Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், முஸ்லிம் கட்சி வேட்பாளர்களுக்கு இடமில்லை - லக்ஷ்மன் கிரியயெல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ்  எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.  அவர்கள் தேர்தலுக்குப் பின்னர் விரும்பினால் எம்முடன் இணைந்து செயல்படலாம்  என எதிர்க்கட்சிகளின்  பிரதம கொறடா  பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/96666/luxman.jpg

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்து பாரிய காட்டிக்கொடுப்பை செய்துள்ளனர். அதனால் எதிர்காலத்தில் இந்த கட்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட இடமளிக்கக்கூடாது என்ற பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்காக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியலமைப்பின் 20ஆவது  திருத்தத்துக்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. என்றாலும் தேர்தலில் எம்முடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அவர்கள் வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களை எமது கட்சியில் இருந்து நீக்குவதில் சட்ட பிரச்சினை இருக்கின்றது. எமது கட்சி உறுப்பினரை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கி இருக்கின்றோம்.

அத்துடன் 20வது திருத்தத்திற்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன்  ஆகியோர் அவர்களின் கட்சி அரசியல் பீடத்தில் இது தொடர்பாக தீர்மானம் எதனையும் மேற்கொண்டிருக்காததால், அவர்களாலும் 20க்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிருக்கின்றது.

 அதனால் தொடர்ந்து இவ்வாறு இடம்பெறுவதை  தடுக்கும் வகையில் இந்த கட்சிகளுக்கு எதிர்காலத்தில் எமது கட்சியில் வேட்புமனு வழங்கக்கூடாது என்ற பிரேரணையை கட்சிக்கு முன்வைத்திருக்கின்றேன்.

எம்முடன் எப்போதும் இணைந்து செயற்படும் தமிழ், முஸ்லிம் அரசியலவாதிகளை உறுதிப்படுத்திக்கொண்டு, அவர்களை எமது கட்சியின் வேட்பாளர்களாக இணைத்துக்கொண்டு, அவர்களை மாத்திரம் எமது கட்சி வேட்பாளர்களாக நியமிக்கவேண்டும். தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எமது கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெறிபெற்ற பின்னர், பாராளுமன்றத்தில் தீர்மானமிக்க சந்தர்ப்பங்களில்  கட்சியை காட்டிக்கொடுத்த பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து செயற்பட முடியாது. 

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் நீண்டகாலமாக பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றன. அதனால் தொடர்ந்தும் இந்த கட்சிகளின் பிணையக்கைதியாக இருப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை. 20 வருடமாக மேற்கொண்டுவந்த குருட்டுத்தனமான செயலை இதன் பின்னர் கட்சி மேற்கொள்ளாது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் அமுலில் இருந்தால், முஸ்லிம் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை சாதாரண தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும். ஆனால் 20ஆவது திருத்தம் காரணமாக முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு  ஆளாகி இருக்கின்றனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தம் இன்று அவர்களுக்கே அது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

நாட்டுக்கு பாதிப்பான ஏகாதிபத்திய அரசியல் அமைப்பொன்றை கொண்டுவர ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக பொய்யான எதிர்ப்பை காட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் இவ்வாறான இரட்டைவேட அரசியலுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தில் இருந்து பாரிய எதிர்ப்பு வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றார்.

ஐ.ம.ச. வேட்புமனுவில் தமிழ், முஸ்லிம் கட்சி வேட்பாளர்களுக்கு இடமில்லை - லக்ஷ்மன் கிரியயெல்ல | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் அமுலில் இருந்தால், முஸ்லிம் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை சாதாரண தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும். ஆனால் 20ஆவது திருத்தம் காரணமாக முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு  ஆளாகி இருக்கின்றனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தம் இன்று அவர்களுக்கே அது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

நாட்டுக்கு பாதிப்பான ஏகாதிபத்திய அரசியல் அமைப்பொன்றை கொண்டுவர ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக பொய்யான எதிர்ப்பை காட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் இவ்வாறான இரட்டைவேட அரசியலுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தில் இருந்து பாரிய எதிர்ப்பு வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றார்.

இதை ஒருக்கால் காத்தான்குடி கல்முனையில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டி விடுங்கோ.....

2 hours ago, alvayan said:

 

இதை ஒருக்கால் காத்தான்குடி கல்முனையில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டி விடுங்கோ.....

போஸ்டர் அடித்து ஓட்டினால் என்ன , ஒடடவிடடால் என்ன. இந்த ஜென்மத்தை எந்த காலத்துக்கும் நம்ப முடியாது.

இப்போது சிங்கள கட்சிகளுக்கு எப்படி சிங்கள வாக்குகளை கவர வேண்டுமென்ற பிரச்சினை இருக்கிறது. எனவே இவர்களும் அப்படியான முஸ்லீம் , தமிழ் காட்சிகளை ஒதுக்கிவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை இருக்கிறது.

இருந்தாலும் இந்த முஸ்லிம்களின் தேவைப்பாடு நிச்சயம் சிங்கள கட்சிகளுக்கு வரும்  இதே தேர்தல் முறைமையை பின்பற்றினால். 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.