Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவேந்தல் உள்ளதா உரிமை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல் உள்ளதா உரிமை?

-என்.கண்ணன்

 “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்”

 “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை”

 

spacer.png

தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினைவேந்தல் செய்வது உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை, அடிப்படை உரிமையும் கூட.

எதிரியாக இருந்தாலும், இறந்த பின்னர் அவனது உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும், உடலத்தை மரியாதையாக கையாள வேண்டும், அதனை அடக்கம் செய்ய வேண்டும் என்கின்றன சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும், போர்ச் சட்டங்களும், இவ்வாறான நிலையில், போர் ஒன்றில் உயிர் நீத்தவர்களை நினைவில் கொள்ளுதல், அவர்களுக்காக தீபம் ஏற்றுதல், மலர் வளையம் வவைத்து அஞ்சலி செலுத்துதல் என்பன சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்நீத்தவர்களை நினைவில் கொள்ளும் சர்வதேச நிகழ்வுகள் இப்போதும் நடத்தப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில்  நவீன வரலாற்றுக்கு முன்னரே, போரில் உயிர் துறந்தவர்களை நினைவில் கொள்ளும் மரபு ஒன்று இருந்தது. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனை, போரில் தோற்கடித்த துட்டகெமுனு, எல்லாளனின் சமாதியை அனைவரும் வணங்கி விட்டே செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான்.

இவ்வாறான ஒரு மரபை பேணி வந்த இலங்கையில் தான், துட்டகெமுனுவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்கள், மாவீரர்களை நினைவு கூரும் மரபை தமிழர்களிடம் இருந்து அழிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள்.

போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் உரிமையை மறுத்து விட்டால், அதனை தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற தப்புக் கணக்கை அவர்கள் திரும்பத் திரும்பப் போட்டுக் கொள்கிறார்கள். அதேவேளை, நினைவேந்தல் உரிமை தொடர்பாக இந்தமுறையும், சர்ச்சைகள் எழுந்தபோது, அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும், போரில் உயிரை இழந்த உறவுகளை நினைவு கூருகின்ற உரிமை தமிழர்களுக்கு உள்ளது என்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள்.

சர்வதேச சட்டங்களிலும், பிரகடனங்களிலும் இதற்கான உரிமைகள் உள்ளன என்ற இரா.சம்பந்தன் முதற்கொண்டு.எம்,ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் கூறியிருந்தார்கள்.

சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் கடந்த வாரம் கேசரி வார இதழில் எழுதியிருந்த பத்தியில், இந்த நினைவேந்தல் மறுப்பானது, ஒரு அடிப்படை உரிமை மீறல், கலாசார உரிமை மீறல், உள ஆற்றுப்படுத்தல் உரிமை மீறல், இணக்க அரசியல் மீறல்என பல மீறல்களை உள்ளடக்கியுள்ளதுஎன்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது. நினைவேந்தல் உரிமை மறுக்கப்படுவது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை மீறல் என்பது சட்டத்துறையில் விற்பன்னர்களான அரசியல் தலைவர்கள் பிரமுகர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனாலும், சட்டரீதியாக - சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமையாக கூறப்படும், நினைவேந்தல் உரிமை, தமிழர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் இந்த உரிமையை மறுப்பது இதுதான் முதல் முறையல்ல.

இப்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பதவியில் இருந்த 2015ஆம் ஆண்டு வரையிலும் இவ்வாறான நிலை தான், காணப்பட்டது. கடந்தமுறை கூட பலத்த சந்தேகங்கள், கேள்விகளுடன் தான் நினைவேந்தலை நடத்தக் கூடிய நிலை இருந்தது.

இந்தமுறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை போட்டது தொடக்கம், திலீபன் நினைவேந்தலைத் தடை செய்யும் கட்டளைகள் பெறப்பட்டது வரை – நடந்த சம்பவங்கள் எல்லாமே, மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்பதை வெளிப்படுத்தியிருந்தன.

ஆனாலும், திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை.

நினைவேந்தலுக்கு சட்டரீதியான உரிமை உள்ளது என்றால், அதனை சட்டரீதியாக பெறுவதற்கு முயன்றிருக்க வேண்டும்.

நாட்டின் உயரிய நீதிமன்றங்களை நாடியிருக்க வேண்டும். நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்தும் கட்டளைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் மாவீரர் நாள் நெருக்கும் வரை- இன்னும் சொல்லப் போனால், பொலிஸார் தடை ஆணை கேட்டு நீதிமன்றங்களை நெருங்கத் தயாராகும் வரை சட்டரீதியாக எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவேந்தும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதனை அறிக்கைககளின் ஊடாக தெரிவிப்பதை விட, சட்டரீதியாக உள்ள உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வது தான் முக்கியமானது. 

அதுதான் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது.

ஆனால் தமிழ்த் தலைமைகளும், கட்சிகளும் அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. கடைசி நேரம் வரை அவர்கள், நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

இதன் மூலம், அவர்களின் கவனம் நினைவேந்தல்களில் இருந்து திருப்பப்பட்டு. நீதிமன்ற வழக்குகளின் மீது, கவனம் செலுத்தும்நிலைஉருவானது.

இதனை அரசாங்கமும், பொலிஸாரும் ஒரு உத்தியாகவே கையாண்டு வருகின்றனர். அதனை தமிழ்த் தலைவர்கள் யாரும் உணர்வதாகவே தெரியவில்லை.

உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் இந்த உரிமையை அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

நினைவேந்தலுக்கான உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என சர்வதேச சட்டங்களை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்கள், அந்தச் சட்டங்களைக் கொண்டு தமிழ் மக்களுக்கு அந்த உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதுதன் முறையானது.

இனப்படுகொலை நடந்ததா- இல்லையா என்று ஆதாரத்தை நிரூபிக்குமாறு கேட்பது போன்று இந்த விடயத்துக்கு பெரிதாக எந்த ஆதாரங்களும் தேவையில்லை.

தமிழ் மக்களின் தொன்மையை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் போன்று, இதற்கு ஆதாரங்களைள தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கமே இந்த உரிமை கிடையாது என்று கூறுகிறது. இதற்கு தடைவிதிக்குமாறு கோரி நீதிமன்றக் கட்டளைகளையும் பெற்றிருக்கிறது.

ஆக அரசாங்கத்தினதும், நீதிமன்றங்களினதும் கட்டளைகள் உத்தரவுகளை வைத்துக் கொண்டே இந்த உரிமை மறக்கப்படுகிறது என்பதை சர்வதேச முறையீடுகளுக்கு கொண்டு செல்ல முடியும்.

வெறுமனே இந்த முறையீடுகளை அறிக்கைகளாக கொடுப்பதில் இருந்து விலகி, மாற்று வழிகளில் இந்த உரிமைகளை நிலைநாட்ட முனைய வேண்டும்.

அவ்வாறான முயற்சிகளில் ஏன் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் யாருமே சிந்திக்கவில்லை. எவ்வளவு காலத்துக்குத் தான் சர்வதேச சட்டங்களில் உள்ள உரிமை மறுக்கப்படுகிறது என்று அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

அறிக்கை அரசியலில் இருந்து விலகி அவர்கள், வெளியே வர வேண்டும், ஏற்றுக் கொள்ளப்படட நியமங்களின்படி தமிழர்களுக்கு உரிமைகள் உள்ளனவென்றால், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது தான்தலைமைக்கு அழகு.

 

https://www.virakesari.lk/article/95543

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.