Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயர் நீதிமன்ற, கட்டட வளாகத்தில் தீ விபத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து! | Athavan News

உயர் நீதிமன்ற கட்டடத்தில் தீ விபத்து – tiktamil

உயர் நீதிமன்ற தீ விபத்து தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் வௌியிட்ட அறிக்கை!

உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து! | Athavan News

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து!

உயர் நீதிமன்ற, கட்டட வளாகத்தில் தீ விபத்து!

 

கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் 09 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Update: உயர் நீதிமன்ற கட்டட வளாகத் தீ கட்டுப்பாட்டில்!

கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளர்.

http://athavannews.com/உயர்-நீதிமன்ற-கட்டட-வளாக/

  • கருத்துக்கள உறவுகள்

உயர் நீதிமன்ற தீ விபத்து – விசாரணை நடத்த 3 பொலிஸ் குழுக்கள் நியமனம் – காணொளி

 

990.jpgகொழும்பு – உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

உயர்நீதிமன்றத்தில் கட்டிடத்தில் இன்று மாலை பாரிய தீ பரவியிருந்தது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 9 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

 

https://thinakkural.lk/article/98279

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

உயர் நீதிமன்ற தீ விபத்து – முக்கிய ஆவணங்கள் சேதமடையவில்லை – 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை

992.png
 22 Views

கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டடவளாகத்தில் நேற்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஆவணங்கள் சோதமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தீபத்து குறித்து விசாரிக்க 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தீயால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்துக்கோ அல்லது கோப்புக்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருள்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என்று நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான கட்டடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ளது. இதற்கமைய இந்தத் தீ விபத்து மூலம் பாதிக்கப்பட்டது

சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலைமாத்திரமேயாகும். இந்தத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் வெளியாகவில்லை. இது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரசின் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றுள்ளது.

இதேவேளை, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணை செய்ய மூன்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் உடனடியாக அங்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

 

https://www.ilakku.org/?p=37354

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.