Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனா்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனா்

November 29, 2020

beach-dead.jpg

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர்.

இந்தச் சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

தையிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். அவர்களில் ஒருவர் குடும்பத்தலைவர் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதுடன் காங்கேசன்துறை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் #காங்கேசன்துறை #அலையில் #காணாமற்போயுள்ளனர் #தையிட்டி

 

https://globaltamilnews.net/2020/153705/

 

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்று அடித்துச் செல்லப்பட்ட இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு 

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் , மாசிலாமணி தவச்செல்வம் என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரது சடலம் நேற்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டது.

இதையடுத்து மற்றையவரான மாசிலாமணி தவச்செல்வமிம் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரது சடலங்களும் உடல்கூறாய்வு பரிசோதனைக்காக  தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்று அடித்துச் செல்லப்பட்ட இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பருத்திதுறையில் சிறுமி ஒருவரும் தூக்கிட்டு பலியானதாக செய்தி சொல்கிறது  நாளுக்கு நாள் அநியாயச்சாவுகள் மட்டும் மலிந்து செல்கிறது வடகிழக்கில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பருத்திதுறையில் சிறுமி ஒருவரும் தூக்கிட்டு பலியானதாக செய்தி சொல்கிறது  நாளுக்கு நாள் அநியாயச்சாவுகள் மட்டும் மலிந்து செல்கிறது வடகிழக்கில் 

பருத்தித்துறையில் சிறுமி சடலமாக மீட்பு; விளையாட்டு விபரீதமானது!

சாரையடியில் மரணித்த சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்த சிறுமி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில்கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். சுருக்கு இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.

கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

– முன்னைய இணைப்பு

பருத்தித்துறை – சாரையடி பகுதியில் வீட்டில் தனித்திருந்த 09 வயது சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டியால் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாய், தந்தையர் வெளியே சென்ற நிலையில் சிறுமி வீட்டில் தனித்திருந்தார் என்றும் வீட்டார் திரும்பி வந்து பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருந்தபோதிலும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் சிறுமி சடலமாக மீட்பு; விளையாட்டு விபரீதமானது! | NewUthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.