Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக அகதிமுகாம்களில் தங்கியிருந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை: உளவுப் பிரிவு, பொலிஸார் அதிர்ச்சி.

Featured Replies

தமிழக அகதிமுகாம்களில் தங்கியிருந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை:.

தமிழகத்திலுள்ள பல்வேறு அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தமிழ்நாடு உளவுப் பிரிவு பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தற்போது 19 ஆயிரத்து 200 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் இவர்களில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உளவுப் பிரிவு பொலிஸாரின் கவனயீனமே இவ்வாறு அகதிகள் காணாமல்போயுள்ளமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம், திருச்சி, கொட்டப்பட்டுஆகிய அகதிமுகாம்களிலேயே அதிகளவான இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சிறிய அளவிலுள்ள 105 முகாம்களிலும் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிமுகாம்களிலிருந்து வெளியே செல்லும் அகதிகளைக் கண்காணிக்க தனிப்பிரிவு மற்றும் உளவுப் பிரிவு பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, மேற்படி 2 ஆயிரத்து 500 பேர் கானாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் கவனயீனமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, அகதிகள் படகுகளில் இலங்கை செல்வதும் அங்கிருந்து அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் தமிழகக் கடற்கரை பகுதிகளில் நடமாடுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுவருவதாகவும் ஆயுதங்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்துகள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உளவுப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆயிரக்கணக்கில் அகதிகள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. நிவாரண நிதி மற்றும் இலவச வீடு போன்ற சலுகைகளை கூறி இலங்கையை சேர்ந்த சிலர் இவர்களை அழைத்து செல்கின்றனர். அவர்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களா? என்பது எங்களுக்குத் தெரியாது. எங்கிருந்து அகதிகளாக வந்தார்களோ அதே நாட்டுக்குத்தான் அவர்கள் திரும்பி செல்கின்றனர் என்று மேலும் அவர் கூறினார்.

-Tamilwin-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அண்மையில் சிட்னியில் நடைபெற்ற மாமனிதர் ஜெயக்குமாரின் அஞ்சலி நாளில், இந்தியா உளவு அமைப்பு தமிழக அகதி முகாமில் உள்ள சில இளைஞர்களை பண ஆசை காட்டி, தென் தமிழீழத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போரிட ஒட்டுக்குழுக்களாக அனுப்பிய சம்பவத்தை விபரித்தார்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவைக்குறைக்க, இந்தியா உளவு அமைப்பும், தமிழ் மீது வெறுப்புற்றவர்களும் பீடி கடத்தியவர்களைப் புலிகள் என்றும், அப்பாவி தமிழக மீனவர்களைக் கொன்றது புலிகள் என்றும் பொய்யான பரப்புரைகளை பரப்பியும், சதி நாடகங்கள் நடாத்தியதும் தெரிந்ததே.

அது போல இந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை என்ற செய்தியைப் பரப்பி, தமிழகத்தில் 2500 புலிகள் அகதிகளின் போர்வையில் வந்திருக்கிறார்கள் என்று தமிழக உறவுகளைப் பயப்படுத்த இந்த உளவு அமைப்பின் திட்டம் தீட்டப்பட்ட சதியாகவும் இருக்கலாம்.

பத்திரிகைச் செய்திகளையும் மூன்றாம் தரப்பு குழுக்களையும் நம்பியே இந்திய உளவு பிரிவு காலத்தை ஓட்டுகிறது. இன்னுமொரு நாடாக இருந்தால் அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறியவர்களைக் கண்டு பிடித்த பின்னர்தான் இந்த செய்தியை வெளிவிட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்னை இவர்கள் தினம் தினம் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவிகளை பிடித்துச்சென்று சித்திரவதை செய்தால் தப்பி ஓடாமல் என்ன செய்வார்கள்.?

செத்தாலும் பறவாயில்லை திருப்பி அங்கேயே சென்றுவிடுவோம் என்று போய்விட்டார்களோ என்னவோ!

தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பவர்கள் அகதி முகாம்களில் இருந்தே பெரும்பாலும் வந்தவர்களாக இருக்கின்றனர். முகாமை விட்டு வெளியேறி நகரங்களுக்கு சென்று காவல் துறையினரிடம் பதிவு செய்து தங்கியிருப்பார்கள். இந்த பதிவு எடுப்பதற்கு 20 ஆயிரம் வரை அல்லது அதற்கும் கூடுதலாக காவல்துறைக்கு கொடுக்க வேண்டும். வெளிநாட்டு உதவி இல்லாத மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தொடர்ந்து முகாம்களில் தங்கியிருப்பார்கள். இது ஒரு சாதாரண நிகழ்வாகும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் இப்போது இவர்கள் வாயை பிளப்பதை பார்த்தால் கந்தப்பு அண்ணன் சொன்னது போல் இவர்களை புலிகளோடு சம்மந்தப்படுத்த ஒரு திட்டமாக இருக்கலாம். காணவில்லை என்ற செய்தியை உளவுத்துறை சொன்னால் போதும் ; பத்திரிகைகள் விதம் விதமாக ஊதி பற்ற வைத்துக்கொண்டு இருப்பார்கள். அரசியல் வாதிகள் இந்த செய்தியை கொண்டு அரசியல் செய்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.