Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் TMVP இருக்கும் வரை ஜனநாயகத்தை சல்லடை போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழைச்சேனையில் நடந்தது தான் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் TMVP இருக்கும் வரை ஜனநாயகத்தை சல்லடை போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. வாழைச்சேனையில் நடந்தது தான் என்ன?

  • December 12, 20203:51 pm

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் யசோதரன், தலைமை தவிசாளரான சோபா ஜெயரஞ்சித்தை கட்டிப் பிடித்ததாக பேசப்பட்ட விடையத்தின் உண்மை என்ன எதற்காக அந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதை பற்றியே இந்த பதிவு விழித்து நிற்க போகிறது.

கோறளைப்பற்று பி.சபை 23 உறுப்பினர்களைக் கொண்ட சபை. இந்த சபையை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூ.கட்சி-6, த.ம.வி.பு-6, ஸ்ரீமுக-3, ஐ.தே.கட்சி-3, ஸ்ரீலங்கா சு.கட்சி-2, த.ஐ.ம.கட்சி-1, கொடி சின்னம்-1 ஏனைய கட்சி-1 மொத்தமா 23 ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில், த.ம.வி.பு.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த ஏனைய கட்சி உறுப்பினர்களை கொண்டு சபையின் ஆட்சி நகர்ந்த நிலையில்.

புதிய ஆண்டுக்கான வரவுசெலவு திட்டக் கூட்டத்தை நடத்தும் காலகட்டத்தினை எட்டிய தருணம், த.ம.வி.பு.கட்சி பின்னடைவை சந்திக்கும் நிலைமை உருவாகிய போது புதிய வரவுசெலவுக்கு எதிராக வாக்களிக்க பல கட்சிகளிலிருந்து 15 உறுப்பினர்கள் ஒன்றிணைந்தை அறிந்த த.ம.வி.பு.கட்சி, கூட்டத்தை தொடர்ந்து ஏதோவொரு காரணத்தைக் காட்டி தள்ளிப்போட்டுக் கொண்டு வந்த போது.

தங்களின் கட்சி தோல்வியடையும் என ஊகித்த த.ம.வி.பு.கட்சி, சக உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்க மறைமுகமாக ஓர் திட்டத்தை தீட்டியதும், அதில் விலைபோன உறுப்பினர்கள் மு.காங்கிரஸை சேர்ந்த இம்தியாஸ், கபூர் இருவரும், ஐ.தே.கட்சியின் தைப் மாஸ்டர். ஸ்ரீலங்கா சு.கட்சி உறுப்பினர் சுதர்சன். தையல் மிசின் (கருணா அவர்களின் கட்சி உறுப்பினர்) கதிரவன் என 5 உறுப்பினர்களுக்கும் தலா 25 லட்சம் கொடுத்து மொத்தமா 1 கோடியே 25 லட்சத்திற்கு த.ம.வி.பு.கட்சி உறுப்பிபானர்களை வாங்கியுள்ளது.

மொத்தமாக 11 உறுப்பினர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்ட த.ம.வி.பு.கட்சி வரவுசெலவை வெல்ல வேண்டுமென்றால், இன்னொரு உறுப்பினரை சேர்த்துக் கொள்ள வேண்டிய தேவையிருந்த நிலையில், உபதவிசாளரான யசோதரனை நாடிய போது அவர் ஏற்க மறுத்த காரணத்தால், யசோதரனை பழிவாங்க த.ம.வி.பு.கட்சி உயர்மட்டக் குழு காயை நகர்த்த ஆரம்பித்தது.

இதே வேளை 11 உறுப்பினர்களைக் கொண்ட மாற்றைய கட்சியோடு சேர்ந்த 6 ஆசனங்களைக் கொண்ட த.தே.கூ.கட்சிக்கு உபதவிசாளர் வாக்களித்தால், வரவுசெலவு திட்டம் தோல்வி அடையும் நிலைமை அறிந்த போது த.ம.வி.பு. கட்சிக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் உபதவிசாளரை பழிவாங்க தொடங்கியது.

உபதவிசாளரான யசோதரனை கைது செய்தால் ஓர் தீர்வு கிடைக்குமென திட்டம் தீட்டிய த.ம.வி.பு.கட்சி, யசோதரன் மீது பழைய வழக்கொன்றை காரணம் காட்டி வரவுசெலவு கூட்டம் நடத்தும் தினமான அன்று பிரதேச சபையின் நுழைவாயிலில் கைது பண்ண திட்டம் தீட்டியது த.ம.வி.பு.கட்சி.

அதேவேளை வரவுசெலவு கூட்டம் நடைபெறும் தினத்துக்கு முதல் நாள் வாழைச்சேனை போலீசார், யசோதரனை குறித்த திட்டமிடலில் ஊடாக கைது பண்ண யசோதரனின் ஊரான சந்திவெளிக்கு சென்றுள்ளது. அப்போது யசோதரன் தரப்பினர் போலீசாரிடம் சொன்ன விடையம் சந்திவெளி ஏறாவூர் பிரதேசத்துக்கானது நீங்கள் எப்படி கைது செய்வீர்கள் எனவும், சொல்லப்படும் வழக்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் யசோதரனின் மனைவி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

விடையத்தை அறிந்து கொண்ட யசோதரன் தனது வாக்கினை வரவுசெலவு கூட்டம் நடக்கவிருக்கும் தினத்தில் ஜனநாயகம் நிலைக்கு வகையில் அளிக்க வேண்டியதால் அன்றிரவு யசோதரன் வேறு ஒரு ஊரில் சகோதர இனத்தவரின் வீட்டில் தலைமறைவாகியிருந்தார்.

வரவுசெலவு கூட்டம் நடைபெறும் தினமான அன்று த.ம.வி.பு.கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் காலை 7.30 மணிக்கு முதலே சபையில் பிரசன்னமாகியிருந்த நிலையில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டீருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் 8 மணிக்கு சபைக்கு வந்த போதும், சபையின் இரு முன் படலைகளும் மூடப்பட்டிருந்ததோடு, சபைக்குள் யாரையும் அனுமதிக்காது அச்சுறுதல் விடுக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. சபைக்கு வந்த ஏனைய பெண் உறுப்பினர்களும் நுழைவு வாயிலிலே நின்று கொண்டீருந்த வேளை,

சுமாரகா 8.45 மணியளவில் சேயோன் என்னும் பிரதேச சபை உறுப்பினர் சபைக்கு வந்த போது உறுப்பினர்கள் வெளியே நிற்பதை பார்த்து, என்ன பிரச்சனை என விசாரித்த போது அங்கு நின்ற உறுப்பினர்கள் விடையத்தை சொல்ல, தனது துணிவில் தான் கேட்டை தள்ளி விட்டு உள்நுழைந்தார்கள்.

சபைக்குள் சென்று பார்த்த போதுதான் தெரிய வந்தது அவர்களின் 11 உறுப்பினர்களும் கூட்டங்கள் நடைபெறும் இடத்தில் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்த மாற்று அணிகள் யோசிக்க தொடங்கியது. சற்று நேரத்தில் கூட்டம் ஆரம்பமாகவிருக்கும் தருணத்தில் யசோதரன் மட்டுமே சபையமர்வுக்கு வரவில்லையென அறிய முடிந்தது. யசோதரன் முன் கேட்டால் வந்தா போலீசார் கைது செய்யும் ஏற்பாடோடு யசோதரனுக்கு அடிக்கவும் ஆட்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டீருந்தது.

சபையில் அமர்ந்திருந்த தவிசாளர் அவர்களுக்கு போன் அழைப்பொன்று வரவும் வெளியே சென்றார். யசோதரன் வராத விடையத்தை அறிவித்திருக்கும் போது தான், முன் கேட்டால் வந்தால் கைதாகும் விடையத்தை முன்பே அறிந்திருந்த யசோதரன், தபால் அலுவலகத்திற்கு பின்னால் உள்ள சபைக்கு சொந்தமான தோட்டத்துக்குள்ளால் யசோதரன் சபைக்குள் ஓடிவருவதை கண்ட வேலையாள்,
தவிசாளருக்கு அறிவிக்கவும், ஓடி வந்த உபதவிசாளரான யசோதரனை தவிசாளர் கட்டிப்பிடித்து “இந்தா வந்திட்டான் இவனுக்கு அடிங்கடா” என யசோதரனை அடிக்கும் படியே கூறி தவிசாளர் அவ்விடத்தில் கட்டி பிடித்துக்கொண்டு நிற்க, பலரும் ஓடிவந்து இருவரையும் பிரிக்கும் முயற்சியின் போதுதான், தவிசாளரை இம்தியாஸ் எனும் உறுப்பினர் இழுத்தெடுக்கும் போதுதான் அவரின் சட்டை கிழிஞ்சதே தவிர, அவர்கள் சொல்லும் விடையம் எதுவும் நடக்கவில்லை என பலரும் சொல்லும் போது, தங்களின் கட்சியின் தேவையை நிறைவேற்றவே உபதவிசாளர் மீது தவிசாளர் சோபா ஜெய்ரஞ்சித் இவ்வாறு பொதுவெளியில் அசிங்கமா நடந்து கொண்டார். இதுவும் அரசியல் பிழைப்புக்கான ஓர் திட்டமிடலே அன்றி வேறில்லை.

தங்களின் தேவையை நிறைவேற்ற தடையாக இருந்த உபதவிசாளர் யசோதரன் மற்றும் வாசுடீன் மீது வீண்பழிபோட்டு கைது செய்ததோடு புதிய ஆண்டுக்கான தங்களின் வரவுசெலவு திட்டத்தை ஜனநாயகம் அற்ற பணநாயகத்தால் இன்று வென்றிருப்பது த.ம.வி.பு.கட்சிக்கு வாக்களித்த நபர்களுக்கே பெரிய அசிங்கம்.

இந்த சம்பவங்களை சபையில் உள்ள CCTV காணொளியை பார்வையிட முடியாது, ஏனென்றால் தவிசாளர் அறையில் தான் CCTV கட்டுப்பாடு பொருத்தப்பட்டீருக்கின்றது. அவர் தான் அதை ஓfப் பண்ணியிருப்பார். அதற்கு என்ன ஆதாரம் என நீங்கள் யாராவது கேட்டால், இரவு வேலை செய்த CCTV எப்படி சம்பவம் நடைபெற்ற தினமான காலை ஓfப் ஆனாது? இந்த CCTV கமெரா காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளே ஓfப் பண்ண பட்டிருக்கிறது. அதாவது தவிசாளர் சபைக்கு வருகை தந்தவுடனேயே ஓfப் பின்னப்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்னும் ஒன்றை கிழக்கில் சல்லடை போட்டு தேடினாலும் TMVP கட்சி இருக்கும் வரை கண்டு பிடிக்க முடியாது.

 

https://www.meenagam.com/கிழக்கில்-tmvp-இருக்கும்-வரை/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.