

பக்கத்தில உள்ள சீனா கடந்த ஒலிம்பிக் விழையாட்டுப்போட்டியில் 32 தங்கப்பதக்கங்களையும் 17 வெள்ளி 14 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது. இந்தியா ஒரு வெள்ளி பதக்கத்தை மட்டும் வென்றது. திறமையானவர்கள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. திறமையனவன் தாழ்த்தப்பட்ட வாகுப்பை சார்ந்தவனாக வறுமைப்பட்டவனாக இருப்பான். அவனுக்க சந்தர்ப்பம் கிடைக்காது. நீங்கள் பலமானவர்கள் பிரமாண்டமானவர்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. உங்கள் பலத்தையும் பிரமாண்டத்தையும் வல்லரசுத்தனத்தையும் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் எடுப்பதில் கட்டுங்களேன், எதுக்கு சுதந்திரமா வாழ்றதுக்காக முப்பது வருசத்துக்கு மேலா பல்லாயிரம் உயிரை கொடுத்து போரடும் எங்களோட நொட்டிக்கொண்டு இருக்கிறீங்கள்?

Edited by sukan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.