Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் தாக்குதல் :காத்தான்குடியில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல் :காத்தான்குடியில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது

 

      by : Jeyachandran Vithushan

http://athavannews.com/wp-content/uploads/2020/06/ARREST_sattamani.jpg

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணிவந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 ஆண்களும் 6 பெண்களுமாக 21 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் :காத்தான்குடியில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைத் தாக்குதல் பயிற்சி- மட்டக்களப்பில் ஆறு பெண்கள் கைது!

 
1-48-696x395.jpg
 42 Views

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி சஹ்ராம் ஹாசிம்மிடம் தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்றார்கள் என்ற சந்தேகத்தில் பெண்கள் ஆறு பேர் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலிரு்நது சென்ற பயங்கரவாத தடுப்புபு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளே குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணொருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நேற்று, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், மட்டக்களப்பு விஷேட பொலிஸ் குழுவினர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடாத்திய சிறப்பு நடவடிக்கையில் 20 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 21/4 தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்ட விவகார விசாரணைகளில் ஏற்கனவே 15 ஆண்களும் மூன்று பெண்களுமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தற்போது மேலும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

https://www.ilakku.org/தற்கொலைத்-தாக்குதல்-பயிற/

அதாவது இன்னும் சரியான முறையில் விசாரணை செய்து முடிக்கவில்லைபோல தெரிகிறது. அன்மையில் அமைச்சரின் கூற்றுப்படி விசாரணை இறுதி நிலைக்கு வந்து எல்லோரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இம்மாதத்துடன் விசாரணை முடித்து சடடமா அதிபர் திணைக்களத்துக்கு பரப்படுத்த இருப்பதாகவும் கூறி இருந்தார். அப்படி என்றால் இப்போதும் கைதுகள் நடப்பது இன்னும் விசாரணைகள் தாமதமாக சந்தர்ப்பம் இருக்கிறது. இவர்கள் கொடுக்கும் தகவல் ஊடக இன்னும் கைதுகள் தொடர சந்தர்ப்பம் இருக்கிரது. எனவே விசரனை முடிய இன்னும் சில காலம் செல்லலாம். கர்தினால் மயக்கம் ரஞ்சித் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.