Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார்

சிறிலங்காவின் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு ஆய்வு உயர் அதிகாரியும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான கலாநிதி டி.ஏ.ஐ. முனிந்திரதாச (41) கடுமையான நுரையீரல் நோய்காரணமாக இஸ்ரேலில் மரணமடைந்துள்ளார்.

பாதுகாப்புத்துறை தொடர்பான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை இஸ்ரேலுக்கு மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புகள் பொறியியல் துறையின் விரிவுரையாளரான அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட்டறை ஒன்றில் கலந்து கொள்வதற்குமாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சென்றிருந்தார்.

எனினும் அங்கு அவர் கடுமையாக சுகவீனமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும் அது பலனளிக்காது நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பிரேத பரிசோதனைகளை சிறிலங்காவில் நடத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

1966 ஆம் ஆண்டு பிறந்த முனிந்திரதாச, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் தனது பட்டப்படிப்பை முடித்ததுடன், பிரித்தானியாவில் உள்ள லிவபூல் பல்கலைக்கழகத்தில் காலாதிதிப் பட்டத்தையும் பெற்றவராவார்.

1990 ஆண்டில் இருந்து பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணியாற்றிவந்த இவர், சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் திருத்த வேலைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட இருந்த பல்குழல் உந்துகணை செலுத்திகளை உள்ளுரிலேயே திருத்தியதன் மூலம் பெருமளவு பணத்தை அரசுக்கு மீதப்படுத்தி கொடுத்திருந்தார்.

இவரது மரணம் தொடர்பாக முழு அளவிலான விசாரணைகள் நடைபெறும் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட்டறை ஒன்றில் கலந்து கொள்வதற்குமாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சென்றிருந்தார்.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் திருத்த வேலைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட இருந்த பல்குழல் உந்துகணை செலுத்திகளை உள்ளுரிலேயே திருத்தியதன் மூலம் பெருமளவு பணத்தை அரசுக்கு மீதப்படுத்தி கொடுத்திருந்தார்.

ஆயுதங்களை பார்வையிட்டுவிட்டு இதையும் உள்ளுரிலேயே தயாரிக்கலாம் என்றிருப்பார்!

ஆத்திரமடைந்து இஸ்ரேலியரின் வேலையாக இருக்கலாம்!

இலங்கைக்கு அட்டமத்தில சனி!

இஸ்ரேலுக்கு காசு குடுத்து பயிற்ச்சி எடுக்கிறது இலங்கை சிங்களவன் பாதுகாப்பு தரப்புக்கு புதிசு இல்லை.... ஆனால் காசை குடுத்து உயிரை விடுகிறது எண்டது புதுசுதான்...!

கந்தக நெடி தாங்காமல் அவரின் நுரையீரல் புட்டுக்கொண்டது எண்டு செய்தி வந்தாலும் வரலாம்... அதுதான் கௌரவமாய் இருக்கும்...

Edited by தயா

குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பிரேத பரிசோதனைகளை சிறிலங்காவில் நடத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

புலனாய்வு செய்து புலிகளின்மேல் பழியைப் போடுவதற்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பல்கலை. பேராசிரியர் மரணம்

கொழும்பு, ஜூன் 18:இலங்கை விமானப் படை, இஸ்ரேலிடம் இருந்து வாங்கவுள்ள உளவு விமானத்தை பார்வையிட ராணுவப் பிரதிநிதிக் குழு இஸ்ரேல் சென்றது. இக்குழுவில் இடம்பெற்றிருந்த பல்கலை. பேராசிரியர் மரணமடைந்தார்.

மொரடுவா பல்கலையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் துறையின் பேராரசியர் அமித் முனிந்தரதாஸô (41). இலங்கை விமானப்படை வாங்க திட்டமிருந்த விமானத்தை பார்வையிட்டபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் இறந்துள்ளார்.

நிமோனியாவால் அவர் இறந்துள்ளார் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆனால் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடந்த வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இஸ்ரேலிலிருந்து கொண்டு வரப்பட்ட அவருடைய உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இதுகுறித்து நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் சென்ற பிரதிநிதிக்குழு விமானச் சோதனையை நிறைவு செய்யாமல் இலங்கை திரும்பியது.

தினமணி

இஸ்ரேல் ம(h)து கூடி மண்டைய போட்டிருப்பார் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.