Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தமிழரசை வழித்துக் துடைக்க தயாராகும் டெலோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் தமிழரசை வழித்துக் துடைக்க தயாராகும் டெலோ!

  • December 10, 20205:38 am

(நித்தி மித்திரன்)
கிழக்கில் தமிழரசுக்கட்சி, கிழக்கின் தேசியவாதிகள்,கருணா,பிள்ளையான் ஆகிய தரப்பினரை எதிர்கொள்வதை விட டெலோவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தங்களை எதிர்கொள்வதே பெரிய வில்லங்கமாக உள்ளது. குறிப்பாக மட்டு. மாநகரசபை முதல்வர் சரவணபவானை நீக்கி விட்டு உதவி மேயராக உள்ள சத்தியசீலனை நியமிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறது டெலோ. கட்சிக்கு அழுத்தம் கொடுத்தாவது பேச்சாளர் பதவியை எடுத்துவிடலாம் எனவும் கனவு காண்கின்றது டெலோ.

தூண்டில் போட்டால் மீன் சிக்கலாம். ஆனால் சுறாவே சிக்குமென ஆழம் பார்க்கிறது டெலோ. மட்டு மாநகர சபை பாதீடு இன்னமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை சபையில் இது சமர்பிக்கப்பட்டால் தோற்கடித்தே தீருவோம் என சமிக்ஞை காட்டியுள்ளது டெலோ. கண்டிப்பாக பிள்ளையான் கட்சி போன்றவை எதிர்த்தே வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கிறது. டெலோ.

ஆனால் மேயர் சரவணபவனே பரவாயில்லையே என்று பிள்ளையான் கருதுவதாக தெரிகிறது.

தொத்துப்பறி ஆட்சிகளே பெரும்பாலான உள்ளுராட்சிச் சபைகளில் நடைபெறுகிறது, ஆட்சியைப் பிடிப்பதற்கு நடந்த போராட்டங்களை விட வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றி அதனைக் தக்கவைப்பதே திண்டாட்டமாக உள்ளது. யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை ,வாகரை பிரதேசசபை என கூட்டமைப்பு பல சபைகளில் வரவு செலவு திட்ட விடயத்தில் தோல்வி கண்டது. பிள்ளையானின் கட்சி கோறளைப்பற்று பிரதேசசபையில் ( கிரான் + வாழைச்சேனை) மட்டுமே ஆட்சியமைக்க முடிந்தது. பிள்ளையானின் சொந்தக்கிராமம் அடங்கும் இப் பிரதேசத்தின் ஆட்சியை தக்கவைப்பதில் பெரும் நெருக்கடியை அக் கட்சி சந்திக்கிறது. இது சம்பந்தமாக கடந்த செவ்வாய் கலாட்டாவும் நடந்துள்ளது. இந்த ஆட்சியை தக்கவைக்க முடியாமல் போனால் ஏனைய இடங்களில் கூட்டமைப்புக்கு சாதகமாக நிலைப்பாட்டை பிள்ளையானிடம் எதிர்பார்க்க முடியாது .
இந்த நிலையைச் சாக்காக வைத்து கட்சிக்குள் குடைச்சலைக் கொடுத்து மட்டு. மேயர் பதவியைப் பிடிப்பது; சாத்தியமாகாவிடின். எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் 50 வீத இடஒதுக்கீட்டை பெறுவது என்ற வியூகத்தை டெலோ முன்னெடுக்கிறது. மிகுதி 50 வீதத்துக்குள்ளையே புளொட் மற்றும் ஜனநாயகப் போராளிகளுக்கும் இடமளிக்க வேண்டிய சங்கடம் தமிழரசுக்கட்சிக்கு ஏற்படும் .

இதற்குள் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மட்டக்களப்பில் தலைமைதாங்கும் அருண் தம்பிமுத்து கூட்டமைப்புக்குள் இடம் தேடுவதைப் பற்றி ஆலோசித்து வருகிறார். அவருடன் தொடர்புகொண்ட டெலோ தரப்பு “ஏன் தமிழரசுக்கட்சி உறுப்பினராக முயற்சிக்கின்றீ ர்கள்; எமது கட்சி மூலமாக கூட்டமைப்புக்குள் இடம்பெறலாம்” என வலை வீசியதாக தெரிகிறது.

டெலோ என்றால் இரண்டு பேர்தான் பழைய உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளார்கள் ஏனையவர்கள் அரசியலுக்காக அந்த பட்டியலுக்குள் வந்தவர்கள் தானே; இதனை விட தமிழரசுக்கட் சிக்குள் இணைந்து விடலாம் எனக் கருதுகிறார் அருண்.

தமிழரசுக் கட்சிக்கும் தனது குடும்பத்துக்கும் தலைமுறையாக இருந்த தொடர்புபற்றி எதுவும் அறிந்திராதபடியால்தான் இவ்வாறு தெரிவித்தார்களென அருண் தம்பிமுத்து உணர்ந்தார்.
இவரது தாத்தா செனட்டர் மாணிக்கம்,;தாய் கலா மாணிக்கம்;தந்தை சாம் தம்பிமுத்து. ஆகியோர் மட்டக்களப்பின் தமிழரசுக் கட்சியின் முன்னோடிகளே

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் 305 புலிகளின் மாவீரர் குடும்பங்கள் உள்ளனர். தற்போதைய மட்டு. மேயர் சரவணபவானின் கல்லடி ஊரில் மட்டும் 60 பது குடும்பங்கள் உள்ளன. இதனைவிட டெலோ மீதான அதிருப்தி இங்குள்ள மாவீரர் குடும்பத்தினரிடம் உள்ளது. லெப். அரசன் , லெப் . கிளிக்குமார். லெப்.ஜஸ்டின் முதலான போராளிகளை டெலோவே சுட்டுக்கொண்டது.மேலும் 17 போராளிகளின் மரணத்துக்கு டெலோவே காரணமாக இருந்தது. டெலோவை கூட்டமைப்புக்குள் இணைத்தாலும் விருப்புவாக்கில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலையில் இந்த 20 மாவீரர் குடும்பங்களும் இருக்க மாட்டார்கள் போன்ற விடயங்களை கவனத்தில்கொண்டே அருண் தம்பிமுத்து இந்த முடிவை எடுத்துள்ளார் போல் உள்ளது.

ஆரையம்பதியிலும் டெலோ சார்பான வரையே பிரதேசச்சபைத் தலைவராக்க வேண்டுமென அக்கட்சி குடைச்சல் கொடுக்கிறது. அங்குதான் டெலோ உறுப்பினர்களால் விஜி எனும் உயர்வகுப்பு மாணவி கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் நிர்வாணமாக நடத்தி செல்லப்பட்டு ஆற்றங்கரையில் கொலைசெய்து ஆற்றில் வீசினார்கள். இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ராம் என்ற உறுப்பினர் மட்டும் இன்னும் உயிருடன் உள்ளார். ஏனையவர்களின் மூவர் புலிகளின் சாவொறுப்புக்கு உள்ளானார்கள். இதில் சம்பந்தப்பட்டமுக்கியமானவர் டெலோ மாமா என்றழைக்கப்படும் கோவிந்தன் கருணாநிதி லண்டனுக்கு தப்பியோடி அங்கே மரணமடைந்தார். இவர் ஜனாவின் உடன்பிறந்த சகோதரர். இக் காலப்பகுதியில் மட் / அம்பாறை கட்டளைத் தளபதியாக இருந்தவர் ஜனா.

இதனை விட குருசாமி என்ற போராளியை உலக்கையால் அடித்தும்,கலா என்ற போராளியை மண் வெட்டியால் தாக்கியும் கொன்றார் என்ற குற்றச்சாட்டும் ஜனாவில் உள்ளது.

ஈ. பி. ஆர். எல். எப் பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும், புளொட் டில் சித்தார்த்தன் தனும் தலைவர்களாக இருந்தபோதும் நேரடியாக அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லக்கூடியளவுக்கு சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லை . ஜனாவின் நிலைஅவ்வாறில்லை. இதனால்தான் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது எந்தக்காலத்திலும் ஜனாவை உள்வாங்கக்கூடாது என டெலோவிடமும் அதேபோல் இரா. துரைரத்தினத்தை இணைக்க கூடாதென்று ஈ பி ஆர் எல் எப் விடமும் வலியுறுத்தப்பட்டது. இந்த விடயங்கள் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரான அரியநேந்திரனுக்கு மிக நன்றாக தெரியும். அவ்வாறிருந்தும் தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழை ஏற்படட்டும் என்றே சாணக்கியனுக்கு எதிராகவும் ,ஜனாவுக்கு ஆதரவாகவும் செயற்பட்டார் அவர்.

போரதீவு பிரதேசபையிலும் ஒரு விடயம் நடைபெற்றது. ஒரு நிர்வாகி தனக்குத் சரியென தெரிந்தவற்றை தற்துணிவுடன் செயற்படுத்த வேண்டும். சில விடயங்கள் தொடர்பாக தவிசாளருக்கும் சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் என்ற உறுப்பினருக்குமிடையே அபிப்பிராய பேதம் ஏற்பட்டது.எனக்குள்ள அதிகாரத்தின் படி நான் இப்படி செய்தேன் என தவிசாளர் துணிந்து சொல்லலாம். ஆனால் இவரோ “ஜனா அண்ணர் இப்படித்தான் சொன்னார்; நான் செய்தேன்; இதுசம்பந்தமாக தேவையென்றால் ஜனா அண்ணருடன் கதைக்கவும் ” என தன்னிடம் சொன்னதாக குறிப்பிட்ட உறுப்பினர் தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியாகின. ஏற்கெனவே ஜனா வினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அந்த உறுப்பினர் ஒரு முன்னைநாள் போராளியும் கூட கயல்ராஜ் “ஜனாவை எந்தக் காலத்திலும் கூட்டமைப்புக்குள் இணைக்கக்கூடாது” என புலிகளின் மட்டக்களப்பு த் தலைமை சொன்ன விடயமும் அவருக்குத் தெரியும்.

இருந்தாலும் அவர் தவறான முடிவெடுத்தார். ஒரு கட்சியைச் சேர்ந்தவர் என்ற வகையில் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கவேண்டும். இல்லையேல் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். எதிர்த்து வாக்களிப்பது கட்சி விரோதமான செயல் இதற்காக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென மட்டு. அம்பாறை விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட் ட திரு. பொன். செல்வராஜா தலைமைக்கு அறிவித்தார்.கட்சிக்கு விரோதமாக அல்லது தன்னிச்சையாக செயற்பட்டதற்காக நடவடிக்கை எடுப்பதாயின் பல தடவை சுமந்திரன் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இப்போது இந்த உறுப்பினர் மீது நடவடிக்கை எடுத்தால் கிழக்குத் தேசியவாதிகளான தம்பையா கோபாலகிருஷ்ணன், ஞானம், அழகு குணசீலன் போன்றோர் பார் பார் வடக்குக்கு ஒரு நீதி; கிழக்குக்கு ஒரு நீதி என உரத்துச் சொல்வார்.

கறையான் அரிப்பதைப்போல தமிழரசுக்கட்சியை ஜனா அரிப்பதை புரிந்து கொள்ளவேண்டும். மட்டு. மாநகர சபை பாதீட்டை ஆதரிக்க நடைபெறவுள்ள கலந்துரையாடலில் சாணக்கியன் கலந்துகொள்ள முடியாது. என டெலோ தரப்பால் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

சாட்சிகாரனின் காலில் விழ்வதைவிட சண்டைக்காரனின் காலில் வீழ்வது பரவாயில்லை. எனச்சொல்லவர்கள். ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை உங்கள் நிபந்தனைகளை ஏற்கமுடியாது என தெளிவாக சொல்ல வேண்டும் தமிழரசுக்கட் சி. அள்ளுவரை விட கிள்ளுவரோடுதான் காலம் தள்ள முடியாது என்று சொல்வார்கள். அள்ளுவார் என்பது பிள்ளையான் போன்றோர். அவர்கள் குறிப்பிட்ட வாக்குகளை அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள் . கிள்ளுவார் என்பது டெலோ. கொஞ்சம் கொஞ்சம் மாக கட் சியை அழித்தே விடுவர். துணிந்து முடிவெடுக்குமா தமிழரசுக்கட்சி ?


 

https://www.meenagam.com/கிழக்கில்-தமிழரசை-வழித்த/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.